Feed Item
·
Added a post

ஜப்பானின் கியூ ஷீராட்டகி என்கிற ஊரில் தினமும் ஒரே ஒரு ரயில் மட்டும் வந்து செல்லும் ரயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த ரயில் நிலையத்துக்கு போதிய பயணிகள் வராததால் ஜப்பானிய ரெயில்வே அந்த ரயில் நிலையத்தை 2015 ம் ஆண்டு உடனடியாக மூடி விட முடிவு செய்தது.

ரயில் நிலையத்தை மூடும் முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கன ஹரதா என்கிற ஒரே ஒரு பள்ளி மாணவி மட்டும் தினமும் கியூ ஷிராட்டகி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 35 நிமிடங்கள் பயணம் செய்து மற்றுமோர் ரயில் நிலையத்தை அடைந்து அதன் பின் பள்ளிக்கு செல்வதாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக ரயில் நிலையத்தை மூடினால் மாணவியின் உயர்பள்ளி படிப்பு பாதிக்கும் என்பதால் அந்த மாணவியின் படிப்பு முடியும் வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் அந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்து படிப்பு முடிந்த பின் மூடியது ஜப்பானிய ரயில்வே..!!

பொதுவாக ஜப்பானிய மக்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். அது போல விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • 1526