Feed Item
·
Added a post

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

இது அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால், 8 கிராம்தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!

ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.

அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.

இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்.

ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.

ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம்.

யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள்

ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ?

நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?

பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ?

கணக்கு போட்டு பாருங்கள்.

1 கிராம் தங்கம் ரூ. 4760/-

8 கிராம் தங்கம் ரூ. 38,080/-

1 கிராம் செம்பு - 4.80

1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-

6.5 கிராம் தங்கம் - 30940/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு

அடக்கவிலை-30940+7.2=30947.2/-

1 பவுனுக்கு தங்கத்தில் - 38080 - 30940

லாபம்= 7140

சேதாரம் 1.5 கிராம் = 7140/-

1 பவுனுக்கு மொத்த லாபம் 14280

என்ன தலை சுத்துதா ?

எனக்குள் இது ஆதங்கம்.

ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள உள்ளங்களே ................

உங்கள் ஆதங்கத்தை காட்ட உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தவறாமல் share செய்யவும்.

  • 396