Feed Item
·
Added a post

பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ஊர்மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டுதங்கநாணயத்தைத் திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான். அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசி கொண்டே இருந்தான்.

அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார், மன்னர் ஆண்குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க நாணயங்களைக் கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்னான்.

உடனே மன்னன் குறுக்கிட்டு, " இல்லை இல்லை எனக்கு ஆண் மகவு பிறந்ததற்காக நான் தங்க நாணயங்கள் கொடுக்கவில்லை. எனக்கு பாடம் நடத்தி என்னை நல்லவனாகவும் ,புத்திசாலியாகவும் ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்.அவர் என் மகனையும் மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற மகிழ்ச்சியில் தான் இந்த பொற் காசுகளைஅள்ளி அள்ளித் தூவுகிறேன் என்று சொன்னான்.  

பிலிப் மன்னன் சொன்னபடி பிற்காலத்தில் மிகப் பெரும் அறிவாளியாக உருவெடுத்த வந்தான் பிலிப் என்ற மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர்.

சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிகச்சிறந்த ஒருவனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்.

ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் அவன் நம்பிக்கையைக் காப்பாற்றினார். 

  • 384