Feed Item
·
Added a news

காசாவில்  மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.

காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் - அவ்டா பாடசாலையை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலின் போது சுமார் 2,000 பேர் பாடசாலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் காசாவில் தாக்கப்பட்ட 4ஆவது பாடசாலை இதுவாகும்.

இந்தத் தாக்குதலை மோசமான கொலை எனத் தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகம், உயிரிழந்த 29 பேரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 705