இரண்டு சிறுவர்கள் தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை திருடி ஒரு சாக்கில் கட்டி கொண்டு அருகில் இருந்த சுடுகாட்டில் வைத்து பங்கு பிரிக்கலாம் என்று அங்கு இருந்த கேட்டை தாண்டி குதித்தனர்.
அப்பொழுது சாக்கில் இருந்து இரண்டு மாம்பழம் கீழே விழுந்தது. ஒருவன் சொன்னான் விடு வரும்போது எடுத்து கொள்ளலாம் என்று......
உள்ளே போய் அமர்ந்து பங்கு போட ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது அங்கே ஒரு குடிகாரன் குடித்து கொண்டு இருந்தான்.
இவர்கள் மறைவான இடத்தில் அமர்ந்து பங்கு போட ஆரம்பித்து இருந்தனர்.
உனக்கு ஒன்று எனக்கு ஒன்று ! என்று.
முழு போதையில் இருந்தவன் பேய் தான் பேசுது என்று அடித்து பிடித்து பக்கத்தில் இருந்த சர்ச்சுக்கு போய் அங்கு இருந்த பாதிரியாரிடம் , ஃபாதர் சீக்கிரம் வாங்க அங்கே இரண்டு பேய் பங்கு போட்டு கொண்டு இருக்கு என்று.
ஃபாதரும் சரி என்ன தான் நடக்கிறது என்று பார்க்க அவனுடன் போனார்.
கேட்டை திறந்து உள்ளே போனவர்.................
சட்டென்று நின்றார்.
பங்கு போட்டு முடித்து இருந்தார்கள்.
ஒருவன் கேட்டான் அப்ப கேட்டில் இருக்கும் இரண்டு..........
உடனே அடுத்த பையன் சொன்னான்........... உனக்கு ஒண்ணு எனக்கு ஒண்ணு! என்று.................
அவ்வளவுதான் இப்ப ஃபாதர் தலை தெறிக்க ஓட ஆரம்பித்து இருந்தார்,
- 398