Feed Item
·
Added a post

வரலாற்றில் இன்று வைகாசி 15

1610: பிரான்ஸில் 4 ஆம் லூயி மன்னன் படுகொலை செய்யப்பட்டதையடுத்து 13ஆம் லூயி ஆட்சிக்கு வந்தார்.

1643: பிரான்ஸில் 4 வயதான 16 ஆம் லூயி மன்னராக முடிசூடப்பட்டார்.

1796: எட்வட் ஜென்னரால் சின்னம்மை நோய்கக்hன தடுப்பூசி ஏற்றப்பட்டது.

1870: நியூஸிலாந்தில் முதலாவது றக்பி விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

1879: இந்தியாவிலிருந்து பிஜிக்கு அழைத்து செல்லப்பட்ட 463 தொழிலாளர்களின் முதல் தொகுதியினர் பிஜியை சென்றடைந்திருந்தனர்.

1940: ஜேர்மனியிடம் நெதர்லாந்து சரணடைந்தது.

1948: இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது. இப்பிரகடனத்தையடுத்து இஸ்ரேல் மீது அரபுநாடுகள் தாக்குதலை ஆரம்பித்தன.

1955: 8 கம்யூனிஸ நாடுகள் இணைந்து வார்ஷோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1963: ஐ.நாவில் குவைத் இணைந்தது.

1973: அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையமான ஸ்கைலாப் ஏவப்பட்டது.

1976 – உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.

1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.

1991 – எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.

1996 – ஈழப்போர்: இலங்கைப் படைத்துறை யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது.

2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.

2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2008 – கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது.

2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.

2013 – ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.

  • 451