Feed Item
Added a news 

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே பொலிசாரால் நேற்று (24) இரவு வளைக்கப்பட்டது.

இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 அழகிகளும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். 0777xxxx27 , 077xxxxx13 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக குறித்த விடுதியில் அழகிகளை ஒப்பந்தம் செய்து மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்றோர் அங்கு சென்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

  • 177