Feed Item
Added a post 

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடும் முரண்பாடுகள் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்த நிலையில் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திருகோணமலையில் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

முன்பதாக குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட இருந்ததாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 453