Feed Item
Added a post 

1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர்.

1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

1922 – சோவியத் அரசு தெற்கு ஒசேத்திய தன்னாட்சி வட்டாரத்தை ஜோர்ஜிய சோவியத் சோசலிசக் குடியரசில் அமைத்தது.

1939 – இட்லரின் 50வது பிறந்தநாள் செருமனியில் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது.

1945 – வடக்கு செருமனியில் நியூரென்காம் வதை முகாமில் மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 20 யூத சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனியின் லைப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்குக் கையளித்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லைப்சிக் நகர முதல்வர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.

1945 – இட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.

1946 – உலக நாடுகள் சங்கம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு வழங்கப்பட்டன.

1961 – பனிப்போர்: கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பன்றிகள் விரிகுடா படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.

1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் உயிரிழந்தனர்.

1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் உயிரிழந்தனர்.

1972 – அப்பல்லோ திட்டம்: யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.

1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.

1986 – இலங்கை, கிழக்கு மாகாணத்தில் கந்தளாய் அணை உடைந்ததில் 120 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

1998 – கொலம்பியாவில் பொகோட்டா நகரில் ஏர் பிரான்சு போயிங் விமானம் மலை ஒன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 53 பேரும் உயிரிழந்தனர்.

1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.

1999 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – அமெரிக்காவின் இயூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.

2012 – பாக்கித்தான், இஸ்லாமாபாத் நகரில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் குடிமனைகள் உள்ள பகுதியில் விமானம் வீழ்ந்ததில் 127 பேர் உயிரிழந்தனர்.

2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2015 – சோமாலியா, புந்துலாந்து பகுதியில் ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்

  • 687