Feed Item
·
Added article

சிம்ரன் நடிப்பில் வெளி வந்த நேருக்கு நேர், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், பஞ்சதந்திரம், நியூ, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் திரை உலகம் உள்ள வரை இவர் பெயர் சொல்லும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

சினிமாவில் பீக்கில் இருந்த போதே இவர் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கும் இவர் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள் என சொல்லலாம். இதற்கு காரணம் ஈரம் சொட்ட சொட்ட நனைந்து இருக்கும் கருப்பு உடையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறார் என்பதை நீங்கள் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

காரணம் எல்லா சாமானிய பெண்களும் செய்யக்கூடிய விஷயத்தை தான் இவரும் செய்திருக்கிறார். அதுவும் நீச்சல் குளத்தின் அருகில் இவர் செய்திருக்கும் விஷயம் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரம் சொட்டும் டைட்டான உடையில் கையில் குச்சியோடு மாமரத்தில் இருக்கும் மாங்காவை வேகமாக அடித்து கீழே தள்ளிய மாங்காவை எடுத்து சிரித்த படி நீச்சல் குளத்தில் இருக்கும் தன் மகனிடம் கொடுத்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல குறி பார்த்து தான் அடிச்சிருக்காங்க.. என்ற வார்த்தைகளை போட்டு சிம்ரனை பங்கமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

  • 547