Feed Item
·
Added a news

மத்திய பிரதேசம் மாநிலத்தின் அகர் மாவட்டத்தில் உள்ள மகாரியா கிராமத்தை சேர்ந்தவர் 80 வயதான பலுராம் பக்கிரி. இவருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்த 34 வயதான ஷீலா இங்கிள் என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது காதலாக மாறிய நிலையில் பலுராமை வயது வித்தியாசம் பார்க்காமல் கரம் பிடித்துள்ளார் ஷீலா இங்கிள். இருவரது விருப்பத்தின்படி நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடந்துள்ளது. காதலுக்கு கண் இல்லை என்று பொதுவாக பழமொழி சொல்வார்கள். ஆனால் இந்த காதல் கதை ‘காதலுக்கு வயதும் பொருட்டில்லை’ என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

  • 678