Feed Item

தனது 20 வயது மகனுக்கு பல பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவனை அடிமையாக்கி தனது பாலியல் தேவைகளுக்காக அயல் வீட்டு பெண்மணி பயன்படுத்தி வருவதாக வறக்காகொடப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இத்தாலியில் நீண்டகாலமாக வசித்து வந்த 46 வயதான திருமணமாகாத சிங்களப் பெண் ஒருவர் மீதே மகனின் தாய் முறைப்பாடு கொடுத்துள்ளார். தனது மகன் க.பொ.த உயர்தரப்பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவுள்ளார். இந் நிலையில் அயல்வீட்டில் வசிக்கும் பெண் தனது மகனுக்கு ஐ.போன் மற்றும் பல பரிசுப்பொருட்களை கொடுத்து அவனை தனது இச்சைகளுக்க பயன்படுத்தி வருகின்றார். குறித்த பெண்ணுடனான தொடர்பை நிறுத்துமாறு தான் மகனை வற்புறுத்திய போது மகன் தன்னையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அப் பெண்ணுடனேயே தங்கியுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து தனது மகனை தன்னிடம் மீட்டுத் தரும்மாறு குறித்த தாய் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாக சிங்கள சமூகவலைத்தளம் செய்தி வெளியியிட்டுள்ளது.

  • 981