Feed Item
Added article 

சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற பேச்சு இணைய பக்கங்களில் பேசப்படுகிறது. அது உண்மையா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா துரதிஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. இதுவரை இயற்கைக்கு நேரான உடலுறவு தான் நான் வைத்திருக்கிறேன். ஓரினச்சேர்க்கை என்பது எனக்கு இதுவரை தோன்றியது கிடையாது. அதை பற்றி சிந்தித்து கூட நான் பார்த்தது கிடையாது எனக் கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.

இங்கே விஷயம் என்னவென்றால் நடிகை ஓவியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆனாலும், நான் இயற்கைக்கு நேரான முறையில் உறவு கொண்டு வந்திருக்கிறேன் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதற்கு முன்பாக பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார் எனவும் பணக்கார இளைஞர்களுடன் அடிக்கடி நைட் பார்ட்டி மற்றும் தவறான வேலைகளில் ஈடுபட்டு கர்ப்பமாகி விட்டார் எனவும் கருவை கலைக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் தான் கடுமையான உடல் எடை குறைந்து விகாரமான தோட்டத்திற்கு மாறிவிட்டார் என்றும் கூறியிருந்தார்.

அதனை நிரூபிக்கும் விதமாக மதுபான விடுதியில் மது அருந்தியப்படியே பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகை ஓவியா அதே சமயம் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்றும் இயற்கை நேரான முறையில் தான் உடலுறவு கொள்கிறேன் என்று பேசி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • 520