தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் பிரதேசத்தி ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி இன்று (04) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
வேலணை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த சிரமதானம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் குறித்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.
வேலணை பிரலதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் குறித்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
00