உங்க பிள்ளை கிட்டே,நான் எதை சொன்னாலும் அவபேச்சைகேட்காதேடான்னு தினமும்,மந்திரம் போல ஓதி சொல்லி அனுப்புறீங்களே…உங்களுக்கு வெக்கமாஇல்லை….
அவன் என் பிள்ளை…. என் பேச்சை தான் கேப்பான்….இதிலே என்ன வெக்கம்
சரியான அம்மா…நீங்க. வெட்கம்…மானம் ..சூடு…. சொரணை எதுவும் இல்லை உங்களுக்கு…. நான் எதை சொல்ல வாயை தொறந்தாலும் ரெண்டு காதையும் பொத்திக்கிறாரு….. எதையும் பேச முடியலே…
அடியே ரொம்ப ஓவாரா பேசறே….. ஒரு மாமியாரை பேசும் பேச்சா இது….
மாமியார்…….பெரியமாமியார்கொஞ்சம் கூட இங்கிதம்இல்லை…. படிப்பறிவு இருந்தா தானே……
அப்ப……என்னை அறிவுகெட்டவள் ன்னுசொல்றியா…. எல்லாம் நீ வேலைக்கு போற திமிரு…. இப்படி எல்லாம் பேச சொல்லுது உன்னை…..
பொண்டாட்டி சொல்லறதை கொஞ்சமாவது ஒரு ஆம்பிளை கேக்கணும்…. அது தான் குடும்பத்துக்கு அழகு…..
ஒரு நாளைக்கு கொஞ்சம் பேசுவே….. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா… பேசி தலையணை மந்திரம் ஓதி….அவனை எங்களிடமிருந்து பிரிப்பே…. இந்த காலாத்துபொட்ட புள்ளைங்க பத்தி தெரியாதா எனக்கு….
பாவி….. பாதகி மாமியார்…நீ…..இந்த குடும்பம் உருபடவே படாது….. ஒரு பொம்பளைக்கு இவ்வளவுஆணவம் இருக்க கூடாது…
நீ தாண்டி ஆணவகாரி…. அகந்தை எல்லாம் கலந்து வளர்த்தாங்க உங்க வீட்டுலே….
நீங்கமட்டும் உங்க பிள்ளை யை எப்படி வளர்த்தீங்கலாம்…. பொண்டாடடிஎன்ன சொல்ல வறா….. நல்லதா…. கெட்டதா…ன்னு காதை கொடுத்து கேக்கணும்…
என்னடி பெருசா நல்லது சொல்ல போறே……அந்த எண்ணம் கூட இருக்கா உனக்கு……
இந்தபாழடைந்தவீட்டுலேஇருபதாயிரம் வாடகை கொடுத்துக்கினேஇருங்க காலத்துக்கும்…. அதுவும் நீங்க படுக்குற கூடத்திலே இன்னைக்கோ நாளைக்கோ சுவர் இடிஞ்சி உங்க தலையிலே விழுற மாதிரி இருக்கு….
ஆமா.. நீ ஆபத்பாண்டாவ….நீ தான் காப்பாத்தபோறீயா…. அதான் நல்லவீடா பாக்கறேனே…. கிடைக்கலயே…
ஏன் வாடகை வீட்டுக்கு இனி போகணும்….. குடும்பத்தோடநாம எல்லாம் சொந்த வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தா….. அவர் கிட்ட பேச விடாமே செஞ்சிட்டியே…
என்னடி சொல்றே….. சொந்த வீடா…..
ஆமா…நான் வேலை செய்யுற பாங்க்குலேஹௌசிங் மேளாநடந்தது.,. எழுபதுலட்சம்ரூபாய் வட்டியி ல்லாகடன் கொடுப்பாங்க…அதை வாங்கி சொந்தமாஒரு வீடுவாங்கலாமுன்னுஅவர் கிட்ட…..டிஸ்கசன்பண்ணலாமுன்னு., பத்து நாளா ட்ரை பண்றேன்….. அவர் என்னடான்னா.. காதை மூடிக்கிறாரு…
அய்யோ ராமா…இதை என் கிட்ட மொதலில் சொல்லியிருக்ககூடாதா செல்லம்…அவனை ஏன் கேக்குறே…. நீ வாங்கு…மருமகளே…..
இப்ப முடியாது…. டைம் பார் ஆயிடிச்சி…. இனி அடுத்த வருஷ ஹௌசிங் மேளா தான்….
நான்.. பாவிடி,தங்கமே….. உன் நல்ல எண்ணத்தை புரிஞ்சிக்காமே….. என்னென்னமோ செய்துட்டேன்…. பேசிட்டேன்…..
அட விடுங்க அத்தை…. அடுத்த வருஷம் லோன் வாங்கி வீடு வாங்கினா போகுது…..