Feed Item
·
Added article

நடிகர் சசிகுமார் அவர்களின் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.

சொந்தமாக படம் எடுத்து நஷ்டப்பட்டு ஏகப்பட்ட கடன்களில் அகப்பட்டு இருக்கிறார்.

நண்பர்தான் அனைத்து வரவு செலவுகளும் அவரும் உயிரை மாய்த்துக்கொள்ள நடுக்காட்டில் தவிப்பது போல் தடுமாறி உள்ளார்.

முதல் படத்திலே தமிழ் திரையுலகை தன் திரைக்கதை புதுமையால் புரட்டிப்போட்டவர் எதிர்காலமே சூனியமாகி நின்றிருக்கிறார்.

பின் அயராத உழைப்பார் கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து மீண்டு இருக்கிறார்.

அவரின் பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்,

"எனக்கே ஏற்பட்ட இக்கட்டிற்கும்,கடனுக்கு யார் காரணமும் இல்லை முழுக்க முழுக்க நானே காரணம்!கடன் வந்துவிட்டது யார் மேலேயும் பழி போட்டு தப்பிக்க கூடாது.முதலில் நமது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் பிறகு நம் மனம் சோர்ந்து விடாமல் இதில் இருந்து எப்படி மீளப்போறோம் என யோசிக்க வேண்டும்.நான் கடன்காரர்களிடம் வலிய போன் செய்து டைம் கேட்டு அடைத்தேன்"என பேட்டியில் சொல்கிறார்.

தனக்கு ஏற்படும் இன்னல்கள்,தடைகள்,கஷ்டங்கள் என எல்லாவற்றிற்கும் யார் மற்றவர்கள் மீது பழி போடுகிறார்களோ அவர்களால் அதை கடந்து வெற்றிப்பெற முடியாது.

பொதுவாக எனக்கு காதல் தோல்வி பாடல்கள் பிடிக்காது காரணம் அந்த பாடல்களில் வரிகள் எல்லாமே என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் என புலம்பலாகத்தான் இருக்கும்.

ஆனால்,அபூர்வ சகோதரர்கள் படத்தில்,"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்"பாடல் மிகவும் பிடிப்பதற்கு காரணம்,

காதல் தோல்வி பாடல்களில் இந்த பாடல் மட்டும்தான்,"என் மேலதான் தவறு,எனக்கு அதிர்ஷ்டம் இல்லை"என காதலியை உயர்வாக சொல்லப்பட்டு இருக்கும்.

"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்"என நாயகன் பாடுவதாக வாலி எழுதி இருப்பார்.

எப்போதெல்லாம் வாழ்வில் பின்னடைவை சந்திக்கிறீர்களோ,அப்போது உங்களின் வாழ்வில் பின்னடைவுக்கு யாரும் காரணம் இல்லை நாம் மட்டும் காரணம் என எப்போது எண்ண தொடங்கிறீர்களோ அப்போதே வாழ்க்கையில் வெற்றிப்பெற தொடங்கிறீர்கள் என அர்த்தம்.

- முகநூலில் வந்தது...

  • 34