நித்ய கல்யாணியின் மருத்துவ குணங்கள்: (சுடுகாட்டுமல்லி,நயன்தாரா,சதபுஷ்பி)
நித்ய கல்யாணி செடியின் 10 வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு வகை பூக்களை காம்பு நீக்கி இதனுடன் ஒரு டம்ளர் நீரில் பனங்கற்கண்டு ,மஞ்சள், (கருஞ்) சீரகம் ,மிளகு சேர்த்து கசாயமாக்கி காலை, மாலை 50-100 மி.லி. அளவு குடித்து வரும்போது கீமோதெரபி,ரேடியேசன் தெரபி எடுத்துக் கொள்கின்ற புற்று நோயாளிகளுக்கு நல்ல துணை மருந்தாக செயல்படுகிறது.புற்று செல்கள் மற்ற செல்களுக்கும் பரவாமல் தடுக்கிறது.
நித்ய கல்யாணி பூ 5,இலை 5,வேர் 5கிராம், மிளகு 5 ,சீரகம் இவற்றை ஒரு டம்ளர் நீர் விட்டு கசாயமாக்கி குடித்து வரும்போது சர்க்கரை நோய் தணியும்.சர்க்கரை நோயினால் உள்ளுறுப்புகள் பாதிப்பாகாமல் பார்த்துக்கொள்ளும்.உயர் இரத்த அழுத்த நோயாளிகளும் தினசரி இந்த தீநீர்(கஷாயம்) குடிக்கலாம்.இரத்த அழுத்தம் குறையும்.
ஆசனவாயை சுற்றி கொப்புளங்கள் தோன்றி துளையிட்டு அதன் வழியாக மலம் வெளியேறுவது (பிஸ்ட்டுலா)போன்ற பிரச்சினை உள்ளவர்களும் இந்த தீநீர் குடிக்கலாம்.உள்புண் ஆறும்.மேலும் இந்த தீநீரை ஆர வைத்து ஆசனவாயை கழுவவும் பயன்படுத்தலாம்.வெளிப்புண்கள்ஆறும்.
நித்ய கல்யாணி வேரை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்து கசாயமாக்கி காலை,மாலை 50-100 மி.லி. குடித்துவர பல்வலி சரியாகும்.இந்த கசாயத்தை வாய் கொப்பளித்துவர பல் ஆட்டம்,ஈறுவீக்கம்,இரத்த கசிவு ,பல்வலி சரியாகும்.
எந்தவித புண்ணாக இருந்தாலும் ஆற்றக்கூடியது நித்ய கல்யாணி பூ கஷாயம்.இதன் இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தைலமாக காய்ச்சி புண்களின் மீது தடவிவர ஆறாத புண்ணும் ஆறும்.(இலையை அரைத்து பற்றாகவும் போடலாம். ) நித்ய கல்யாணி செடியின் கஷாயம் மன உளைச்சல் ,தூக்கமின்மையை போக்கும்.தேனீ கடி ,வண்டுகடி,பூச்சிக்கடிக்கு முதலுதவியாக கடித்த இடத்தை கழுவிவிட்டு இதன் இலையை அரைத்து கடிவாயில் பூசவேண்டும்.
முக்கிய குறிப்பு :-
மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு பயன்படுத்தவும். மிக சிலருக்கு இந்த கஷாயம் தலை சுற்றல் ,வாந்தி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். முதலில் சிறிதளவு சாப்பிட்டு பரிசோதித்துவிட்டு பின் பயன்படுத்தலாம். இரண்டுவித நிற பூக்களையும் மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். படித்து அறிந்தது
