நூலகத்தில் நூல்களை எடுத்துப் படிப்பதுபோல் மனிதர்களை 30 நிமிடத்துக்கு தேர்ந்தெடுத்து அவர்களின் சொந்தக் கதைகளை 30 நிமிடம் கேட்கலாம்.
The Human Library --பொதுவாக நாம் பேச முற்படாத மனிதர்களை ஒரு இடத்தில் அமர்ந்திருக்க வைத்திருப்பார்கள். இதன் பெயர் மனித நூலகம். 2000 ஆண்டில் கோபன்ஹேகன் நகரில் உருவாக்கப்பட்டது. இன்று 80 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவிலும் இருக்கிறது.இந்த நூலகத்தில் எனக்குப் பிடித்த அம்சம் நாமே எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் மற்றவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்கும் ஒரு பழக்கத்தை உருவாக்குகிறதே அதுதான்.