பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்
பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
திரைப்படம்: ஆறிலிருந்து அறுபது வரை
பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
ஆண்
: மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…
பெண்
: பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…
ஆண்
: பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…
பெண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…
ஆண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
பெண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
—
BGM
—
பெண்
: பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…
ஆண்
: நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…
பெண்
: தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…
ஆண்
: ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
ஆண்
: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
பெண்
: கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…