இந்த படத்தில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அவளது கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய வைரம் தெரியும்.
இது 254 கேரட் ஜூப்ளி வைரம் ஆகும் , இது உலகப் புகழ்பெற்ற" கோஹ் - இ - நூர் " வைரத்தின் அளவு மற்றும் எடையிலும் இரட்டிப்பாக்கும்.
இந்தப் பெண் மெஹர்பாய் டாடா , அவர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் சர் டோராப்ஜி டாடாவின் மனைவி.
1924 இல் உலகில் மந்த நிலை ஏற்பட்டு டாடா நிறுவனம் ( டிஸ்கோ ) ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாத போது , மெஹர்பாய் இந்த விலைமதிப்பற்ற ஜூப்ளி வைரத்தை இம்பீரியல் வங்கியில் ரூ 1 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
இதனால் ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பெறுவதற்காகவும், மேலும் நிறுவனம் தொடர்ந்து இயங்குவற்காகவும், அடமானம் வைக்கப்பட்டது. மெஹர்பாய் டாடா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சரியான சிகிச்சையின்றி மரணமடைந்தார். அவரது அகால மரணத்திற்கு பிறகு , சர் டோராப்ஜி டாடா இந்தியாவில் புற்றுநோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க எண்ணி இந்த வைரத்தை விற்று டாடா மெமோரியல் புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கினானார்.
அன்பிற்காகவும், மக்களின் நலன் கருதியும் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.
முரண்பாட்டைப் பாருங்கள்.. தாஜ்மஹாலை காதல் நினைவுச் சின்னமாக பெருமை படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கு நமது மக்களுக்கு உயிர் கொடுக்கும் வரலாறு உருவாகிய அடிப்படை செய்தி கூட தெரியவில்லை..?
- இணையத்தில் வெளியான தகவல்
