உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு முதலில், உங்கள் வேலையை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்க வேண்டும். ஏனென்றால், ஒருவருக்குத்தான் செய்கிற வேலை பிடிக்கவில்லை என்றால் அவ்வேலையில் ஈடுபாடு ஏற்படாது.
ஈடுபாடில்லாமல் செய்கிற வேலை எதுவாயினும் அதில் வெற்றி பெறுவது இயலாது. ஆகவே, நீங்கள் செய்கிற வேலை உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை அல்ல.
அது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. ஆம், அது ஓர் அதிசய அட்சய பாத்திரம். அதை உழைப்பு என்கிற கைகளால் எடுக்கின்றபோது வெற்றி என்கிற அமுதம் கிடைக்கும்.