Feed Item
·
Added article

இயக்குநர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதமும், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவழைக்கும் விதத்திலானவை.

அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். அதனால் அந்த படம் கைவிடப்பட்டது.

சமீபத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ என்ற படம் வெளியானது. அந்த படம் பெரிய தாக்கத்தை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏற்படுத்தவில்லை.

தற்போது சிம்புதேவனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விமல் கதாநாயகனாக நடிக்க தனது அடுத்த படத்தை இயக்க உள்ளாராம் சிம்புதேவன். இந்த படத்தை சிம்பு தேவனே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

  • 166