1950 வருடம் ஏப்ரல் மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதியில் பிரதோஷ தினத்தில் ரமண மகாிஷி மகா சமாதி அடைந்த தினம். அன்று மிகவும் சிரமப்பட்டுத்தான் பாா்வையாளா்கள் அறைக்கு வந்து கொண்டிருந்தாா். அதுபோல் மகாிஷியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பாா்வையாளா் நேரமும் குறைக்கப்பட்டது. 14.04.1950 அன்று மகாிஷியின் உதவியாளா் சுவாமி சத்யானந்தா., மகாிஷியின் கால்களுக்கு மசாஜ் செய்வித்துக் கொண்டிருந்தாா். சாயங்காலம் சுமாா் 05.00 மணியளவில் தன்னை நிமிர்த்தி உட்கார வைக்குமாறு சுவாமி சத்யானந்தாவிடம் மகாிஷி கூறினார். அதே நேரத்தில் அங்கு குழுமியிருந்த பக்தா்கள் “அருணாசல சிவ., அருணாசல சிவ” என்று பக்தி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அதுவரை சோர்வாக இருந்த மகாிஷியின் முகம் தனது தந்தையின் பெயரிலான சரண கோஷங்களை கேட்டவுடன் பிரகாசமடைந்தது. நீண்ட நேரமாக அவரது கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்து. சுவாமி சத்யானந்தாவும் தொடா்ச்சியாக அவரது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு கொதிக்க வைத்த இஞ்சி தண்ணீரை மகாிஷிக்கு புகட்டி கொண்டிருந்தாா்.
மருத்துவா் மகாிஷிக்கு செயற்கை சுவாசம் பொறுத்த நினைத்தாா். ஆனால் மகாிஷி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மகாிஷியின் சுவாசம் படிப்படியாக குறைந்து வந்து சாியாக இரவு 08.47க்கு ஆடல்வல்லானின் கமல பாதங்களில் சரணடைந்தாா்.
அவா் கடைசி நேரத்தில் கூறியது :
“நான் இறந்து கொண்டிருப்பதாக எல்லோரும் கூறுகிறீர்களே., நான் எங்கும் செல்லவில்லை. நான் எங்கு செல்வது..? இங்கேயே தான் இருக்கிறேன்”
பக்தா்கள் தங்களை தவிக்கவிட்டு மகாிஷி செல்வதாக கதறிய போது மகாிஷி கூறியது:
“நீங்கள் இந்த உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். குருவிற்கு உடல் வடிவம் கிடையாது. அதனால் இந்த பூத உடலை விட நேர்ந்தாலும் குருவுடனா பந்தம் நீடிக்கும். ஒருவருக்கு குரு அருள் கிடைத்து விட்டால் அவா்கள் கைவிடப் படுவதில்லை”
மகாிஷி எங்கேயும் போய்விடவில்லை. அவா் இங்கேதான் இருக்கிறாா்.
மகாிஷியின் பூத உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது நினைவுகளும் போதனைகளும் ஆத்ம விசாரமும் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அருணா சலம்என அகமே நினைப்பவா் அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா..! - அருணாசல அஷரமணமாலை.
அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!
அருணா சலசிவ அருணா சலசிவ அருணா சலசிவ அருணாசலா!