ஜானி படத்தில் இடம்பெற்ற ஆசைய காத்துல தூது விட்டு பாடலில் இவர் நடித்திருப்பார், இவர் யார் என தெரியுமா? தமிழ் தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்கிய ஜெயசுதா, அதாவது பாண்டியன் படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக வரும் ஜெயசுதாவின் தங்கை ஆவார்.
இவரின் பெயர் சுபாஷினி, ஜானி படத்தில் இடம்பெற்ற அந்த ஆசைய காத்துல தூதுவிட்டு பாடல் இவருக்கு அதிகம் பெயர் வாங்கிக்கொடுத்தது.
இவர் 1980ல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த கரும்பு வில் என்ற படத்தில் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பழம்பெரும் நடிகையான விஜய நிர்மலாவின் மருமகளும் இவரே. தமிழ், மலையாளம், கன்னடம், தாய்மொழி தெலுங்கில் அதிகம் நடித்துள்ளார் சுபாஷினி.
இவரை அறிமுகப்படுத்தியது இயக்குநர் ஸ்ரீதர், இவர்தான் தனது அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் சுபாஷினியை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து நட்சத்திரம் , கொண்டாட்டம், பாய்ஸ் என சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் நடித்ததில் முக்கியமான திரைப்படம் கரும்பு வில் திரைப்படம்தான். நல்ல நடிகையான இவர் தெலுங்கில் நல்ல படங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் ஸ்ரீதரால் அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் நறுக்கு சுறுக்குன்னு பெரிய பெயர் பெற்ற படங்களில் நடிக்காதது வருத்தமே. அவ்வப்போது இடைவெளி விட்டே இவர் தமி சினிமாவில் நடித்து வருகிறார்.
இன்றும் இவர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
