பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்து நிறுவன அதிபர் வீரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
அந்த வகையில் நீடா அம்பானி திருமணத்தின் முந்தைய கொண்டாட்டத்தின் போது அவர் அணிந்திருந்த ஆரம் பெரிய மரகத பச்சை கல் பதிக்கப்பட்ட நெக்லஸ் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஆரத்தின் விலை சுமார் ரூ 600 கோடி என்கிறார்கள். அது போல் நீடா அம்பானி ஒரு வைர மோதிரத்தையும் அணிந்திருந்தார்.
இந்த மோதிரம் முகலாயர் காலத்தைச் சேர்ந்தது. இதன் விலையும் ரூ 55 கோடி இருக்கும். நீடா அம்பானி அணிந்திருந்த ஆரம் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை மட்டும் கவராமல் அதை பார்த்தவர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நகையின் கவரிங்கை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கல்யாணி கவரிங் நகை கடை தயாரித்துள்ள நகை விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த நகையின் விலை ரூ 178 மட்டுமே. நீடா அணிந்திருந்ததை போல் இருந்தது. என்ன வித்தியாசம் என்றால் அவர் அணிந்திருந்தது வைரம், இவர்கள் தயாரித்திருப்பது சாதாரண கல். அதிலும் கலர் கலராக நிறைய உள்ளன. 1980களில் நதியா கம்மல், நதியா வளையல், நதியா கொண்டை என பேமஸ் ஆனதை போல் நீடாவின் ஆரமும் தற்போது பிரபலமடைந்துள்ளது.
அது சரி 600 கோடியில் நெக்லஸ் அணிய நாம் எல்லாம் அம்பானி குடும்பமா? என்ன? ஆமா 600 கோடிக்கு எத்தனை பூஜ்யம்?