கனடாவில் போதைப்பொருள் குற்றச்செயல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 12 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாறு போதைப் பொருள் குற்றச் செயல்கள் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த அளவு 2011 ஆம் ஆண்டில் பதிவான போதைப் பொருள் குற்றச் செயல்களை விடவும் 61 சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2023 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் போதைப்பொருள் குற்றச்செயல் விகிதம் 13 சதவீதம் உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
 
    
    
    
    
    
 
            
            
        
 Home
                Home
            