🌹இசை மேதை வயலின் ஜாம்பவான் குன்னக்குடி வைத்தியநாதன் ஒரு நாள் சேலம் மாநகரில் தன் இசைக்குழுவினர் உடன் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்தார்....
🌹முதல்வர் எம்ஜிஆர் இரு புறமும் கும்பிட்டு கொண்டே வர சாலை ஓரம் நின்ற அந்த பிரபலமும் கும்பிட காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி...
🌹என்ன நீங்க இங்கே என்று கேட்க நாளை சேலத்தில் எங்க குழுவினர் கச்சேரி.
நல்லது அதுக்கு ஏன் இங்கே என்று கேட்க...
🌹முதல்வர் கார் வரும் நேரம் என்று எங்கள் வாகனம் வேன் அதை ஓரமாய்
நிறுத்தி கொள்ள சொல்ல...
🌹சற்றே முகம் மாறிய முதல்வர் அருகில் பின்னால் நின்ற ஆட்சியர் அழைத்து இனி நான் எங்கு போனாலும் மற்றவர்களை நிறுத்த வேண்டாம்...
🌹இங்கே மட்டும் இல்லை
இனி எங்கேயும் தமிழ்நாட்டில் இனி இது போல கூடாது என்று அங்கேயே
தமிழக உயர் காவல் அதிகாரிக்கும் சொல்ல சொல்லி...
🌹அந்த பிரபலம் மற்றும் குழுவினர் இடம் சாரி கேட்க அனைவரும் உங்களை இவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்பே மகிழ்ச்சி என்று அந்த பிரபலம்
தவிர மற்றவர்கள் சொல்ல கூடி சாலை ஓரம் நின்ற மற்றவர்கள் அந்த பிரபலம் அவருக்கு நன்றி சொல்ல
🌹மறுநாள் சேலம் கர்நாடக தன் இசை கச்சேரியில்
🌹இதுவரை என் குழுவில் நான் திரைப்பட பாடல்கள் இசைத்தது இல்லை... இப்போ முதன் முறையா
🌹உங்கள் முன்னாடி என்று நேற்று சாலை ஓர சம்பவம் சொல்லிஅவர் இசைத்த பாடல்
'நீங்க நல்லா இருக்கணும்
நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்ற பாடல்...
அரங்கம் ஆர்ப்பரித்தது..
🌹தலைவர் மூன்றாம் முறை எமனை வென்று நலமுடன் திரும்பி மீண்டும் நாடு ஆளும் வாய்ப்பை தமிழக மக்கள் அவருக்கு நல்கிய போது...
🌹ஒரு நாள்எம் ஜி ஆர் அந்த இசை மேதை வயலின் ஜாம்பவான் குன்னக்குடி
வைத்தியநாதன்
அவரை வீட்டுக்கு வர சொல்லி...
🌹இறுதி நாட்கள் எட்டுவதை உணர்ந்து கொண்டாரோ என்னவோ நீங்க வாசிங்க
நான் கேட்கணும் இசையை என்று அவர் வாசிக்க அதை தலைவர்
தன் மடியில் இருக்கும்
டேப் ரெகார்டர் அதில் பதிவு செய்யும் அதிகம் வராத புகைப்படம் பதிவில்...
🌹எம்ஜிஆர் ஒரு சரித்திரம்
🌹எம்ஜிஆர் ஒரு அவதாரம்
🌹எம்ஜிஆர் ஒரு விந்தையான பிறவி...