Feed Item
·
Added a post

200 ஆண்டுகள் பழமையான ஒரு வீடு இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது...

அப்போது சுவர் அலமாரி ஒன்றைப் பெயர்த்துக் கொண்டிருந்தார்கள்.

சுவற்றின் மேல் காகிதம் போல் ஏதோ ஒட்டப்பட்டிருந்தது.

இடித்துக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் அது தாமரை இலை என்று சொன்னார்கள்.

தாமரை இலையை சுவற்றில் ஒட்டி அதன் பின்பே அலமாரியைக் கட்டுவார்களாம்.

காரணம் என்னவென்றால் கரையான் அரிக்காதாம்.

புகைப்படத்தில் இருப்பது சுவரில் ஒட்டப்பட்ட தாமரை இலை... இது போல் மிகப் பெரிய வாழை இலைகளையும் இடிக்கும் போது பார்த்திருக்கிறார்களாம்.

கரையான் அரிக்காத தொழில் நுட்பத்துடன் வீடு கட்டுவது எப்படி?...

என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது அன்று......

  • 212