Feed Item
·
Added a post

ஒரு அனுபவம் மிகுந்த மனிதர் தனது மகனுக்கு சில முக்கிய அறிவுரை வழங்கினகினார் 'மகனே, இந்த மூன்று காரியங்களை மறக்காமல் உன் வாழ்வில் செய்ய உறுதிப்படுத்திக் கொள்

1. சிறந்த உணவை உண்ண வேண்டும்.

2. மிகவும் வசதியான படுக்கையில் உறங்க வேண்டும்

3. சிறந்த வீட்டில் வசிக்க வேண்டும்.

அதை கேட்ட மகன் பதிலளித்தார்;

அப்பா நாம் ஏழை என்று உங்களுக்குத் தெரியும், இவற்றையெல்லாம் நான் எப்படி செய்ய முடியும். என்றான்

அதற்கு தந்தை பதிலளித்தார்;

1. நீ உண்மையிலேயே பசியுடன் இருக்கும்போது மட்டுமே சாப்பிட்டால், நீ மிகவும் சுவையான உணவை சாப்பிடு வதை உணர்வாய்

2. நீ கடினமாகவும், நேர்மையாகவும், உழைத்து சோர்வாக தூங்கச் சென்றால், நீ மிகவும் வசதியான நிம்மதியான படுக்கை அமயப்பெருவாய்.

3. நீ மக்களிடம் மரியாதையாக இருந்தால், அவர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தும் போது, நீ அவர்களின் இதயங்களில் வசிப்பாய், அது சிறந்த வீட்டில் நீ குடியிருப்பதை உறுதி படுத்தும்.

ஞானத்தின் அழகான வார்த்தைகள், கட்டாயம் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

  • 51