Feed Item
·
Added article

இலங்கையில் இருந்து மும்பைக்குச் சென்று பிரபல பாலிவுட் நடிகையாக மாறிய ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஹீரோயினாக முக்கிய காரணமே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தான் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தன. 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்ற சுகேஷ் ஜாக்குலின் தனது காதலி என்றும் அவருக்கு பல விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக தெரிவித்த நிலையில், ஜாக்குலினும் விசாரணை வலையில் சிக்கினார்.

அந்த சர்ச்சைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தப்பித்து வந்த ஜாக்குலின் தற்போது ஆபாச நடனம் ஆடிவிட்டார் என அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையே வெடித்துள்ளது.

எஸ்டி மியூசிக்கில் கடந்த ஜூலை 15ம் தேதி வெளியான ஜுக்னி (Jugni) ஆல்பம் பாடல் 2 நாட்களில் 14 மில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய ஹிட் அடித்து ஏகப்பட்ட லாபத்தை கொடுத்துள்ளது. இதற்கு காரணம் பாடல் காட்சியில் உள்ளாடை அணியாமல் நடனம் ஆடும் போது ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் அந்தரங்க பகுதி அம்பலமானது தான் என்கின்றனர். ஆபாச நடன சர்ச்சை: ஒரு ஆல்பம் வீடியோவை எடிட்டிங் டேபிளில் கூட பார்க்காமல் நடந்த வார்ட்ரோப் மால்ஃபங்கஷனை தவிர்க்காமல் எப்படி மேக்கர்கள் வெளியிடுவார்கள் என்றும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட மோசடி என்றும் பாலிவுட் ரசிகர்கள் ஜுக்னி பாடலுக்கு எதிராகவும் ஆபாச நடனமாடிய ஜாக்குலினுக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ரசிகர்களின் கண்டனங்களுக்கு இதுவரை ஜாக்குலின் வாய் திறக்காமல் மெளனம் சாதித்து வரும் நிலையில், எதிர்ப்பு தாங்க முடியாமல் பாடலை உருவாக்கியவர்கள் அந்த இடத்தை ப்ளர் செய்துள்ளனர். வீடியோ பாடலில் தற்போது ஜாக்குலின் வெட்ட வெளிச்சமாக தெரிந்த மார்பக பகுதி ப்ளர் செய்யப்பட்டுள்ளது.

  • 34