Feed Item
·
Added article

நடிகை ஸ்ரீலீலா மாத​வி​டாய் குறித்து தெரி​வித்த கருத்து சமூக வலை​தளங்​களில் பெரும் சர்ச்​சையை ஏற்படுத்தியுள்​ளது. பவன் கல்​யாணுடன் ஸ்ரீலீலா நடித்​துள்ள ‘உஸ்​தாத் பகத் சிங்’ படத்​தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்​தது.

அதில் கலந்​து​கொண்ட ஸ்ரீலீலா​விடம், ஒரு பெண்​ணாக அவர் எதிர்​கொண்ட பெரிய சவால் குறித்​துக் கேட்கப்பட்டது. அதற்​குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “பெண்களுக்கு மாத​வி​டாய் என்​பது சாக்​குப்​போக்கு கிடையாது. நான் பெரும்​பாலான பாடல்​களில் நடனமாடும்​போது மாத​வி​டாய் காலத்​தில்​தான் இருந்தேன்.

உடல்​ரீ​தி​யான தடைகளைத் தாண்டி முன்​னேற வேண்டும். உளவியல் ரீதி​யாகவோ அல்​லது உடல் ரீதி​யாகவோ மாத​விடாயைக் காரண​மாகச் சொல்​லக்​கூ​டாது” என்று கூறியிருந்​தார். மருத்​து​வப் படிப்பை முடித்​துள்ள ஸ்ரீலீலாவின் இந்​த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​தன.

மருத்​து​வம் படித்த ஒரு​வருக்கு மாத​வி​டாய் வலி, ஒரு பெண்​ணின் அன்​றாடச் செயல்பாடு​களை எவ்​வளவு பாதிக்​கும் என்​பது தெரிந்​திருக்க வேண்​டும். அவ்​வாறு இருந்​தும், ‘இது ஒரு சாக்​குப்​போக்கு அல்ல’ என்று அவர் கூறியது, அந்த வலியை அனுபவிக்​கும் மில்​லியன் கணக்கான பெண்​களுக்கு இழைக்​கப்​படும் அநீதி என பலர் விமர்சித்து வருகின்​றனர்.

  • 34