ஒரு இளம் பெண் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு துணையாக அவளுடன் நாய் ஒன்றை வளர்த்து வந்தாள். அந்த நாய் எப்பொழுதும் அவளுடைய படுக்கைக்கு அடியிலேயே படுத்து கொள்ளும்.
அந்த பெண்ணும் அங்கே நாய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய கீழே கையை நீட்டினால், அந்த நாய் அவள் கையை நக்கிவிடும். அதை வைத்து நாய் அங்கு தான் இருக்கிறது என்பதை உறுதி செய்தி கொள்வாள்.
ஒரு நாள் இரவு டீ.வியில் ஒரு செய்தி வருகிறது. மிகவும் ஆபத்தான சீரியல் கில்லர் ஒருவன் தப்பித்து விட்டான். அதனால் பொது மக்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான். அதை பார்த்ததும் அந்த பெண் உடனேயே போய் கதவு, ஜன்னல் என்று எல்லாவற்றையும் நன்றாக பூட்டி விட்டு வந்து படுக்கிறாள்.
இப்போது பழக்க தோஷத்தில் நாய் இருக்கிறதா இல்லையா என்று உறுதி செய்ய கையை கீழே நீட்டுகிறார். நாயும் அவள் கையை நக்குகிறது. நிம்மதியாக படுத்து கொள்கிறாள்.
ஆனால் எங்கோ தண்ணீர் சொட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறது. இவளும் எழுந்து போய் குழாயில் இருந்து வருகிறதா என்று பார்த்தால் இல்லை. சரி என்று படுக்க செல்கிறார்.
மறுபடியும் கையை படுக்கைக்கு கீழே காட்டுகிறாள். நாய் அவள் கையை நக்குகிறது.
சிறிது நேரம் தூங்க முயற்சி செய்து பார்க்கிறாள். ஆனால் அந்த தண்ணீர் சொட்டும் சத்தம் அவளை தொந்தரவு செய்கிறது. சரி அது எங்கேயிருந்து தான் வருகிறது என்று பார்ப்போமே என்று தேடுகிறாள். அவளுடைய பாத்ரூமில் இருந்து தான் அந்த சத்தம் கேட்கிறது.
கதவை திறந்து பார்த்தவளுக்கு பயங்கர அதிர்ச்சி. அந்த பெண்ணுடைய நாய் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஷவரில் தொங்கவிடப்பட்டுள்ளது. அதன் மீதிருந்து வழியும் ரத்தமே இவ்வளவு நேரம் சொட்டி கொண்டிருந்திருக்கிறது.
பாத்ரூம் கண்ணாடியில் அந்த நாயின் ரத்தத்தால் எழுதியிருந்தது, மனிதர்களாலும் நக்க முடியும்.