இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இந்தியாவில் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்திய சிப்பாய்களை இத்தாலி ஜெர்மன் துருக்கி போன்ற நாடுகளின்மீதுபோரிடுவதற்காக அனுப்ப பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தபோது சர்தார் வல்பாய் படேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் காந்தி இந்திய சிப்பாய்களை அனுப்பவதற்கு சம்மதித்தார்..
இதனால் படேலுக்கும் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தியர்களான சுமார் 5000சிப்பாய்கள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இத்தாலி மீது போர்தொடுக்க அனுப்பட்டனர். ஆனால் ஐயாயிரம் இந்தியசிப்பாய்களும் இத்தாலி இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்
ஒரு நாடக அரங்கத்தில் அடைத்து வைத்து விஷவாயு செலுத்தி படுகொலை செய்ய முசோலினி திட்டமிடுகிறார். அதனை ஹிட்லருக்கும் தெரியப்படுத்துகிறார்.
செய்தி அறிந்து பதைபதைக்கிறார் ஒரு இந்தியதலைவர் அவசரம் வேண்டாம்.... அந்த சிப்பாய்களை ஒருமுறை நான் பார்க்கவேண்டும். அதுவரையில் பொறுத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நமது சிப்பாய்கள் அடைத்து வைத்திருந்த அரங்கத்தில்.., முதலில் முசோலினி நுழைந்தார்.
அமைதி...
இரண்டாம் நபராக ஹிட்லர் நுழைந்தார். அசைவில்லை...
மூன்றாவது நபராக இந்தியத்தலைவர் நுழைந்தார்...
அவரைப்பார்த்த 5000 இந்தியசிப்பாய்களும் வீருகொண்டுஎழுந்து, உணர்ச்சிப்பிழம்பாகமாறி.....
நேதாஜி ஜிந்தாபாத் என்று எழுப்பியகோஷம் அரங்கமே அதிர்ந்தது....
ஹிட்லரும் முசோலினியும் விக்கித்து நின்றனர்...
அப்போது அதேஇடத்தில், நேதாஜி அவர்கள் ஹிட்லரிடமும் முசோலினியிடமும் இவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் என் தாய்நாட்டு மக்கள் எனது சகோதரர்கள் இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி என்னிடம் தாருங்கள்..
நான் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்த்து பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு என் பாரதநாட்டின் விடுதலையை பெற்றுவிடுவேன் என்று கூறி அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த செய்தியை , சர்வதேச ரேடியோவில் அறிவிக்கிறார் நேதாஜி... இந்தச் செய்தியை கேட்ட இங்கிலாந்துக்கு நடுக்கம் ஏற்படுகிறது.
பிரிட்டிஷ் பாராளுமன்றம் அவசரமாகக் கூடி விவாதித்தது..... இந்தியாவில் உள்ள இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய சிப்பாய்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. அது எந்த நேரமும் நமக்கெதிராக திரும்பும், அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது எனவே நாம் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேறிவிடவேண்டும் என்ற தீர்மானமும் போட்டது...
இப்போது கூறுங்கள், இந்தியாவிற்கு சுதந்திரம் யாரால் கிடைத்தது...??? இதுபோன்ற நேதாஜியின் சேவையும் தியாகமும் வாழ்க்கையும் வரலாறுகளும் ஏன் மரணம் உட்பட அவரைப்பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள் ஏராளம்.
நாமும் உரக்கச்சொல்வோம், தேசப்பிதா நேதாஜி ஜிந்தாபாத்"
- சமூக ஊடகங்களில் வெளியானதை பகிர்கிறோம்.
