சளி வந்தால், அவ்வப்போது மூக்கை சிந்தி வெளியேற்ற வேண்டும். வேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். தினமும் வெந்நீர் மட்டுமே பருகி வர வேண்டும்.
மிளகு ரசம், சுக்கு, மல்லி காப்பி இவற்றை தொண்டைக்கு இதமாக பருக வேண்டும்.
அதிக காரம் இல்லாத, எண்ணெய், நெய் அதிகம் சேர்க்காத உணவுகள், ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டு வர, சளி குறைய தொடங்கும்.
தகுந்த முறையில் பயிற்சி பெற்று, சுவாசப் பயிற்சிகளை செய்து வரும் போது, நாளடைவில் சளி தொந்தரவு, சைனஸ் போன்றவைகளை கட்டு படுத்தலாம்.