இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பல மூலிகைகள் புகழ்பெற்று விளங்குகிறது. இன்றளவும் மக்கள் மூலிகை மருத்துவத்தை நம்பத்தான் செய்கிறார்கள்.
நம் நலம் காக்கும் சில மூலிகைகள் இதோ…
துளசி:
- துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்துவது தொற்றுநோய்களைத் தடுக்க உதவும், ஏனெனில் துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- ஒரு லிட்டர் நீரில் சுமார் இருபது துளசி இலைகளைப் போட்டு, கொதிக்க வைத்து, காய்ச்சி வடிகட்டிப் பருகுவது சிறந்த தீர்வாகும்.
முருங்கை இலை
- முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம் ,சுண்ணாம்பு சத்து போன்றவை இருக்கின்றன.
- இந்த இலைகளை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
- பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.
தண்ணீர் விட்டான் கிழங்கு :
- இதன் வேரில் ஏறக்குறைய 100 கிழங்குகள் இருக்கும்
- இக்கிழங்கை பாலில் வேக வைத்து அந்தப் பாலை பருகினால் உஷ்ணத்தால் உண்டான சுவையின்மை, உணவு செரியாமையினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு இவை அனைத்தும் சரியாகும்.
- இக்கிழங்குச்சாற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட வயிற்றில் உண்டாகும் சூலை நோய் சரியாகும்.
திருநீற்றுப்பச்சிலை:
இந்த இலையின் சாற்றில் வசம்பை இழைத்து அந்த விழுதை முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு போட பருக்கள் குணமாகும்.
