கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினிகாந்த்

ஒரு மாதமாக ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பிய ரஜினிகாந்தும் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ரஜினிக்கு தடுப்பூசி போடும் புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு “நமது தலைவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து வெல்வோம். அனைவரும் முககவசம் அணியுங்கள். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்'' என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். ரஜினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

  • 648
  • More
Comments (0)
Login or Join to comment.