படு கிளாமராக திரௌபதி சீலா

தமிழ்நாட்டில் உள்ள ஜெயம் கொண்டான் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவரான ஷீலா சிறு வயதிலிருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பல்வேறு நடன போட்டிகளில் கலந்துக்கொண்டு முறையாக பரதநாட்டியத்தை கற்று வந்தார்.

இவர் பரதநாட்டியத்தில் பட்டப் படிப்பை படித்திருக்கிறார். அதன் பிறகு நடிப்பு துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார் .

கூத்துப்பட்டறையில் நடிப்பு கலையை கற்றுக்கொண்ட ஷீலா ராஜ்குமார். முதன் முதலில் நாடகங்களில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு திரைப்பட இயக்குனரான அறிவழகன் “ஆறாவது சினம்” திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். தொடர்ந்து அசுரவதம், கும்பலங்கி நைட்ஸ் சென்ற மலையாள திரைப்படம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை,திரௌபதி, மண்டேலா , பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்ஜே சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார். இதில் குறிப்பாக 2020 ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

அந்த திரைப்படம் ஷீலாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் தம்பி சோழன் என்ற ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் இருந்து திடீரென தான் திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் எனக்கூறி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அதிர வைத்தார்.

விவாகரத்துக்கு பிறகு படு கிளாமராக திரௌபதி சீலா தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார். ஆம் கிளாமரான உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதன் மூலம் படவாய்ப்பை தேடி வருகிறார்.

  • 329
  • More
Comments (0)
Login or Join to comment.