கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தர

" உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம்.

பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார். பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள்.

கூடவே வந்த நிருபர்,

“கவிஞரே, வாழ்க்கை வரலாறு” என்று நினைவூட்டி இருக்கிறார்.

உடனே பட்டுக்கோட்டையார்,

“முதலில் நடையாய் நடந்தேன், ரிக்ஷாவில் போனேன்,

பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை.

இதுல எங்கே இருக்குது வரலாறு?”

என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம்.

இந்த எளிமைதான் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்.

இன்று அவரின் பிறந்தநாள்.

  • 643
  • More