Feed Item
Added post  to  , உன

்னை நினைத்து ஏங்குகிறேன் #

₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹

பிறக்கும்போது என்னுடன் கூடவே பிறந்தாய் ...உன் அழகை பார்த்து என் பெற்றோர்கள் உற்றோர்கள் உனைப் பார்த்து மகிழ்ந்தார்கள். சில பேர் உன்னில் ‌பொறாமை கொண்டார்கள்.நான் வளர வளர நீயும் என் கூடவே வளர்ந்தாய்.நானும் உன்னைப் பார்த்து பெருமை கொண்டேன்.எனது நண்பர்கள் சிலர் உன்னைப் போல் தங்களுக்கு கிடைக்கவில்லையே என்று ஆதங்கம் அடைந்தனர்.

என் வாலிப வயதில் திருமணமும் செய்து கொண்டேன்.என் மனைவியும்  தன் தோழிகளிடம் உன்னைப் பற்றி பெருமை பேசுவாள்.

எனக்கும் நாற்பது வயதாகிறது....என்னை விட்டு மெல்ல மெல்ல விலகத் தொடங்கினாய்....

சிறிது கலக்கமடைந்தேன் !எல்லோரும் என்னைப் பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்தார்கள்.?

எனக்கு ஐம்பது வயதாகிறது என்னை விட்டு முக்கால் தூரம் சென்று விட்டாய் என் பிள்ளைகள் எனைப் பார்த்து கேலி செய்கிறார்கள்.எனக்கோ ஏக வெட்கம்.அது அது அந்தந்த காலங்களில் நடப்பதுதானே என்று மனதை தேற்றி கொண்டேன்.

இப்போது எனக்கு அறுபது ....வயதாகிவிட்டது என்னை விட்டு நீ முழுமையாக நீங்கி விட்டாய் என்றாலும் ...உன்னை நினைத்து ஏங்குகிறேன்.

தலை முடியே....!என்னில் மீண்டும் எப்போது வந்து ஒட்டிக்கொள்வாய்??

  • 487