Feed Item
Added a post 

தென்மராட்சி மீசாலை என்றாலே மாம்பழமும்,பலாப்பழமுமே சட்டென்று நினைவில் வரும். பலாப்பழ சீசன் தொடங்கியதும் மீசாலை களை கட்டத் தொடங்கி விடும். அண்மைக்காலங்களாக மீசாலை ஐயா கடையடி பலாப்பழம் விற்கும் இடமாக மாறியுள்ளது.உள்ளூர் பலாப்பழ பிரியர்களும் ,தென்னிலங்கை வியாபாரிகளும், வெளிநாட்டு வாசிகளும் இவ்விடத்தில் வந்து பலாப்பழத்தை வாங்கி செல்கின்றனர்.வைகாசி,ஆனி,ஆடி மாதம் வரை மீசாலை ஐயா கடை பலாப்பழ வாசம் வீசிய படி ஒவ்வொருவரையும் சுண்டி இழுக்கிறது.

  • 653