ரப்பரை பார்த்து பென்சில் கேட்டது..ஒவ்வொரு முறையும் நான் செய்யும் தவறுக்கும் என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய்..ஆனால் என்னை சுத்தப்படுத்தும் போது நீ அழிந்து கொண்டு போகிறாய் அது எனக்கு வருத்தமாக இருக்கிறது...அதற்கு ரப்பர் சொன்னது...அது என் கடமை ..நான் படைக்கப்பட்டதே தினம் தினம் அழிவதற்குத்தான் என்னைக் கண்டு நீ வருந்த வேண்டாம்..இதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி ..என்னால் உன் தவறுகள் அழிக்கப் பட்டு,, நீ திருத்தங்களுடன் முன்னேறிச் சென்றால் அதுவே என் வெற்றி. நான் தேய்வது பற்றி எனக்கு கவலையில்லை.. அந்த இறப்பர் வேறு யாருமில்லை.....நம் பெற்றோர்கள்தான். அவர்கள் ஆயுள் முடியும் வரை நம் தவறுகளை திருத்திக் கொண்டே இருப்பார்கள்..நம்மீது பொறாமை கொள்ளாத ஒரே ஜீவன் நம்மை பெற்றவர்களே...
- 188