<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Popular News RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/popular]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/popular" rel="self" type="application/rss+xml" /><description>Popular News RSS</description><lastBuildDate>Tue, 22 Jul 2025 16:54:22 GMT</lastBuildDate><item><title><![CDATA[கனடாவில் 15 வயது சிறுவன் குத்தி கொலை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1pqqdac]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1pqqdac]]></guid><description><![CDATA[<p>கனடாவில் வன்கூவரின் டவுன்டவுன் பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம், வன்கூவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள ஹவ் தெருவில், இரவு 11.40 மணியளவில் வழியே சென்ற ஒருவர் 911-ஐ அழைத்ததினால் வெளியாகியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், பிற அவசர சேவை ஊழியர்களும் சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வன்கூவர் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் சார்ஜென்ட் ஸ்டீவ் அடிசன் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, ராப்சன் சதுக்கம் மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் காவல்துறையினரால் மூடப்பட்டன. இவ்வழக்கைச் சார்ந்த மேலதிக தகவல்களுக்கோ அல்லது உதவிக்கோ, வன்கூவர் காவல்துறையிரை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1pqqdac">Read more</a></p>]]></description><pubDate>Tue, 22 Jul 2025 16:54:22 GMT</pubDate></item><item><title><![CDATA[தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1fzkekj]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1fzkekj]]></guid><description><![CDATA[<p>லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/p3zpgba2ya5gruzbvvwtjbjcd6sryllh.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:45:05 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் 19 வயது இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1eleslt]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1eleslt]]></guid><description><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியினர் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsfordஇல் ஜனவரி மாதம் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார். அவரைக் கடத்திச் சென்ற சிலர் படுகாயமடைந்த நிலையில் அவரை சர்ரேயிலுள்ள கிரெசண்ட் கடற்கரையில் வீசிச் சென்றுள்ளனர். தகவலறிந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்துவிட்டார். தற்போது, அந்த சம்பவம் தொடர்பில் ரவ்தீப் சிங் (21), ஹர்மன்தீப் கில் (26), ஜஸ்கரன் சிங் (20) மற்றும் பிபன்பிரீத் சிங் (22) ஆகியோர் மீது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தர்பிரீத் கோசா (19) என்னும் இளைஞர் மீது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி அடைத்துவைத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-news/1eleslt">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/fxxrkcj8s6vcjyghgkt9idlpce9hlrsp.jpg" />]]></description><pubDate>Sat, 02 Aug 2025 14:41:57 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடியர்கள் குடியுரிமை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் தீவுகள் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1umwf8c]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1umwf8c]]></guid><description><![CDATA[<p>கனடியர்கள் கரீபியன் தீவுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கனேடியர்கள் பயண விசா வசதிக்காக அல்ல, மாறாக வாழ்க்கை முறை, நெகிழ்வுத்தன்மை மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் குடியுரிமை பெறுவதை அதிகளவில் ஆராய்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கிழக்கு கரீபியனில் உள்ள ஐந்து நாடுகள் தங்கள் அழகிய கடற்கரைகளை மட்டுமே விற்பனை புள்ளியாக முன்னிறுத்துவதை நிறுத்திவிட்டு, வெளிநாட்டினரை வீடு வாங்க அல்லது நன்கொடை வழங்குவதற்கு ஈடாக குடியுரிமை வழங்கும் முறையை பிரபலமாக்கியுள்ளன.குடியுரிமை மூலம் முதலீடு (CBI) திட்டங்களை வழங்கும் தீவு நாடுகள் அன்டிகுவா மற்றும் பார்புடா, டொமினிகா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா மற்றும் கிரெனடா ஆகியன என்பது குறிப்பிடத்தக்கது. கனேடியர்களும் அமெரிக்கர்களும் ரியல் எஸ்டேட் மூலம் முதலீடு செய்து குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கரீபியன் கடவுச்சீட்டுக்கள் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகின்றன, இதில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உள்ளடங்குகின்றன. நைஜீரியா, பாகிஸ்தான் அல்லது வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இது கவர்ச்சிகரமான ஒர் வாய்ப்பாக அமைகின்றது.எனினும், கனேடியர்கள் வித்தியாசமானவர்கள். “கனேடியர்களுக்கு ஏற்கனவே வலுவான கடவுச்சீட்டுகள் உள்ளன, வாழ்க்கை முறை, வரி திட்டமிடல் அல்லது உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு ஒரு மாற்று பாதுகாப்பு திட்டமாக கனடியர்கள் இவ்வாறு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1umwf8c">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/y4kqjdpf7nkajhxn5svuuzzedilgiqp3.jpg" />]]></description><pubDate>Sun, 03 Aug 2025 16:05:55 GMT</pubDate></item><item><title><![CDATA[கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/16qxncr]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/16qxncr]]></guid><description><![CDATA[<p>இலஞ்ச ஊழல் வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத் தீா்ப்பை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் நோக்கங்களுக்காக தனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய உரிபே, தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.002 முதல் 2010-ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஆதரவுடன் கொலம்பியாவை ஆண்டு வந்த இவாரோ உரிபே, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவும், 1990-களில் ஆயுதக் குழுக்கள் வளா்வதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.இது தொடா்பான வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களைக் கவர அவா் இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தற்போது அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/16qxncr">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/5pwzvcupjdzumhglhsrlczfcxg2g3u2y.jpg" />]]></description><pubDate>Sun, 03 Aug 2025 15:53:35 GMT</pubDate></item><item><title><![CDATA[டொராண்டோவில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் என எச்சரிக்கை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1az3ffd]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1az3ffd]]></guid><description><![CDATA[<p>டொராண்டோவில் இந்த வார இறுதி நாட்களில் வெப்பநிலை மாற்றம் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் பகல்நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸுக்கு மேல் இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இன்றைய தினம் டொராண்டோவில் வெப்பநிலை 27 பாகை செல்சியஸாக இருக்கும் எனவும் ஈரப்பதனை கருத்திற் கொண்டால் 32 பாகை செல்சியஸாக உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை பகல்நேர உயர்ந்த வெப்பநிலை 31 பாகை செல்சியஸாக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. </p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/xcnguxcydbidrc6ptspqym2giya54h4k.jpg" />]]></description><pubDate>Thu, 07 Aug 2025 13:38:02 GMT</pubDate></item><item><title><![CDATA[மியன்மர் நாட்டின் ஜனாதிபதி காலமானார் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/twyyy5]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/twyyy5]]></guid><description><![CDATA[<p>2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே காலமானார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.உடல்நல குறைவால் மருத்துவ ஓய்வில் ஒரு வருடம் காலம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என மியான்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி யு மியிண்ட் ஸ்வே இன்று காலை 8.28 மணிக்கு காலமானார்.74 வயதான மியின்ட் ஸ்வே தலைநகர் நேபிடாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்தார். ஜனாதிபதி மைன்ட் ஸ்வேவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என இராணுவம் தெரிவித்துள்ளது.</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/bgydsb5it5y7waxf8vy7l4pustz9tuzw.jpg" />]]></description><pubDate>Thu, 07 Aug 2025 13:43:05 GMT</pubDate></item><item><title><![CDATA[இணையத்தில் விற்கப்படும் மருந்துகள் குறித்து எச்சரிக்கை ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1c606xv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1c606xv]]></guid><description><![CDATA[<p>கனடாவில் ஆன்லைனில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத உடற்பயிற்சி மருந்துகளால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து அந்நாட்டு சுகாதார நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.உடற்கட்டமைப்பு, வயதான எதிர்ப்பு அல்லது விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத ஊசி மூலம் செலுத்தப்படும் பெப்டைட் மருந்துகளை பறிமுதல் செய்ததாக துறை அறிவித்தது.இந்த பொருட்கள் “கனடா பெப்டைட்” என்ற இணையதளத்தில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.ஞாயிறு மதியம் வரை, அந்த இணையதளம் பராமரிப்பு காரணமாக முடக்கப்பட்டிருந்தது.ஊசி மூலம் செலுத்தப்படும் பெப்டைட் மருந்துகள் மருந்துச் சீட்டு மருந்துகளாக ஒழுங்குபடுத்தப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்டவை உட்பட நிறுவனத்தின் இணையதளத்தில் விற்கப்பட்ட எந்தவொரு பொருளையும் துறை அங்கீகரிக்கவில்லை என கனடிய சுகாதார நிறவனம் அறிவித்துள்ளது.அங்கீகரிக்கப்படாத ஊசி மருந்துகளைப் பயன்படுத்துவது தொற்று, ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும் ஒருவர் உட்கொள்ளும் பிற மருந்துகளுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கை குறிப்பிடுகிறது.இந்த பொருட்களைப் பயன்படுத்துவது, லேபிளில் குறிப்பிடப்படாத அல்லது குறிப்பிடப்பட்டிருக்கக் கூடிய பொருட்கள், சேர்க்கைகள் அல்லது மாசுபடுத்திகள் காரணமாக மற்ற அபாயங்களையும் ஏற்படுத்தலாம். இவை பாதுகாப்பாக உற்பத்தி செய்யப்படவோ அல்லது சேமிக்கப்படவோ இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்படாத ஊசி மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் உடல்நலக் கவலைகள் இருந்தால், மருத்துவ நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ரசாயனங்கள் மற்றும் பிற ஆபத்தான கழிவுகளை மாநகராட்சி அல்லது பிராந்திய வழிகாட்டுதல்களின்படி அகற்ற வேண்டும் அல்லது உரிய முறையில் அகற்றுவதற்கு உள்ளூர் மருந்தகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மருந்துகளை வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்றும், மருந்துச் சீட்டு மருந்துகளை உரிமம் பெற்ற மருந்தகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் கனடிய சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-news/1c606xv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/b2eettkgybhmp2u8braca9bsft6antej.png" />]]></description><pubDate>Mon, 04 Aug 2025 16:07:48 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண் - தொடரும் கைது]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1rf31va]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1rf31va]]></guid><description><![CDATA[<p>னடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் இரண்டாவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.அப்போது அங்கு இரண்டு கார்கள் வேகமாக வந்து நின்றுள்ளன. அதேபோல சாலையின் மறுபக்கம் இரண்டு கார்கள் வந்து நிற்க, ஒருபக்கம் நின்ற கருப்பு நிற காரிலிருந்த ஒருவர், மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு, பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது.  துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார்.இந்நிலையில், ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர்களில் ஒருவர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஜெர்டைன் ஃபோஸ்டர் (Jerdaine Foster, 32). அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, North Yorkஇல் Obiesea Okafor (26) என்னும் ஒருவர் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், மற்றவர்களையும் பிடிக்க பொலிசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.... <a href="https://tamilpoonga.com/view-news/1rf31va">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/dccpv3bcck6smzxqvrvyusys8lspazsn.jpg" />]]></description><pubDate>Sat, 09 Aug 2025 14:33:26 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/jdgghc]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/jdgghc]]></guid><description><![CDATA[<p>கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற காரிலிருந்த ஒருவர், சாலையின் மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரிலிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  அப்போது, அவர் சுட்ட ஒரு குண்டு, பேருந்துக்காக காத்திருந்த ஹர்சிம்ரத்தின் மார்பில் பாய்ந்துள்ளது.துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிவிட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், காயங்கள் காரணமாக பலியாகிவிட்டார். இந்நிலையில், ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ஜெர்டைன் ஃபோஸ்டர் (Jerdaine Foster, 32).அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ... <a href="https://tamilpoonga.com/view-news/jdgghc">Read more</a></p>]]></description><pubDate>Fri, 08 Aug 2025 15:07:22 GMT</pubDate></item></channel></rss>