<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News archived in "" RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/archive]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/archive" rel="self" type="application/rss+xml" /><description>News archived in "" RSS</description><lastBuildDate>Thu, 23 Apr 2026 13:52:24 GMT</lastBuildDate><item><title><![CDATA[அலர்ஜி பாதிப்பினால் மோசமாக பாதிக்கப்பட்டது விண்ட்சர்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/rr7c3d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/rr7c3d]]></guid><description><![CDATA[<p>கனடாவில் பூமாலை (pollen) அலர்ஜியால் பாதிக்கப்படும் மக்களுக்கு 2026ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் சவாலான நகரமாக விண்ட்சர் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒட்டாவா அடிப்படையிலான ஏரோபயோலொஜி (Aerobiology) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, கனடாவில் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி மக்கள் வரை (ஐந்தில் ஒருவர்) மரங்கள், புல்வெளிகள் மற்றும் களைகள் மூலம் பரவும் பூமாலை அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் மூக்கடைப்பு, நீர்வடிவு, தும்மல், இருமல் மற்றும் கண் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆய்வு தரவரிசை, பூமாலை பரவும் கால அளவு மற்றும் அதிக அல்லது மிக அதிக அளவிலான காற்றில் பரவும் பூமாலை நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.அதிக பாதிப்பு உள்ள நகரங்கள் (2026)1.	விண்ட்சர்2.	ஹாமில்டன்3.	பேரி4.	விக்டோரியா5.	கிங்ஸ்டன்ஆய்வில் குறிப்பிடப்பட்டதாவது, விண்ட்சர் நகரத்தில் சுற்றியுள்ள அடர்ந்த தாவர வளம், காலநிலை நிலைமைகள் மற்றும் அதிக அளவில் அலர்ஜி ஏற்படுத்தும் மரங்கள் (பர்ச், ஓக், ராக்வீட்) இருப்பதால் பூமாலை பரவல் அதிகமாக இருப்பதாகும்.குறைந்த பாதிப்பு உள்ள நகரங்கள்1.	செயின்ட் ஜான்ஸ்2.	செயின்ட் ஜான்3.	ரெஜினா4.	மோன்க்டன்5.	ஹாலிஃபாக்ஸ் இந்த ஆய்வு, பருவகால அலர்ஜி பாதிப்புகள் கனடாவின் பல நகரங்களில் வாழ்வாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.... <a href="https://tamilpoonga.com/view-news/rr7c3d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/nvwt39gktl8np74zgixcbtrpdr7maxts.png" />]]></description><pubDate>Thu, 23 Apr 2026 13:52:24 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் கப்பம் கோரல்களுக்கு இந்திய மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களா?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/zky5rn]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/zky5rn]]></guid><description><![CDATA[<p>குற்றக் குழுக்கள் தெற்காசிய சமூகங்களை இலக்காகக் கொண்டு நடத்தும் மிரட்டல் வசூல் நடவடிக்கைகளில் இந்திய மாணவர்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.கனடாவின் நிதி நுண்ணறிவு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சிறப்பு அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மிரட்டல் சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை அடையாளம் காண பல்வேறு எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிறுவனம் ஆண்டுதோறும் வங்கிகள், கடன் சங்கங்கள், பங்குச் சந்தை நிறுவனங்கள், பண பரிமாற்ற சேவைகள், நிலமூலதன முகவர்கள் மற்றும் கேசினோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்து பணமோசடி தொடர்பான தகவல்களை கண்டறிகிறது.பின்னர், இந்த தகவல்கள் கனடிய பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கு பகிரப்படுகின்றன.2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட மிரட்டல் தொடர்பான நிதி நுண்ணறிவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த தகவல்களில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 63,000க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த மிரட்டல் நடவடிக்கைகள் தற்போது தனிப்பட்ட சம்பவங்களை தாண்டி, மாகாணங்களைக் கடந்து ஒருங்கிணைக்கப்படும் “தொடர்ச்சியான அழுத்த முயற்சி” ஆக மாறியுள்ளதாகவும், குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, மானிடோபா மற்றும் ஒண்டாரியோ மாகாணங்களில் அதிகமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/zky5rn">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/kx2nbpvektlnpkmquxz5lvnxnc5zck6u.png" />]]></description><pubDate>Thu, 23 Apr 2026 13:31:48 GMT</pubDate></item><item><title><![CDATA[ஆந்திர முன்னாள் முதல்வர் காலமானார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vx6lj9]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vx6lj9]]></guid><description><![CDATA[<p>ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலத்​தில், என்​.டி.​ரா​மா​ரா​வின் ஆட்​சியை கவிழ்த்து முதல்​வ​ரான, நாதள்ள பாஸ்​கர் ராவ் (90) நேற்று கால​மா​னார்.வழக்​கறிஞ​ரான நாதள்ள பாஸ்​கர் ராவ், காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்து 1978-ல் எம்எல்ஏ ஆனார். இதையடுத்து சென்னா ரெட்டி​ அமைச்​சர​வை​யில் இடம் பிடித்​தார். 1982-ல் என்​.டி.​ரா​மா​ராவ் தலை​மை​யில் தெலுங்கு தேசம் கட்சி உரு​வான​தில் முக்​கியப் பங்கு வகித்​தார். 1983-ல் ஆந்​திர முதல்​வ​ராக என்​.டி.​ரா​மா​ராவ் பதவி​யேற்​றார். அப்​போது பாஸ்​கர் ராவ் நிதி அமைச்​ச​ரா​னார். 1984-ல் என்​டிஆர் மருத்​துவ சிகிச்​சைக்​காக அமெரிக்கா சென்றார்.அப்​போது அவரது ஆட்​சியை கவிழ்த்​து, ஆகஸ்ட் 16, 1984-ல் ஆந்திர முதல்​வ​ரா​னார். இதற்​கிடை​யில் நாடு திரும்​பிய என்.டி.ஆர், நீதி கேட்டு மாநிலம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்கொண்​டார். இதையடுத்து பாஸ்​கர் ராவ், ஒரு மாதத்​தில் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். முதல்​வ​ராக என்​டிஆர் மீண்​டும் பதவி​யேற்​றார். நாதள்ள பாஸ்​கர் ராவ், 1998-ல் காங்கிரஸ் எம்​பி​யாக கம்​மம் தொகு​தி​யில் இருந்து தேர்ந்தெடுக்கப்​பட்​டார். 2019-ல் பாஜக​வில் இணைந்​தார்.பாஸ்​கர் ராவ் சமீபத்​தில் உடல்​நலக் குறைவு காரண​மாக ஹைதரா​பாத்​தில் உள்ள ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். இவரது மகன் நாதள்ள மனோகர், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்​து, ஆந்​தி​ரா​வில் சந்திர​பாபு நாயுடு​வின் கூட்​டணி அரசில் சமூக நலத்​துறை அமைச்​ச​ராக பணி​யாற்றி வரு​கிறார். பாஸ்​கர் ராவின் இறு​திச் சடங்​கு​கள் இன்று ஹைத​ரா​பாத் பஞ்​சகுட்டா மயானத்​தில் நடை​பெறும் என்று அவரது​ குடும்​பத்​தினர்​ அறி​வித்​துள்​ளனர்​.... <a href="https://tamilpoonga.com/view-news/1vx6lj9">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/g6kvgdvcd5wbmirpckhv8v4th48bvbcq.jpg" />]]></description><pubDate>Thu, 23 Apr 2026 04:21:33 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோருவதில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/x0kbf3]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/x0kbf3]]></guid><description><![CDATA[<p>கனடாவில் சமீபத்தில் Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேறியது நினைவிருக்கலாம்.அதைத் தொடர்ந்து, அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள் அமெரிக்கர்கள்!வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில், அவர்களுடைய கனேடிய குடியுரிமை அவர்களுடைய பிள்ளைகளைச் சென்றடையாது என்னும் நிலை கனடாவில் இருந்தது.  இந்த விதியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ’Lost Canadians’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.2009இல் அறிமுகமான இந்த விடயம், வெளிநாடுகளில் பிறந்த கனேடியர்கள், தங்கள் பிள்ளைகளும் வெளிநாட்டில் பிறக்கும் பட்சத்தில் அவர்கள் கனேடிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு தடையாக இருந்தது.2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்ராறியோ உச்சநீதிமன்றம், இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதை முடிவுக்குக் கொண்டுவந்தது.கனடா அரசும், இந்த சட்டத்தின் விளைவுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க இயலாதவைதான் என ஒப்புக்கொண்டு ஒன்ராறியோ உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை.இந்நிலையில், Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு மன்னர் சார்லஸ் சமீபத்தில் ஒப்புதலளித்தார்.கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள், அதிக அளவில் கனடாவில் இரட்டைக்குடியுரிமை கோரி வருகிறார்கள்.அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 15க்கும் ஜனவரிக்கும் இடையில் மட்டும் 12,000க்கும் அதிகமான குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் குடியுரிமை கோரி விண்ணப்பித்தவர்களில் 2,500 பேர் அமெரிக்கர்கள் என்கிறது கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.2025ஆம் ஆண்டில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமை என்னும் வகையில் கனடாவில் குடியுரிமை கோரியவர்கள் 82,500 பேர். அவர்களில், பெரும் எண்ணிக்கையிலானவர்கள், அதாவது, 24,500 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ... <a href="https://tamilpoonga.com/view-news/x0kbf3">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/deybatw4cb7nyppjgy5njt8zadxupq37.jpg" />]]></description><pubDate>Fri, 17 Apr 2026 12:32:05 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடா இடைத்தேர்தல் - மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1ffg8f3]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1ffg8f3]]></guid><description><![CDATA[<p>நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன.கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன.நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். ஆக, ஆளும் லிபரல் கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும். அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றிருந்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது மார்க் கார்னியின் லிபரல் கட்சி. கனடா அரசியல் வரலாற்றில் 24 பிரதமர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 13 பேருக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருந்த நிலையில், தற்போது மார்க் கார்னி கனடாவின் பெரும்பான்மை பெற்ற 14ஆவது பிரதமராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1ffg8f3">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/2r8izy9v4dxham3b4yxsvxtgdh4q4ip9.jpg" />]]></description><pubDate>Wed, 15 Apr 2026 03:22:52 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடா இடைத்தேர்தல் - மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/16e1ij2]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/16e1ij2]]></guid><description><![CDATA[<p>நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன.கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன.நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். ஆக, ஆளும் லிபரல் கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும். அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றிருந்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது மார்க் கார்னியின் லிபரல் கட்சி. கனடா அரசியல் வரலாற்றில் 24 பிரதமர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 13 பேருக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருந்த நிலையில், தற்போது மார்க் கார்னி கனடாவின் பெரும்பான்மை பெற்ற 14ஆவது பிரதமராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ... <a href="https://tamilpoonga.com/view-news/16e1ij2">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/vndwsmes5s9ukggggc7gsepsezpyi5se.jpg" />]]></description><pubDate>Tue, 14 Apr 2026 15:43:20 GMT</pubDate></item><item><title><![CDATA[ ஸ்காப்ரோவில் சில வாகனங்கள் தீக்கிரை ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/cnj9e4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/cnj9e4]]></guid><description><![CDATA[<p>ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.கென்னடி சாலை மற்றும் எல்ஸ்மியர் சாலை சந்திப்புப் பகுதியில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிவதாகக் காலை 5:05 மணியளவில் டொராண்டோ காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ தீயணைப்புப் படையினர், அங்குள்ள கார் விற்பனை நிலையம் (Car Dealership) ஒன்றில் நான்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டறிந்து, விரைவாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு எவரும் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசாரணையின் நிமித்தமாக கென்னடி சாலையின் வடக்கு நோக்கிய பாதைகள் ஷ்ரோப்ஷையர் டிரைவ் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ... <a href="https://tamilpoonga.com/view-news/cnj9e4">Read more</a></p>]]></description><pubDate>Sun, 12 Apr 2026 15:24:13 GMT</pubDate></item><item><title><![CDATA[லம்ப்டன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/3kvh0v]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/3kvh0v]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, அதிகாலை 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் மூன்று பேரை மீட்டுளள்னர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதான டேன் நிஸ்பெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உள்ளூர் ஹாக்கி விளையாட்டுக் குழுக்களில் நன்கு அறியப்பட்டவரான இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏனைய இருவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, லம்ப்டன் கல்லூரியின் பிரதான வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்துப் பயிற்சி மையங்களும் இன்றயை தினம் மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.சர்னியா பொலிஸார் இச்சம்பவத்தை ஒரு திட்டமிட்ட கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் அல்லது காயமடைந்தவர்கள் அக்கல்லூரியின் மாணவர்களா? என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ... <a href="https://tamilpoonga.com/view-news/3kvh0v">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/xmcmk3kqlcksy5yvpsd4qgqjfhixj7k6.png" />]]></description><pubDate>Sat, 11 Apr 2026 15:18:37 GMT</pubDate></item><item><title><![CDATA[நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட மருத்துவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/18jysbb]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/18jysbb]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள பெண் நோயாளிகளிடம் மருத்துவ ஒழுக்கவிதிகளை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகப்பேறு மருத்துவர் ராபர்டோ பெர்னாண்டஸ் என்பவருக்கு மூன்று மாத கால பணி இடைநீக்கம் விதித்து கியூபெக் மருத்துவர் சங்கம் (Quebec’s College of Physicians) உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட 80 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கையில், டாக்டர் பெர்னாண்டஸ் தனது நோயாளிகளைத் தொடர்ச்சியாக அவமதித்ததாகவும், அவர்களின் வலியைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எட்டுப் பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த சாட்சியத்தில், கருப்பையக சாதனத்தை (IUD) மாற்றச் சென்றபோது, மருத்துவர் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி மிகவும் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்."வலி தாங்க முடியாமல் நான் அலறியபோதும், கத்துவதில் பயனில்லை என்று கூறி அவர் தனது பணியைத் தொடர்ந்தார்; சிகிச்சைக்குப் பின் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றார்" என்று அந்தப் பெண் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.இந்த சிகிச்சைக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குக் கடுமையான கருப்பைத் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மற்றொரு நோயாளி, மருத்துவர் தன்னிடம் மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசியதாகவும், இது போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு தன்னிடம் வராமல் பொது மருத்துவரைப் பார்க்குமாறு கூறி அவமதித்ததாகவும் புகாரளித்துள்ளார்.டாக்டர் பெர்னாண்டஸ் மீண்டும் இது போன்ற தவறுகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கருதினாலும், அவர் இடைநீக்க காலத்திற்குப் பிறகு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் நோயாளிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவும், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும் இந்த மாதம் முதல் ஆறு மாத கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/18jysbb">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/aakpy6mpstc7qb4bnz79mkc7f7se8dkd.png" />]]></description><pubDate>Fri, 10 Apr 2026 15:14:56 GMT</pubDate></item><item><title><![CDATA[மசூத் அசார் திடீர் மரணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/52y35d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/52y35d]]></guid><description><![CDATA[<p>ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தளபதிகளின் தொடர் இழப்புகள், அந்த அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.... <a href="https://tamilpoonga.com/view-news/52y35d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yyl9wwsrycgkc4fnvxq3rbgrp7gitqsm.jpg" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 14:58:31 GMT</pubDate></item></channel></rss>