<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News archived in "" RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/archive]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/archive" rel="self" type="application/rss+xml" /><description>News archived in "" RSS</description><lastBuildDate>Thu, 21 May 2026 12:15:00 GMT</lastBuildDate><item><title><![CDATA[கனடாவில் மயானத்தில் தொடர் கொள்ளை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/koakob]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/koakob]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஹமில்டனில் உள்ள 'வைட் சேப்பல் மெமோரியல் கார்டன்' மயானத்தில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறயைினர் கைது செய்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்கும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மயானத்திற்குச் சென்ற உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாடிப் பாத்திரங்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுமார் 40 மலர்ச்சாடிப் பாத்திரங்கள் வரை அங்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.ஹமில்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடந்த மே 13ஆம் திகதி ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மெக்கின்டோஷ் என்ற நபரைக் கைது செய்தனர்.5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை, 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை சட்டவிரோதமாக வியாபாரம் செய்தமை , குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தை கைவசம் வைத்திருந்தமை, தடை விதிக்கப்பட்டிருந்த பின்னரும் வாகனத்தை இயக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பல மலர்ச்சாடிப் பாத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/koakob">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/wg39ls27eh3zxrxbqdgvrz8yqazar6jq.png" />]]></description><pubDate>Thu, 21 May 2026 12:15:00 GMT</pubDate></item><item><title><![CDATA[ஒண்டாரியோவில் பயங்கர தீ விபத்து]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/6zwxv4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/6zwxv4]]></guid><description><![CDATA[<p> கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு தனித்தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.படகுகள் மூலமாக மட்டுமே செல்லக்கூடிய ஒரு தொலைதூர ஏரியில் அமைந்துள்ள தீவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.ஒண்டாரியோவின் கிரேட்டர் சட்பரி பகுதிக்கு தென்மேற்கே அமைந்துள்ள 'லிட்டில் கபோடின்' ஏரியின் தீவொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து நிபிசிங் வெஸ்ட் ஒண்டாரியோ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த பகுதி மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்ததால், அங்கு சாதாரண வாகனங்களில் செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது.இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஹெலிகாப்டர் உள்ளிட்ட சிறப்பு படைகள் களமிறக்கப்பட்டன. பொலிஸ் வான்வழி சேவைகள், வடகிழக்கு பிராந்திய அவசரக்கால மீட்புக்குழு மற்றும் கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து இந்த மீட்புப் பணியை மேற்கொண்டன.இந்த கொடூரத் தீ விபத்தில் சிக்கி, சட்பரி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய மற்றொரு இளைஞர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அவர் உயிராபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து ஒண்டாரியோ தீயணைப்புத் துறை அதிகாரிகளின் உதவியுடன் மாகாண பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/6zwxv4">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/4gawgsuyvb44zm3ugvrzssjth9huepj2.png" />]]></description><pubDate>Tue, 19 May 2026 15:59:22 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடா விமான நிலையங்களில் பெரும் முறைகேடு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vrzxko]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vrzxko]]></guid><description><![CDATA[<p>கனடிய விமான நிலையங்களில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து, விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.கடந்த ஓராண்டில் மட்டும், கனடாவிலிருந்து விமானம் ஏறிய குறைந்தது 17 அப்பாவி பயணிகள், தங்களது பைகளில் ஒட்டப்பட்டிருந்த 'பயணச்சீட்டு அடையாள அட்டை' (Bag Tags) மாற்றப்பட்டதால், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழல்வாதிகளான சில ஊழியர்கள் இந்தச் சதியில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.விமானத்தில் பயணிக்கும் ஒரு அப்பாவியின் லக்கேஜ் பையில் இருக்கும் அடையாள அட்டையை (Tag) ஊழியர்கள் ரகசியமாகப் பிரித்தெடுக்கின்றனர். பின்னர், போதைப்பொருட்கள் நிரப்பப்பட்ட வேறொரு சூட்கேஸில் அந்த அப்பாவியின் அடையாள அட்டையை ஒட்டி விடுகின்றனர்.டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் 3,000 பாதுகாப்பு கேமராக்கள் இருந்தாலும், சில தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கேமராக்கள் இல்லாத 'பிளைண்ட் ஸ்பாட்களை' (Blind Spots) பயன்படுத்தி சில நொடிகளில் இந்த சதி அரங்கேற்றப்படுகிறது.இந்த போதைப்பொருள் பை இலக்கு நாட்டை அடைந்ததும், அங்குள்ள கடத்தல் கும்பல் அதை எடுத்துக்கொள்ளும். ஒருவேளை அது அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால், அந்தப் பையில் யாருடைய பெயர் இருக்கிறதோ அந்த அப்பாவி பயணி பழிவாங்கப்படுவார்.நீதிமன்றப் பதிவுகள், காவல்துறை தரவுகள் மூலம் W5 குழு திரட்டிய தகவல்களின்படி, கனடாவிலிருந்து டொமினிகன் குடியரசு, பாரிஸ், ஜெர்மனி, மொராக்கோ, பெர்முடா, பிலிப்பைன்ஸ் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற விமானங்களிலேயே இந்த மோசடிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதில் சில நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த மோசடி தொடர்பாக, டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய 6 ஊழியர்களை கனடிய பொலிஸார் கடந்த ஆண்டில் கைது செய்துள்ளனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/1vrzxko">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/44sstkmhhznkvufh6izxikmjm44yrlbn.png" />]]></description><pubDate>Tue, 19 May 2026 15:50:11 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடா மற்றும் அமெரிக்காவில் திரும்பப் பெறப்படும் வாகனங்கள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/s26mo8]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/s26mo8]]></guid><description><![CDATA[<p>பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla), மென்பொருள் கோளாறு (Software issue) காரணமாகக் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள தங்களின் ஆயிரக்கணக்கான கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.காரை பின்னோக்கிச் செலுத்தும்போது, அதன் பின்புற கேமரா சரியாக வேலை செய்யாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.கனடா போக்குவரத்துத் துறையின் (Transport Canada) சமீபத்திய அறிவிப்பின்படி, கார்களை ஸ்டார்ட் செய்த உடனே ரிவர்ஸ் கியர் போடும்போது, பின்புறக் கேமராவின் காட்சி திரையில் தோன்றுவதில் தாமதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.கனடாவின் விதிமுறைகளின்படி, ரிவர்ஸ் கியர் போட்ட இரண்டு வினாடிகளுக்குள் பின்புற கேமரா காட்சி திரையில் தோன்ற வேண்டும். ஆனால், இந்த மென்பொருள் கோளாறினால் கேமரா காட்சி தெரியாமல் போவதால், காரை பின்னோக்கி எடுக்கும்போது பின்னால் இருக்கும் தடைகளை ஓட்டுநரால் பார்க்க முடியாது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட வாகனங்களின் விவரங்கள்: இந்த தொழில்நுட்பக் கோளாறால் பின்வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன:•	Tesla Model 3: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை•	Tesla Model S: 2021 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை•	Tesla Model X: 2022 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவை•	Tesla Model Y: 2020 முதல் 2023 வரை தயாரிக்கப்பட்டவைகனடாவில் மட்டும் மொத்தம் 13,846 வாகனங்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன.இதே போன்ற கோளாறுக்காக அமெரிக்காவில் 2,18,000-க்கும் அதிகமான டெஸ்லா கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு மின்னஞ்சல் (Email) மூலம் அனுப்பப்படும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.மேலும், இந்த மென்பொருள் சிக்கலைச் சரிசெய்ய கார்களை நேரடியாக தயாரிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது. வழக்கம்போல இணையம் வழியாகவே இதற்கான மென்பொருள் அப்டேட்டை டெஸ்லா வெளியிட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/s26mo8">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/vbmktaieqdlxxwz99h8hra9xvg5pblay.jpg" />]]></description><pubDate>Mon, 18 May 2026 14:05:45 GMT</pubDate></item><item><title><![CDATA[பிரதமர் இன்று லண்டன் பயணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1mbsjsw]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1mbsjsw]]></guid><description><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று லண்டன் பயணமானார்,லண்டனில் இடம்பெறும் அரச தலைவர்கள் மநாட்டில் கலந்து கொள்வதற்காகவே பயணமாகியுள்ளார்.எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.</p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/trzxvmphmgxlnr4adnxefmmndbr95mp8.jpg" />]]></description><pubDate>Mon, 18 May 2026 13:42:05 GMT</pubDate></item><item><title><![CDATA[டொரண்டோவில் கத்திகுத்து சம்பவம் - ஒருவர் பலி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/16r9efv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/16r9efv]]></guid><description><![CDATA[<p>கனடா - டொரண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கத்திகுத்து சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கிப்ளிங் அவென்யூ மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்புப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் பலத்த கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரைக் மீட்டனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் மற்றும் சந்தேக நபர் இருவருமே 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரும், சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், அநேகமாக அவர்கள் நண்பர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், முதற்கட்ட விசாரணையின்படி, அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/16r9efv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/rvnhphg58jhsgfxsna7ccbl2f4dkrhn6.png" />]]></description><pubDate>Mon, 18 May 2026 13:40:37 GMT</pubDate></item><item><title><![CDATA[வனவிலங்குகளைத் தொந்தரவு செய்தால் பெருந்தொகை அபராதம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vzgbuv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1vzgbuv]]></guid><description><![CDATA[<p>கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள 'பைப்பிங் பிளவர்' (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் தொந்தரவு செய்பவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.நாட்டிலேயே மிகவும் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதிய விதிகளின் கீழ் விதிக்கப்படும் அபராத விபரங்கள் பின்வருமாறு:வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை பலகைகளை மதிக்காமல் நடத்தலுக்கு 2000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தடைசெய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்குள் நுழைதலுக்கு 900 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வசாகா பீச்சின் 'பீச் 1' (Beach 1) பகுதி இந்தப் பறவைகள் ஆண்டுதோறும் கூடுகட்டி முட்டையிடும் முக்கிய இடமாகும். அண்மையில், இப்பகுதியில் உள்ள மணல் மேடுகளை (Dunes) கட்டுமானக் குழுவினர் தவறுதலாகச் சுத்தம் செய்ததால் பறவைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டன.இது தொடர்பாகச் சூழலியல் அமைப்புகள் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி சட்டத்தை நகர நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1vzgbuv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/awxv9jvvqwmljvzm2jk6ipsluhbk5blx.jpg" />]]></description><pubDate>Sat, 16 May 2026 15:18:03 GMT</pubDate></item><item><title><![CDATA[ஒண்டாரியோவில் பாரியளவில் விஸ்தரிக்கப்படும் சிறைகள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/bzqspx]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/bzqspx]]></guid><description><![CDATA[<p>ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், அடுத்த 10 ஆண்டுகளில் 2,500 புதிய படுக்கை வசதிகளை (beds) உருவாக்க மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரி செலுத்துவோரின் பணம் 3 பில்லியன் டொலர் செலவிடப்படும் என்று மாகாண சொலிசிட்டர் ஜெனரல் மைக்கேல் கெர்ஸ்னர் தெரிவித்துள்ளார்.வியாழக்கிழமை இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் கெர்ஸ்னர், மாகாண அரசு புதிய சிறைச்சாலைகளை நிர்மானிக்கவுள்ளதுடன், தற்போதுள்ள சிறைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.வால்கர்டன் மற்றும் பிராம்ப்டன் (Brampton) பகுதிகளில் ஏற்கனவே மூடப்பட்ட சில சிறைச்சாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. படுக்கை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 நவம்பர் மாதத்திற்குள் 255 இடங்கள் சேர்க்கப்படும். மேலும், 700 புதிய சிறைச்சாலை அதிகாரிகளை (Correctional officers) பணியமர்த்தவும் அரசு தீர்மானித்துள்ளது.ஆபத்தான குற்றவாளிகளை வீதிகளில் நடமாட விடாமல் கம்பிகளுக்குப் பின்னால் வைத்திருப்பதை உறுதி செய்யவும், சிறைச்சாலை ஊழியர்கள் பாதுகாப்பாகப் பணியாற்றத் தேவையான இடவசதி மற்றும் கருவிகளை வழங்கவும் இந்த நவீனமயமாக்கல் அவசியம், என்று கெர்ஸ்னர் குறிப்பிட்டார்.செலவை குறைக்கும் நோக்கில் சில சிறைகள் நவீன கட்டுமானக் கூறுகளைக் (Modular components) கொண்டு கட்டப்படவுள்ளன. அரசாங்கத்தின் தரவுகளின்படி, ஒண்டாரியோ சிறைச்சாலைகள் தற்போது அவற்றின் கொள்ளளவை விட 127 சதவீதம் அதிகமாக நிரம்பியுள்ளன.2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, 8,676 கைதிகளுக்கான வசதி கொண்ட சிறைகளில் சராசரியாக 11,058 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.2020 ஆம் ஆண்டில் 80 சதவீதமாக இருந்த சிறைக்கொள்ளளவு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.ஏப்ரல் 1 ஆம் திகதி நிலவரப்படி, சிறைகளில் உள்ளவர்களில் 81 சதவீதத்தினர் இன்னும் விசாரணைக்காக காத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.... <a href="https://tamilpoonga.com/view-news/bzqspx">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/lvtucjjwt432fwbz3ue4dnnr2fn24mwa.png" />]]></description><pubDate>Sat, 16 May 2026 15:09:57 GMT</pubDate></item><item><title><![CDATA[2 வயது மகளை கொலை செய்த தாய்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1sasd5t]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1sasd5t]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஸ்கார்பாரோ பகுதியில், தனது இரண்டு வயது கூட நிரம்பாத பெண் குழந்தையைக் கொலை செய்ததாக அவரது தாயார் மீது பொலிஸார் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், மிட்லாண்ட் அவென்யூ மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு 911 அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அன்று குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த குழந்தை ஓரியானா சோ என அடையாளம் காணப்பட்டுள்ளது.அக்குழந்தை இன்னும் ஒரு மாதத்தில் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயான 37 வயது சி திங் யாங் (Si Ting Yang) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொலை இந்த ஆண்டின் ஸ்கார்பாரோ பகுதியில் பதிவான 8-வது கொலைச் சம்பவமாகும். அடுத்த சில நாட்களுக்கு அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசாரணை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நலன் கருதி கூடுதல் விபரங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/1sasd5t">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/6s3akxhjhrnjxykwsmlacpvavvsx6pnt.png" />]]></description><pubDate>Thu, 14 May 2026 14:43:13 GMT</pubDate></item><item><title><![CDATA[டொராண்டோவில் 500,000 டொலர் மதிப்பிலான நகைகள் கொள்ளை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1y5bwsn]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1y5bwsn]]></guid><description><![CDATA[<p>டொராண்டோ நகரின் மையப்பகுதியில் வாகனத்தில் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் 500,000 டொலர் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நான்கு மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.காவல்துறையினரின் தகவல்படி, இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் ஸ்படைனா அவென்யூ மற்றும் ப்ரெம்னர் பொலிவார்ட் சந்திப்புப் பகுதியில் அதிகாலை சுமார் 4:50 மணியளவில் நடந்துள்ளது.முகமூடி அணிந்த நான்கு நபர்கள், ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை அணுகியுள்ளனர். வாகனத்திற்குள் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்களிடம் இருந்த விலையுயர்ந்த நகைகளைப் பறித்துள்ளனர்.காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு அரை மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நான்கு பேரும் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களின் அடையாளங்கள் முழுமையாகத் தெரியவில்லை.கொள்ளையர்கள் திருடப்பட்ட உரிமத் தகடு கொண்ட நீல நிற நிசான் ரோக் காரை பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது சந்தேகத்திற்குரிய வாகனத்தைக் கண்டாலோ உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ... <a href="https://tamilpoonga.com/view-news/1y5bwsn">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/2gbzyk24cmjhggvxfsksjzftjnqqu5bj.png" />]]></description><pubDate>Wed, 13 May 2026 16:21:14 GMT</pubDate></item></channel></rss>