Added a post
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும் எனவும், செயற்கை இனிப்பு பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மிகவும் முக்கியம் என்பதுடன், கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.தற்போதைய சூழ்நிலையில், இயற்கையான பானங்களை தயாரித்து பருகுவது மிகவும் அவசியம், முடிந்தவரை குளிர்ந்த நீர், பல்வேறு வகையான பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது அவசியம். இதேவேளை, நாளொன்றுக்கு பல தடவைகள் குளிர்ந்த நீரால் உடலை நனைப்பது, ஆரோக்கியமான குழந்தைகளை முடிந்தவரை தண்ணீரில் வைத்திருப்பது அவசியம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.000
Added a post
பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் - 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.அஸ்ட்ராஜெனிக்காவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களின் ஊடாக அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்நிலையிலேயே, உலகம் முழுவதும் இருந்து தடுப்பூசிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தடுப்பூசி இனி தயாரிக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டது என நிறுவனம் அறிவித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தடுப்பூசிகளை மீளப்பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மே ஏழாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது000
Added a post
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.கடிதத்தில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும்.ஆனால் 16.07.2021 திகதிய கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விட ஒரு கணினிக்கு 11 ஆயிரத்து 500 ரூபா அதிக விலையினை கொண்ட வழங்குனரிடம் கொள்வனவு செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு குறித்த விடயம் தொடர்பில் எமக்கும் கடிதம் கிடைப்பெற்றது என்றும். எனவே இது தொடர்பான விளக்கம் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது. 240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது.எனவே தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
Added a post
சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் இடம்பெற்ற மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து, நாடு முழுமையாக இன்னும் மீளவில்லையென்றும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிட்ட முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (07) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஆளுநர் இவ்விடயங்களை குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதாரத்தை 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.இருந்தபோதிலும், அதனை மிகவும் வெற்றிகரமான மற்றும் நிரந்தரமான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேம்படுத்தும் போது தவறான திட்டமிடப்பட்ட கொள்கைகளை கையாளக்கூடாது .இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு பரந்த அரசியல் மற்றும் சமூக இணக்கப்பாட்டின் அடிப்படையில் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது.இதனுடாக நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி பொது மக்களின் சேம நலன்கள் மேம்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க புதிய சட்டத்துக்கமைவாக இலங்கை மத்திய வங்கியின் 2023 வருடாந்த பொருளாதார விளக்கவுரை, மற்றும் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த விடயங்களை தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் டி.எம்.ஜே.வை பி.பெர்னாண்டோ , முனைவர், கலாநிதி சி.அமரசேகர, பொருளாதார ஆராய்வு பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெகஜீவன், பொருளாதார ஆராய்வு மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி.பத்பெரிய ஆகியோரும் கருத்துத் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது000
Added a post
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த கொடூரமான போரை தோற்கடிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த ஏராளமான ஆயுதப்படை வீரர்கள், ஒரு குழுவின் மனித கடத்தலின் விளைவாக சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போர் முனைக்கு சென்றனர்.இந்த போர் முனைகளில் பணிபுரியும் போது கணிசமான எண்ணிக்கையான எமது போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொரு பகுதியினர் காயமடைந்துள்ளதாகவும் உண்மைகள் வெளியாகியுள்ளன.இலங்கையின் முப்படைகளிலும் கௌரவமாக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவ்வாறான போர்வீரர்கள் வெளிநாட்டில் கூலிப்படையாக செயற்படுவது வருத்தமளிக்கிறது.வெளிநாட்டு இராணுவத்தில் சேர்ப்போம், பெரும் சம்பளம் கொடுப்போம், குடியுரிமை மற்றும் பெரும் சலுகைகள் பெறுவோம் என்று கடத்தல்காரர்கள் கொடுத்த பொய் வாக்குறுதியின்படி போர் வீரர்கள் ரஷ்ய - உக்ரைன் போர்முனைக்கு கூலிப்படையாக அனுப்பப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை.இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்த கடத்தல்காரர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000
Added a post
தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.இதேநேரம் ”நாட்டில் தேர்தல் சட்டம் இத்தருணத்தில் அமுலில்தான் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகிறது.தேர்தலொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெற்றப்பட்டுவிட்டன. ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே தேர்தல் சட்டம் நடைமுறையில் இருப்பதாக ஆணைக்குழு கூறுகிறது.இந்த பின்புலத்தில் எதிர்வரும் ஐந்து மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கு இடையில் அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளும் நிதி ஒதுக்கீடுகளும் தேர்தலை இலக்காக கொண்டதென கூறப்படுகிறது. எனது நிலைப்பாடும் அதுதான்.வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகளை ஜுலை 30 ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்குமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக மலையகப் பகுதிகளில் இந்தப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நவம்பர் 30 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.மலையகத்தில் இவ்வாறு அபிவிருத்திப் பணிகளை துரிப்படுத்துமாறு கோருவது நல்ல விடயம். அது முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம்தான். என்றாலும், தேர்தலை இலக்காகக் கொண்டு செய்வது பொறுத்தமற்றது.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிரப்படும் அரிசியை வழங்க முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டது.இத்தருணத்தில் அரிசி அல்லது எந்தவொரு நிவாரணம் பகிரப்பட்டாலும் அது மக்களின் வரிப் பணத்தில் வழங்கப்படும் நிவாரணமென அடையாளப்படுத்தப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டுமுதல் இந்த முறைமைகளை நாம் பின்பற்றினோம்.உள்ளூராட்சிமன்றங்களுக்கு 10 மில்லியன் வரை நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. அதனை வரவேற்கிறோம்.அதற்கு பதிலாக குறித்த தேர்தலை நடத்தினால் அதனை இலகுவாக செய்ய முடியும். தற்போது முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் ஆளுநரின் கீழ் முன்னெடுக்கப்படும். அவை முற்றிலும் அரசியல் சார்பானது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
Added a post
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிசம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சை முடிவுகளின்படி ஆங்கிலப் பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்காணல் இடம்பெறவுள்ளது.அதன்படி, மே 10, 11, 13 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இந்த நேர்காணல்கள் இடம்பெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த நேர்காணலுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
Added a post
இலங்கையில் ஆண்டு தோறும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினால் அதிகரித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டில் 30657 ஆக காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டில் 72546 ஆக உயர்வடைந்துள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.எனவே இவ்விடயத்தில் அதிக கவனமெடுத்து சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000
Added a post
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இந்நிலையில், 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.000
Added a post
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம் முதலாம் திகதி வழங்கப்படவிருந்த போதிலும் மின்சார சபை அதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.அதன்படி ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a post
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து 2 வாரங்களுக்குள் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர்
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த 2 வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவை சீர்செய்யும் முகமாக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்காக 35 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
Added a post
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று ( 08 ) அறிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணயின் இறுதியில், உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் அமர்வு, அதன் தீர்ப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தது. இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாம் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட 2 வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை முன்வைத்திருந்தார். டயனா கமகே மற்றும் பலரை தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிட்ட ஓசல ஹேரத், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால், டயனா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது000
Added a post
போதை பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்கள் ஈடுபடுவதான முறைப்பாடுகரைச்சி உதயநகர் கிழக்கு மற்றும் மேற்கு கிராம மக்களுக்கான கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறைகேள் சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இச் சந்திப்பில் வறிய குடும்பங்களுக்கு பதில் வேறு தொழில் வருமான வாய்ப்பை கொண்ட வசதியான குடும்பங்களும் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.இப்பகுதிக்கான அசுவெசும திட்டத்திற்குள் பொருத்தமற்ற பயனாளிகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் பயனாளிகள் பட்டியல் அலுவலகத்தில் தமிழில் காட்சிப்படுத்துவ தில்லை எனவும் கலந்து கொண்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.இதேவேளை வழங்கப்படும் வெவ்வேறு நிவாரண உதவிகள் குடும்ப பதிவு அட்டையில் பதிவுக்குட்படுத்தாது வழங்கப்படுவதாகவும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து குற்றம் சுமத்தியிருந்தனர்.அத்துடன் உதயநகர் கிழக்கு நாகதம்பிரான் வீதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலமைகள் அவ்வீதியை புனரமைப்பதன் அவசியமும் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.கூடவே சில பகுதிகளுக்கான குழாய் மூல குடிநீர் வியோகத்துக்கான கோரிக்கையும் தாய்சேய் நிலையத்தை நிர்மாணிப்பதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது .இச்சந்திப்பின் போது கட்சியின் குறித்த பிரதேச உதவி அமைப்பாளர் சுபாஷ் இரு கிராம சேவகர் பிரிவுகளின் உத்தியோகத்தர்கள், கரைச்சி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அப்பகுதி வாழ் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.000
Added a post
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 25 ஆம் தேதி மேஷம் -ராசி: பலதரப்பட்ட சிந்தனைகளால் அமைதியற்ற நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம் ராசி: புதுவித பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் செயல்படவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்மிதுனம் -ராசி: பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நுட்பமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விவசாய பணிகளில் அனுபவம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை கடகம் -ராசி: கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புசிம்மம் -ராசி:ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தான தர்ம செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். இழுபறியான வேலைகள் நிறைவு பெறும். தாயார் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்ப்பு விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கன்னி -ராசி: தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அசதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புதுலாம் -ராசி: சுபகாரிய பேச்சுவார்த்தை கைகூடும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைவிருச்சிகம்- ராசி: வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுபசெலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம் தனுசு -ராசி: பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மகரம் -ராசி:கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைகும்பம் –ராசி:செய்யும் செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பாகப்பிரிவினையில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மீனம் -ராசி: பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்த தன்மை விலகும். பணிபுரியும் இடங்களில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக செயல்படவும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதாயம் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெண்மை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
Added a post
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.5.2024சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 11.17 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று மாலை 03.19 வரை அஸ்வினி. பின்னர் பரணி.மகம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
Added a post
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை அன்று உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பும் அதனுடன் இணைந்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பணியாற்றுகின்றன. அந்த வகையில் இது குறித்து சென்னை ரெலா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறிய சில முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.ஆஸ்துமா உயிரிழப்பு இந்திய அளவில் 4.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில் அதில் பெரும்பாலான உயிரிழப்புகள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் தான் வருகிறது என மருத்துவர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறியுள்ளார். மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஆஸ்துமா இருமல் சளியை சாதாரண இருமல் சளி என நினைத்து தன்னிச்சையான சிகிச்சையை மேற்கொள்கின்றனர். மேலும் பலர் மூச்சு திணரல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் இருந்து Blue Inhaler-களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதன் பின்னால் இருக்கும் விளைவுகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர் தெரிவித்தார்.Blue Inhaler என்றால் என்ன?: இது ஒரு வகையான இன்ஹெய்லர் அதாவது மருந்து நிரப்பப்பட்ட அந்த இன்ஹெய்லரை நோயாளி தனது வாயில் வைத்து இழுப்பார். இப்படி செய்வதன் மூலம் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மூச்சு திணரல், நெஞ்சு பிடிப்பு உள்ளிட்ட பல உபாதைகளில் இருந்து விடுபடுவதுபோல் உணருவார். ஆனால் இது நிரந்தரமான தீர்வு தருமா? என கேட்டால் அது கட்டாயம் கிடையாது எனக்கூறுகிறார் மருத்துவர். இந்த salbutamol Blue Inhaler-ர் ஆஸ்துமாவிற்கான நிரந்தர தீர்வை தராது எனவும், இதனால் தற்காலிக ஆசுவாசம் பெரும் நபர்கள் மீண்டும், மீண்டும் அதை பயன்படுத்துவதாகவும் கூறினார். மருத்துவரின் ஆலோசனை இன்றி இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது காலப்போக்கில் ஆஸ்துமா அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாவதாகவும் மருத்துவர் பென்ஹூர் கூறியுள்ளார். மேலும், இது குறித்து 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வுகளும், இந்த Blue Inhaler பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு நோயாளிகளை அறிவுறுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சை எது?: ஆஸ்துமா நோயாளிகளுக்கான சிறந்த சிகிச்சை இன்ஹெய்லர் ஸ்டிராய்டுகள் மட்டும்தான். ஆனால் பலரும் ஸ்டிராய்டு என்ற வார்த்தையை கேட்டு பயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள தயங்குகின்றனர் என மருத்துவர் கூறியுள்ளார். இந்த இன்ஹெய்லர் ஸ்டிராய்டுகளை நோயாளிகள் பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பு பாதிப்புகள் குறைக்கப்படும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்னென்ன?நெஞ்சு இறுக்கம்மூச்சு திணரல்மூச்சு விடுகையில் விசில் சத்தம்வரட்டு இருமல்சளி இருமல்இவை ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகள். சரி ஒருவருக்கு ஆஸ்துமா இருக்கிறதா? இல்லையா? என்பதை எந்த வகையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என கேட்டபோது மருத்துவர் கூறிய பதிலை பாருங்கள்.ஆஸ்துமா பரிசோதனைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்?: முன்பு கூறிய அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அனுகி பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட் எடுக்க வேண்டும். அதாவது நுரையீரலின் அளவு மற்றும் திறன், மார்ப்பு பகுதியில் எக்ஸ்ரே, eosinophil count மற்றும் eosinophilia, IG போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனைகளை நீங்கள் மேற்கொள்வதன் மூலம் அந்த நபருக்கு ஆஸ்துமா இருக்கிறதா? இருந்தால் அதன் பாதிப்பு விகிதம் எவ்வளவு என்பது உள்ளிட்ட பல தகவல்கள் இதன் மூலம் கிடைக்கப்பெறும் எனக்கூறினார். மேலும், பலரை பரம்பரை நோயாக தாக்குகிறது இந்த ஆஸ்துமா எனவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.அலர்ஜிக்கும், ஆஸ்துமாவிற்கும் என்ன தொடர்பு?: அஸ்துமா வருவதற்கான முக்கியக் காரணம் அலர்ஜிதான் அதாவது ஒவ்வாமை. ஆரம்ப காலகட்டத்தில் ஆஸ்துமா தொடர்பான இந்த அலர்ஜி, நாசி ஒவ்வாமை போல்தான் தெரியும் என மருத்துவர் கூறியுள்ளார். இந்த அலர்ஜியானது, புழுதி, காற்று மாசு, பெர்ஃபியூம், கெமிக்கல்ஸ் உள்ளிட்டவற்றாலும் ஏற்படலாம். இதன் காரணத்தால் மூக்கில் தண்ணீர் வடிதல், அறிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் காலப்போக்கில் அந்த நபருக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஆஸ்துமாவுக்கும் அலர்ஜிக்கும் நெங்கிய தொடர்பு உண்டு. இந்த ஒவ்வாமைகள் உடலின் உள் எந்த உறுப்பை தாக்குகிறதோ அதற்கு ஏற்ற வாறு பாதிப்புகள் மாறுபடும். இது நுரையீரலை பாதிக்கும்போது அதை நாம் மூச்சுகுழாய் ஆஸ்துமா (Bronchial asthma) என கூறுகிறோம் என நுரையீரல் நிபுணர் பென்ஹூர் ஜோயல் ஷாட்ராக் கூறியுள்ளார்.
Added a news
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த தருணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தவறான கருத்தை நாட்டுக்கு வெளியிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Added a news
இலங்கையில சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று சபையில் தெரிவித்திருந்தார். சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.இவ்விடயம் தொடர்பாக பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரன,“2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.2015 ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 657 ஆகவும் 2016இல் 37 618 ஆகவும் 2017 இல் 43 835 ஆகவும் 2018இல் 50 310 ஆகவும் 2019 இல் 59 283 ஆகவும் 2020 இல் 63 914 ஆகவும், 2021 இல் 65 453 ஆகவும் 2022 இல் 67 706 ஆகவும்2023 இல் 62 549 ஆகவும் காணப்பட்டது.வருடாவருடம் நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிந்தது.எனவே இவ்விடயத்தில் அதிக கவனமெடுத்து சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது” என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.
Added article
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.நடிகை அதிதி ராவ் ஹைதராபாத்தில் பிறந்தவர், கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "பிரஜபதி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார். அதேபோல 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ஸ்ரீங்காரம்" என்கின்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.அதன்பிறகு பாலிவுட் உலகத்தில் கால் பதித்த நடிகை அதிதி ராவ் தொடர்ச்சியாக பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் "காற்று வெளியிடை", "செக்கச் சிவந்த வானம்", "சைக்கோ" மற்றும் "ஹே சினாமிகா" உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவருடைய நீண்ட நாள் காதலரான பிரபல நடிகர் சித்தார்த்தை விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி தங்களது நிச்சயதார்த்தத்தை தனது குடும்ப நண்பர்கள் மத்தியில் நடத்தி முடித்தனர்.அதேபோல நடிகை அதிதி ராவ், சத்தியதீப் மிஸ்ரா என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு கடந்த 2012 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். சத்தியதீப் மிஸ்ரா ஹிந்தி திரையுலகில் பல நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அவர் பல படங்களில் நடித்தும் வருகின்றார்.
Added a news
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள நாசாவின் முக்கிய இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையாக சுனிதா வில்லியம்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) 3வது முறையாக விண்வெளிக்குச் செல்லவிருந்தார். இந்நிலையில், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா (NASA) தெரிவித்துள்ளது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசாவின் முக்கிய விண்வெளி வீராங்கனை ஆவார். சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது 58 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருந்தார்.கடந்த 2முறை சென்ற போதும் சுனிதா வில்லியம்ஸ் பகவத்கீதையையும் தன்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் விண்வெளி நிலையத்தில் 322 நாட்கள் தங்கியிருக்கும் திட்டத்தில் இன்று (மே 7) சுனிதா விண்வெளிக்குச் செல்லத் தயாராக இருந்தார்.இந்த விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் இத்திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. ஏவுகணை ஏவப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் வால்வில் ஏற்பட்ட கோளாறுதான் இதற்கு காரணம் எனவும், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள இது வேறு ஒரு நாளில் ஏவப்படும் எனவும் நாசா தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசாவின் பேரி வில்மோர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
Added article
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் வெளியான "ஒரு நொடி" திரைப்படம் நல்ல ஒரு திரில்லர் படம் என்ற பாராட்டைப் பெற்று வருகிறது. ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இப்படக்குழு மற்றொரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படம் திகில் நிறைந்த கதையம்சம் கொண்டிருக்கிறது.அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷினி மற்றும் வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி.ரத்திஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக "புரொடக்ஷன் நம்பர் 1" என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜி. தனஞ்செயன் தனது கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யவுள்ளார்.ஒரு நொடி படத்தை இயக்கிய பி.மணிவர்மன் இயக்கும் இந்த படத்தில், ஒரு நொடி படத்தின் நாயகன் தமன் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் படக்குழு மற்றும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.தமன் குமார் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் மால்வி மல்ஹொத்ரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மைத்ரேயா, ரக்ஷா செரின் இணைந்து நடிக்கின்றனர். அருண் கார்த்தி, காளி வெங்கட், முனீஸ்காந்த், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, யாசர், சிவம், பேபி சஃபா, நக்கலைட்ஸ் நிவேதிதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ஜி.ரத்திஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கும் இந்த படத்திற்கு சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் புரொடக்ஷன் டிசைனராக எஸ்.ஜெ. ராம் பணியாற்றுகிறார். மிராகில் மைக்கேல் இப்படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதுகிறார்."ஒரு நொடி" படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் இதில் பணியாற்றுவது இந்த படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இப்படத்தின் தலைப்பு அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Added article
கேரள மாநிலம் மலையின்கீழு பகுதியை சேர்ந்தவர் கனகலதா. இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த கனகலதாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பார்க்கின்சன் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நோயில் இருந்து மீள்வதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் கனகலதா.நடிகை கனகலதா கடைசியாக நடித்த படம் பூக்காலம். இதையடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து சினிமா மற்றும் சீரியல்கள் இரண்டிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஒருகட்டத்தில் சிகிச்சைக்கு பணமின்றி தவித்த கனகலதாவிற்கு கேரள திரைப்பட சங்கமான அம்மா உதவிக்கரம் நீட்டியது. அதன்மூலம் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் கனகலதா.நடிகை கனகலதா தமிழிலும் சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த இருட்டு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை வி இசட் துரை இயக்கினார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கனகலதா அதன்பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவே இல்லை. இதனிடையே பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த கனகலதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 63.
Added a news
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குவதற்கு இன்று நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, வெல்கமவுக்கு மூன்று மாத விடுமுறை வழங்கப்பட வேண்டுமென முன்மொழிந்தார்.இந்நிலையில் குமார வெல்கம சுகயீன நிலையில் உள்ளதாகவும், அதனால் அவருக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.