அமரர் பராசக்தி முருகேசபிள்ளை

  • 1 members
  • 1 followers
  • 1474 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
  • 7
  • 7
  • 41
  • 69
Added a post 
காலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போ ஒரு பெரியவர் லிப்ட் கேட்டார். அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டேன்."எங்கய்யா போனும்?""தமிழரசன் கல்யாண மண்டபத்துக்குப் பின் புறம் தான் என் வீடு"."சரி வாங்க போலாம்". "திடீர்னு எலப்பு வந்திருச்சி அதான் ஆஸ்பத்திரி வந்து ஊசி போட்டேன். பஸ்ஸுக்கு நின்னு நின்னு பார்த்தேன் பஸ் வரல. உடம்புக்கு வேற முடியல அதான் லிப்ட் கேட்டேன். யாரும் நிறுத்தல நீங்க தான் நிறுத்திருக்கீங்க". "சரி ஐயா, உங்களுக்குப் பசங்க இல்லையா?""இல்ல தம்பி! நாலு பொண்ணுங்க தான். ஒன்னு செத்து போச்சி, மூன்று பேத்துக்கு கல்யாணத்தை முடிச்சிட்டேன். பொண்டாட்டியும் இறந்துட்டா. இப்போ நான் மட்டும் தனியாத் தான் இருக்கேன்". "எப்படி தனியா இருக்கீங்க?""ஒரு பொண்ணு மாசம் ஆயிர ரூவா கொடுப்பா, ஒரு பேரன் 500 ரூவா கொடுக்கான். அதை வச்சிட்டு மதியம் அம்மா உணவகத்தில் சாப்ட்ருவேன். காசு இருந்தா நைட் சாப்பாடு. இல்லனா தண்ணிய குடிச்சிட்டுப் படுத்துக்கிட வேண்டியது தான்". "முதியோர் பென்சன் வாங்கறீங்களா?""அதுக்கு அப்ளை பண்ணேன். அவன் 5000 ரூவா கேட்டான். என்னிடம் மூவாயிரம் ரூவா தான் இருக்குன்னு சொன்னேன். அதுக்கு அவன் 3000 ரூவா உயரதிகாரிகளுக்கே சரியாப் போயிடும். எனக்கு வேண்டாமானு கேட்கறான்". "காசெல்லாம் ஒண்ணும் தர வேண்டாம். நான் ஒரு நம்பர் தர்றேன், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை நம்பர். அதுக்கு போன் பண்ணி புகார் கொடுங்க. அப்புறம் அவங்க சொல்றபடி செய்யுங்க. மத்ததை அவங்க பார்த்துப்பாங்க". "தம்பி நான் எப்படி அவங்ககிட்ட பேச?", (தயக்கத்தோடு).பின் நானே அவர் செல்லில் இருந்து போன் பண்ணி புகார் பண்ணேன். அந்த பெரியவரிடமும் பேச வைத்தேன். இன்றைக்கே நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்."ரொம்ப நன்றி தம்பி! ஏன் வண்டிய திருப்பறீங்க? நீங்க இந்த பக்கம் போகலையா?""இல்லை ஐயா, உங்களை வீட்டில் விடறதுக்கு தான் வந்தேன். என் வீடு ரொம்ப முன்னாடியே இருக்கு!". என்றேன்.
  • 70
Barrie தமிழ் மகன் ஒரு மில்லியன் பணத்தினை லாட்டரி மூலம் வென்றுள்ளார்.
  • 96
Added article 
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை பொறுத்தவரை அவர்களின் குரல் வளம் மங்காத வரையில் அவர்கள் ஜொலித்துக்கொண்டே இருப்பார்கள். வயதானாலும் பல பாடகர்களில் குரல் இளமையாகவே இருக்கும். பாடகர்களை பொறுத்தவரை வயது ஒரு பொருட்டே கிடையாது.ஆனால் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் இதயத்தை குளிர்வித்த குரல், திடீரென காணாமல் போவது என்பதை பலரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்று. அவ்வாறு தமிழ் இசை ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டு பின்னாளில் திடீரென மாயமாய் மறைந்த பாடகிதான் ஜென்சி.கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜென்சி, தனது சிறு வயதிலேயே மேடை கச்சேரிகளில் பாடத்தொடங்கினார். அப்போது பிரபல பாடகர் ஜேசுதாஸுடன் இணைந்து பாடுவதற்கான வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. அந்த காலகட்டத்தில் மலையாள திரைப்படங்களில் இடம்பெற்ற பல பாடல்களை ஜென்சி பாடியிருந்தார்.இதனை தொடர்ந்து ஜேசுதாஸ் ஒரு முறை இளையராஜாவிடம் ஜென்சியை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை பாடினார் ஜென்சி. குறிப்பாக “முள்ளும் மலரும்” படத்தில் இடம்பெற்ற “அடி பெண்ணே”, “ப்ரியா” படத்தில் இடம்பெற்ற “என்னுயிர் நீதானே”, “ஜானி” படத்தில் இடம்பெற்ற “என் வானிலே”, “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் இடம்பெற்ற “காதல் ஓவியம்” போன்ற காலத்துக்கும் ரசிக்கப்படும் பாடல்களை உதாரணமாக கூறலாம்.இளையராஜா இசையில் பல கிளாசிக் பாடல்களை பாடிய ஜென்சி, திடீரென இனி பாடல்கள் பாடப்போவதில்லை என முடிவெடுத்ததாக கூறப்பட்டது. மேலும் கேரளாவில் ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினாராம் ஜென்சி.ஜென்சி வளர்ந்து வந்த காலகட்டத்தில் “கேரளாவை விட்டு சென்னை வந்து செட்டில் ஆனால் மிகப்பெரிய பாடகியாக புகழ் பெறலாம்” என இளையராஜா கூறினாராம். ஆனால் ஜென்சியின் தந்தை சென்னைக்கு மாற்றலாவதற்கான ஒப்புதலை ஜென்சிக்கு தரவில்லையாம்.மேலும் ஜானகி, பி.சுசிலா போன்ற முன்னணி பாடகிகள் இருக்கும்போது நமக்கெல்லாம் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஜென்சி பாடுவதை நிறுத்திக்கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இதில் என்னவென்றால், தமிழ் நாட்டில் நம் குரலுக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே ஜென்சிக்கு தெரியாதாம். அவர் பாடும் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படத்தை கூட அவர் பார்த்ததில்லையாம். 1980களில் கேரளாவில் தமிழ் திரைப்படங்களை அவ்வளவாக திரையிடும் வழக்கம் இல்லை என்பதுதான் இதற்கு காரணமாம். இவ்வாறு ஜென்சி பாடுவதை நிறுத்தியதற்கான காரணமாக பல கூறப்படுகிறது.இது குறித்து தனது வீடியோவில் பேசிய பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் “ஜென்சியின் பயணம் தடை பட்டதற்கு இவைகள்தான் காரணம் என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. ஜென்சி ஒரு காலகட்டத்தில் திரைப்படங்களில் பாடுவதில்லை என்ற முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டபோது அவர் நிஜமாகவே அப்படி கூறினாரா இல்லையா என்பதை இங்குள்ள இசையமைப்பாளர்கள் கேட்டுத் தெரிந்துக்கொண்டிருக்கலாமே? அவரை தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு அவர் வெகு தூரத்தில் எல்லாம் இல்லை. கேரளாவில் கொச்சி பகுதியில்தான் குடியிருந்தார்.இதை எல்லாம் நினைத்துப்பார்க்கும்போதுதான் ஜென்சி தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய மர்மம் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த மர்மம் என்ன என்பதை அறியாதவராக ஜென்சியும் இருப்பதுதான் இதில் வேடிக்கை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • 107
Added a news 
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுகவினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கழகத்தினர் கவனத்திற்கு… நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து கட்சியினர் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கட்சியினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள்.இதில் வாக்குச்சாவடி பாக முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான பயிற்சியினை நமது கட்சி சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
  • 123
Added a news 
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை அடுத்த வேம்பனி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸில் பணிபுரிந்து வருகிறார். காவல்துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் செய்து தந்திருக்கிறது. அதன்படி தனக்குரிய தபால் வாக்கை செலுத்திய சதீஷ்குமார், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை வாக்களித்த வீடியோவுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு அவர் வாக்களித்தது வெளிப்படையாக தெரிய வந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் பாஜக தரப்பிலிருந்து மற்றவர்களுக்கு செய்தியாக பரப்பி வருகின்றனர். 'தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைத்து உறவுகளும் உணர்ச்சிவசப்படாமல் வாக்களிக்க வேண்டுகிறோம். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்று பாஜகவினர் ஒருவருக்கொருவர் செய்திகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
  • 123
Added article 
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரபலங்கள் பலரும் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாது வாக்களிக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், 'வாக்களிக்கும் உரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். 2024 மக்களவைத் தேர்தலில் அதிகமான இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவே, வாக்களிக்க தகுதி உள்ள இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களித்து சாதனை படைக்க வேண்டும்.அனைத்து மக்களும் குறிப்பாக, இளைஞர்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டையை பெற்று உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை கொண்டாடும் பணியில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறியுள்ளார்.ஏ.ஆர் ரகுமானின் ’வாக்களிக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வு பதிவை பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
  • 127
Added a news 
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். முக்கியமாக, விஜய பிரபாகரன் தாயாரும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் சில நாட்கள் விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது மக்களிடையே பேசிய அவர்,"வேட்பாளர் விஜய பிரபாகரன் என் பிள்ளை இல்லை; இனி அவர் உங்கள் வீட்டு பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை. அவருக்கு இன்னும் திருமணம்கூட நடைபெறவில்லை. உங்களுக்காகவே உழைக்க வந்திருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றதும் உங்கள் தலைமையில்தான் அவரின் திருமணத்தை நடத்திவைப்பேன்" என்று உருக்கமாக கூறியிருந்தார். தாய் பிரேமலதாவை தொடர்ந்து, அவரது சகோதரர் சண்முகப் பாண்டியனும் விஜயபிரபாகரனுக்காக விருதுநகர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.வீதி வீதியாக சென்று தனது சகோதரருக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.விருதுநகரில் அவரது சகோதரர் விஜயபிரபாகரனுக்காக அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சண்முக பாண்டியன் உட்பட அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • 131
Added a news 
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணம் தாலுகாவில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் நேற்று மாலை ஐஸ் கிரீம் விற்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஐஸ் கிரீம் வாங்கியுள்ளனர். அவர்கள் ஐஸ் கிரீம் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.ஐஸ் கீரிம் சாப்பிட்ட ஒன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான பூஜா, பிரசன்னா வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது தாய் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரேகெரே காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து, உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர்களது தாய் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஐஸ் கிரீம் விற்க வந்த நபரை தேடி வருகின்றனர். ஐஸ் கிரீம் சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • 129
Added a news 
பெங்களூரு விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் படம் பிடித்து சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டதாக யூடியூபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வருமானம் கொழிக்கும் தொழில்களில் யூடியூப் சேனல் நடத்துவதும் ஒன்றாகி விட்டது. படித்தவர் முதல் படிக்காதவர் வரை பலர் யூடிப் துவங்கி பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டி அதன் மூலம் பெறப்படும் விளம்பரங்களில் கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து வருகின்றனர்.இதற்காக அதிர்ச்சி தரும் வகையிலும், சட்டவிரோதமாகவும் காட்சிகளைப் படம் பிடித்து பலர் போலீஸாரிடம் சிக்கிக் கொள்கின்றனர். அப்படி பெங்களூருவில் சிக்கிக் கொண்ட யூடியூபர் பெயர் விகாஸ் கவுடா.அப்படி இவர் என்ன செய்து விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம். பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாஸ் கவுடா வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், விமான நிலைய ஓடுபாதையை படம் பிடித்துள்ளார்.அத்துடன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் விகாஸ் கவுடா வெளியிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட விமான நிலைய பகுதிக்குள் சென்று வீடியோ எடுத்து அதை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட தேவனஹள்ளியைச் சேர்ந்த விகாஸ் கவுடாவை , விமான நிலைய போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.அவர் விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் சுமார் நான்கரை மணி நேரம் இருந்து வீடியோ எடுத்தது தற்போது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து யூடியூபர் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 152
Added a news 
ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி அளித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை.அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. கருப்பு கரடிகளைத் தவிர பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படுமென ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற கரடிகள் வாழ்கின்றன. அதேபோல் ''சுகினோவாகுமா'' எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன. 2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர். இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்சமாகும். அத்துடன் கரடிகள் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டில் பிடிபட்ட கரடிகளின் எண்ணிக்கை 9,319 ஆக உயர்ந்தது.
  • 160
Added a news 
இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய மற்றும் பயங்கரமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி எச்சரித்துள்ளார்.ஹமாஸ் அமைப்புக்கு உதவி செய்வதாக கூறி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1-ம் தேதியன்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதில் இரண்டு ராணுவ உயரதிகாரிகள் உள்பட ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை முறியடித்தது இஸ்ரேல். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தச் சூழலில், ”இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக்கொள்ள வேண்டும்” என்று ஈரான் சமீபத்தில் எச்சரித்தது. “இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும்” என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.ஈரானின் தெஹ்ரான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த அணிவகுப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் நீண்ட தொலைவு சென்று தாக்கக் கூடிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதிகள், உயரதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை பார்வையிட்ட பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும். சிறிய அளவிலான படையெடுப்பில் இஸ்ரேல் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்தார். இந்தநிலையில் ஈரான் தாக்குதலில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி ஐரோப்பிய நாடுகள் கேட்டு கொண்டுள்ளன. இதேபோன்று, இஸ்ரேலின் கூட்டணி நாடுகளும் நெதன்யாகுவிடம் தாக்குதலை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆனால், ”கூட்டணி அரசுகளின் கோரிக்கை ஒருபுறம் இருந்தபோதும், தற்காப்புக்காக இஸ்ரேல் தன்னுடைய சுய முடிவை எடுக்கும்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 
  • 156
Added a news 
மோசடி வழக்கில் தொழிலதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.பிட்காயின் வடிவில் மாதம் 10 சதவீத வருமானம் என தவறான வாக்குறுதி அளித்து கடந்த 2017ம் ஆண்டில் ரூ. 6,600 கோடி நிதியை மக்களிடம் வசூலித்து மோசடி சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில், மறைந்த அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் பலர் மீது மகாராஷ்டிரா, டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தை விசாரிக்க துவங்கியது.இந்த மோசடியின் மூளை என கருதப்படும் மறைந்த அமித் பரத்வாஜிடமிருந்து, தொழிலதிபர் ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை (ரூ.150 கோடிக்கும் மேல் மதிப்புடையது) பெற்றதாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கில் சிம்பி பரத்வாஜ், நிதின் கவுர், நிகில் மகாஜன் ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். மேலும், இந்த வழக்கில் ரூ.69 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள், ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை உள்ளிட்ட சொத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002 விதிகளின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
  • 164
Added a post 
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தமது எக்ஸ் தள பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார். இது எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 147
Added a post 
உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.இத்தாக்குதல் தொடர்பிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆன்மீக தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதாகவும், அதன்படி 20 ஆம் திகதி பிற்பகல் முதல் 21 ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு,  காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை இவ் ஊர்வலம் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 167
Added a post 
தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.அதன்படி நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதுஇப்போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்திருந்ததுஇன்னிலையில் பதிலுக்கு களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி 44 ஓவர்கள் 3 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.இதில் இலங்கை சார்பாக இலங்கை அணி தலைவி சாமரி ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் உட்பட 195 ரன்கள் எடுத்திருந்தார்இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஒட்டம் இதுவாகும் என்பதுடன் அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக் கொண்டார்.000 
  • 167
Added a post 
இந்தோனேசியாவின் சுலவெசி தீவில், எரிமலை ஒன்று பலமுறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள டானா டோராஜா என்ற இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 18 பேர் உயிரிழந்தனர்.இந் நிலையில், நேற்று (17) சுலவெசி தீவில், ருவாங் என்ற எரிமலை, ஐந்து முறைகள் வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.அப்பகுதி முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் 800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.மேலும், இந்தோனேஷியா விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், எரிமலையை சுற்றி 6 கி.மீ தொலைவுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் இருக்கக் கூடாது எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சுனாமி தாக்கக்கூடிய ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.சமீபத்திய நிலநடுக்கங்களால் டெக்டானிக் அடுக்குகளில் ஏற்பட்ட தாக்கமே இந்த எரிமலை வெடிப்புக்கு காரணம் என இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000 
  • 167
Good Morning
  • 194
  • 197
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, சித்திரை மாதம் 5 ஆம் தேதி மேஷம் -ராசி: புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மனதளவில் புதிய இலக்குகள் பிறக்கும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்ரிஷபம் ராசி: சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதையும் சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் கைகூடிவரும். புதிய பங்குதாரர்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உழைப்புக்குண்டான மதிப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைமிதுனம் -ராசி: பேச்சுத்திறமையின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்களை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கடகம் -ராசி: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்சிம்மம் -ராசி:உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். சில நினைவுகளால் மனதில் ஒருவிதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின் நிறைவேறும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மத்தியமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைதுலாம் -ராசி: மனதில் முன்னேற்றத்திற்கான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணிபுரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். வெற்றி பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு விருச்சிகம்- ராசி: எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை தரும். வருவாய் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஊதா தனுசு -ராசி: பயணங்களால் ஏற்பட்ட சோர்வுகள் விலகும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செயல்படுவதன் மூலம் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பணி நிமிர்த்தமான சில ஆலோசனைகள் கிடைக்கும். தர்ம காரியங்களின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மகரம் -ராசி:சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிராமல் இருப்பது நல்லது. நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் காலதாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் நன்மை உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்கும்பம் –ராசி:பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வேலையாட்கள் இடத்தில் மதிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சக ஊழியர்களின் ஆதரவால் திட்டமிட்ட காரியங்கள் நிறைவுபெறும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமீனம் -ராசி: தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு தொடர்பான காரியத்தில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் சில புதிய வாய்ப்புகள் ஏற்படும். வித்தியாசமான செயல்பாடுகளால் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 247
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை 18.4.2024. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.35 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று காலை 10.55 வரை ஆயில்யம். பின்னர் மகம். கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 232
Gas prices maybe go up.
  • 291
Good Morning...
  • 231
Added a news 
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.வேலூர் தொகுதி முழுவதும் பலாப்பழம் சின்னத்துக்கு வாக்கு அளிக்க கோரி பிரச்சாரம் செய்துவந்தார். இந்நிலையில், இன்று குடியாத்தம் பகுதியில் அவர் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
  • 307
Added article 
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘தங்கலான்’ படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌‘தங்கலான்’ படத்தில் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை… பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
  • 286