<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Top Posts RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/posts/rss/top]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/posts/rss/top" rel="self" type="application/rss+xml" /><description>Top Posts RSS</description><lastBuildDate>Wed, 30 Jul 2025 13:52:15 GMT</lastBuildDate><item><title><![CDATA[சிறுநீரகக்கல் பிரச்சனையா?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/so1qwr]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/so1qwr]]></guid><description><![CDATA[<p>சிறு பீளைச்செடி........ இதன் தாவரப் பெயர் : Aervalanata. தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae. இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள். இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே! இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.! ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும். மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும். சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது! இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம். மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம். இதை உட்கொள்ளும் போது மருந்து  வேளை செய்தால் சிலருக்கு  வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை. இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்  நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம். சிறு நீரகக்கல் வந்தவர்கள்  ஆபரேஷன் செய்திருப்பினும்  மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.... <a href="https://tamilpoonga.com/view-post/so1qwr">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/rkmnh2sr2tmeumyzmijpqylfsgpkvywn.jpg" />]]></description><pubDate>Wed, 30 Jul 2025 13:52:15 GMT</pubDate></item><item><title><![CDATA[பூதம் கொடுத்த வரம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/11ajqux]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/11ajqux]]></guid><description><![CDATA[<p>ஒரு ஓட்டலுக்குள்ள தன்னோட தீக்கோழியோட நுழைஞ்சு அவன் ஓரமா இருக்குற டேபிள்ல போய் உட்காந்தான்.என்ன சாப்புடறீங்கன்னு கேட்ட லேடி சர்வரை பாத்து...... ஒரு ஆனியன் ரவா தோசை, மெது போண்டா ஒரு பிளேட், ஒரு பில்ட்டர் காபின்னு சொல்லிட்டு உனக்கு என்ன வேணும்னு தீக்கோழிகிட்ட கேட்டான். எனக்கும் சேம் foodனு அது சொல்லுச்சு. தின்னு முடிச்சதும் அந்த லேடி சர்வர் பில் கொண்டு வந்துட்டு சார்...243 ரூபாய் ஆச்சு சார்னு சொன்னா.பேன்ட் பாக்கெட்ல கை விட்டவன் கரெக்ட்டா 243 ரூபாயை எடுத்தான். குடுத்துட்டு போயிட்டே இருந்தான்.மறுநாள் வந்தான். அதே ஆர்டர் ரிப்பீட்டு. அதே பில் அமவுண்ட் ரிப்பீட்டு.அதுக்கு அடுத்த நாளும் அதே ஆர்டர் ரிப்பீட்டு. அதே பில் அமவுண்ட் ரிப்பீட்டு. இப்படியே 10 நாள் போச்சு.11 வது நாள் வந்தவன் பொங்கல், ஒரு மசால் தோசை , 2 சாம்பார் வடை, ஒரு டீன்னு ஆர்டர் பண்ணான். தீக்கோழிகிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டான்.நீங்க சொன்ன அதே ஆர்டர்தான் எனக்கும்னு அது சொல்லுச்சு. இந்த 382 ரூபாய் பில் வந்துச்சு. வழக்கம் போல பேன்ட் பாக்கெட்ல கை விட்டவன் கரெக்ட்டா 382 ரூபாய் எடுத்து குடுத்தான்.அதை பாத்த லேடி சர்வர் ஆர்வம் தாங்க முடியாம எப்படி சார் ஒவ்வொரு வாட்டியும் பில் தொகையை கரெக்ட்டா பேன்ட்லேருந்து எடுத்து குடுக்குறீங்கன்னு கேட்டா.அதுக்கு அவன், ரெண்டு வருஷம் முன்னாடி ...... ஒரு பழைய விளக்கை துடைச்சிக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு பூதம் வெளிய வந்து, என்னை விடுதலை பண்ணதுக்கு நன்றி. எதாவது ரெண்டு வரம் கேளு. தர்றேன்ன்னு சொல்லுச்சு. ரொம்ப யோசிச்சிட்டு நான் எப்ப வேணும்னாலும் எதை வாங்கினாலும் அந்த பில் அமவுண்ட் என் பேன்ட் பாக்கெட்டிலிருந்து வரணும்னு வரம் கேட்டேன். காபி குடிச்சாலும் சரி., கார் வாங்கினாலும் சரி. பில் அமவுண்ட் என் பேன்ட் பாக்கெட்ல வந்துடும்னு சொன்னான்.ஆச்சரியப்பட்ட லேடி சர்வர், சரி. இதென்ன தீக்கோழின்னு கேட்டா.நீளமா ஒரு பெருமூச்சு விட்டுட்டு, நீளமான கொழுத்த காலோட, புஸ்சுபுசு உடம்போட , செம்ம கட்டையா இருக்குற,நான் என்ன சொன்னாலும் கேக்குற, எப்பவும் எனக்கு சரிங்குற பதிலை மட்டுமே தர்ற சூப்பர் ஃபிகர் வேணும்னு கேட்டேன்.இதை குடுத்துட்டு அந்த பாழா போன பூதம் மறைஞ்சு போயிடுச்சுன்னு சொன்னான்.... <a href="https://tamilpoonga.com/view-post/11ajqux">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/ahwv3hhsqa2ndwkwecjrtmmgzr25um5p.jpg" />]]></description><pubDate>Fri, 06 Jun 2025 21:15:35 GMT</pubDate></item><item><title><![CDATA[வீர சிவாஜி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/வ-ர-ச-வ-ஜ]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/வ-ர-ச-வ-ஜ]]></guid><description><![CDATA[<p>சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது.நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது…ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார்.ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன.மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார்.அங்கே ஓரிடத்தில்…சிவாஜி கண்ட காட்சி, அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம்? அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன.அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன.மறுநாளும்…சிவாஜி அந்த ஞானியைத் தரிசிக்கப் போன போது ஞானி வழக்கப்படி இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.அவரைச் சுற்றிக் கூடியிருந்த காட்டு விலங்குகள் எல்லாம் கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன.மஹாஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட இராம மந்திர இசை ஓசையில் ஆற்றின் சலசலப்பும் மரங்களின் இலைகள் அசைகின்ற ஓசையும் அடங்கிப் போய்விட்டன.அதுவரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அவர் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார்.அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார்.அது மட்டுமன்று. ஒப்பற்ற அந்த சீலரையே தம் மானசீக குருவாகவும் ஏற்கத் தொடங்கி விட்டார் சிவாஜி.ஒரு நாள்.அந்த மஹா ஞானி தனிமையில் இருந்தார். சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். “குருநாதா! அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள்!” என வேண்டினார்.அப்போதுதான் அந்த ஞானியின் திருநாமம் ‘சமர்த்த இராமதாசர்’ என்பதை சிவாஜி அறிந்து கொண்டார்.தகுதி உள்ளவர்கள் வந்து உபதேசம் செய்யும்படி கேட்டால் அதை மறுக்கக் கூடாது. உபதேசம் செய்ய வேண்டும்.அதனால் சமர்த்த இராமதாசர் சிவாஜிக்கு இராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்... <a href="https://tamilpoonga.com/view-post/வ-ர-ச-வ-ஜ">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/jfrpebdjkse76mtlr9hzyljrrmdqcknx.jpg" />]]></description><pubDate>Mon, 02 Jun 2025 23:59:11 GMT</pubDate></item><item><title><![CDATA[பங்குச் சந்தை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/பங-க-ச-சந-த]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/பங-க-ச-சந-த]]></guid><description><![CDATA[<p>ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்..!ஒரு குரங்க நூறு ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சானாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்கை காசு கொடுத்து வாங்கிவாங்களாம்னு யோசிச்சாங்களாம். இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்களை புடிச்சு வியாபாரி கிட்ட கொடுத்து, அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம். இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய மக்கள் குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம்.கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தருவதாக சொன்னானாம். அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனே குரங்கு புடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பாக்கி இருக்கிற குரங்குகளை எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி.ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு.. ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் புடிச்சி வித்து, ஒன்னுக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம். வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க.ஒரு வாரம் தான் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்க 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி.தன் வேலைக்காரன கூண்டில இருக்கிற குரங்குகள எல்லாம் பாத்து பராமறிக்க சொல்லிட்டு, தன்னோடு ஊருக்கு போனானாம் வியாபாரி.பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.அத பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்க 700 ரூபாய்க்கு விக்கிறதா சொன்னானாம்.காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினா, எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க.அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகளை வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு.ஒரு குரங்க 700 ரூபாய்க்கு வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகள வாங்க, ஏழைங்க கடனவுடன வாங்கி, கொஞ்சம் குரங்குகள வாங்குனாங்களாம்.குரங்குகள எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம்.யாருமே வரல..! எல்லாரும் அந்த வியா... <a href="https://tamilpoonga.com/view-post/பங-க-ச-சந-த">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/w7h99eawf88dcnra96skxea4ucpiqdnn.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 00:00:56 GMT</pubDate></item><item><title><![CDATA[சாதுர்யமான பேச்சு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1vbtcdv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1vbtcdv]]></guid><description><![CDATA[<p>ஒரு நிறுவனத்தில் செயலர் பதவிக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரே கேள்வி. “பத்தடி ஆழம். பத்தடி அகலம் கொண்ட குழியில் நீங்கள் வீழ்ந்துவிட்டால் “எப்படி வெளியே வருவீர்கள்?” என்பதுதான்.ஓலமிட்டு உரக்க ஒலி எழுப்புவேன் என்றார் ஒருவர். சிறுகச் சிறுக முயற்சித்து ஏறிவிடுவேன் என்றார் மற்றொருவர். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.கடைசியில் ஒருவர் கேட்டார். “தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?”“இல்லை” என்றனர் தேர்வுக் குழுவினர்.“நான் விழுந்தது பகலிலா? அல்லது இரவிலா?”“ஏதற்குக் கேட்கிறாய்?” என்றனர் தேர்வுக் குழுவினர்.இவர் கூறியதாவது. “பகலில் குழியில் விழ நானொன்றும் கண் பார்வையற்றவர் இல்லை. கவனக் குறைவானவரும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் அல்ல. அதனால், கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை என்றான்.அவர் பதில் மனநிறைவு ஏற்படுத்தியது தேர்வுக் குழுவினர்க்கு. அவரது வாக்குத்திறமை அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது.ஆளுமை என்பது ஒரு திறமை, அதுவே மிகை ஆற்றலாகும். திறமை என்பது மற்றவரை ஏமாற்றுவதோ, தன் செயலை சாதித்து கொள்வதோ இல்லை! ° திறமை என்பது பேச்சுத் திறமை, அறிவுக் கூர்மை, தெளிந்த சிந்தனை, நம்பிக்கை, சரியாக முடிவெடுக்கும் திறமை, முடிவெடுக்கும் திறன். எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்து விடுவதில்லை!... <a href="https://tamilpoonga.com/view-post/1vbtcdv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/kkmfmyidbltqn7u2cjqbvmt2eukjtbhg.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 00:03:50 GMT</pubDate></item><item><title><![CDATA[அப்பா செக்யூரிட்டியா?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/அப-ப-ச-க-ய-ர-ட-ட-ய]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/அப-ப-ச-க-ய-ர-ட-ட-ய]]></guid><description><![CDATA[<p>"சிவானி... உன் அப்பா எந்த ஆபீஸ்ல வேலை பார்க்கிறதா சொன்னே?"கல்லூரியில் மதிய உணவு இடைவேளையில் அமர்ந்திருந்தபோது, தோழி ஆதிரையின் கேள்வி கேட்டு சிவானி நெற்றியைச் சுருக்கினாள்."அப்பா சிட்டி கிராண்ட் ஹோட்டலில்... ஏன் இப்போ திடீர்னு அப்பாவைப் பத்தி ஒரு கேள்வி?""அட சும்மா... அங்க என்ன வேலை உன் அப்பாவுக்கு?"ஆதிரை மீண்டும் கேட்க, சந்தேகித்து மெதுவாக அவள் பக்கம் திரும்பினாள் சிவானி."அங்க அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டெண்ட். என்னடி, என்ன விஷயம்? நீ அங்க எங்காவது போனப்போ அப்பாவைப் பார்த்தியா?""ஆமா... பார்த்தேன். நேத்து எங்க வீட்டுல ஒரு விழா அங்க நடந்தது. போனப்போ உன் அப்பா பார்க்கிங் ஏரியால யூனிஃபார்ம் போட்டுட்டு நின்னு அட்மினிஸ்ட்ரேஷன் பண்றதை பார்த்தேன்... உண்மையைச் சொல்லணும்னா, அவர் வேலையில் பக்கா பெர்ஃபெக்ட்னு என் அப்பா சொன்னார். கூட்டமா இருந்ததுனால எங்க காரை பார்க் பண்ண உதவினது உன் அப்பாதான். அதுக்கு டிப்ஸா நூறு ரூபாயும் கொடுத்திருக்கோம்."பதிலுடன் ஆதிரை வாய்விட்டுச் சிரித்தாள். அதைக்கேட்டு உடனிருந்த நண்பர்களும் சிரிக்க, ஒன்றும் புரியாமல் ஆதிரையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிவானி."டீ, நீ என்ன சொல்ற? பார்க்கிங்கில்? அங்க என்ன வேலை அப்பாவுக்கு? உனக்கு ஆள் மாறிப் போயிருக்கும்.""ஆள் எல்லாம் மாறல சிவானி. நான் பார்த்திருக்கேனே உன் அப்பாவை... அவர் அங்க செக்யூரிட்டிதானே? அப்புறம் என்ன புளுகு நீ எங்ககிட்ட புளுகின? அப்பா அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டெண்ட்னு..."மீண்டும் மீண்டும் ஆதிரை வாய்விட்டுச் சிரித்தாள். அதைக் கேட்டு அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவானி."அப்பா செக்யூரிட்டியா?"கேட்டது அவளை முழுவதுமாக உலுக்கியது."அப்பா ஆபீஸ்ல டை எல்லாம் கட்டி நிக்கணும் கண்ணே. அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்டாப் எல்லாம் நல்ல டிரஸ் பண்ணியிருக்கணும். அதனால ஆபீஸ்ல போடுறதை நான் அங்க எங்க ஓய்வறையில் வாங்கி வச்சிருக்கேன். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இல்லையா அது. எங்களுக்கு அங்க தனி ரூம் இருக்கு. அங்கேயே சலவைக்குக் கொடுத்து அயர்ன் பண்ணி வாங்குவோம்... வீட்ல எல்லாம் கொண்டு வந்து துவைத்தால் சரி வராது... இங்கிருந்து எந்த டிரஸ்ஸில் போனாலும் ஆபீஸ்ல போய் அப்போதே டிரஸ் மாத்திடுவோம் நாங்கள்."எப்போதும் பழைய உடைகளையெல்லாம் அணிந்து செல்லும் அப்பாவிடம் ஒருமுறை விசாரித்தபோது சொன்ன பதில்தான் இது. ஒருமுறை அதை மனதில் நினைத்துப் பார்க்க, சி... <a href="https://tamilpoonga.com/view-post/அப-ப-ச-க-ய-ர-ட-ட-ய">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/ht3anrphbacprfluuvfzm4l4sddgbbeb.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 00:05:09 GMT</pubDate></item><item><title><![CDATA[யார் அவர்?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/ய-ர-அவர]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/ய-ர-அவர]]></guid><description><![CDATA[<p>சுற்றுலா பயணிகளை அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு டூர் அனுப்பி வைக்கும் டிராவல் ஏஜென்சியின் உரிமையாளர் ரமேஷ் மிகுந்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.அந்த மாதத்திற்கான அனைத்து டூர் பேக்கேஜ்களும் நிரம்பி இருந்தன. அடுத்த மாதத்தில் எந்தெந்த இடங்களுக்கு டூர் பேக்கேஜ் போடலாம் என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அலுவலகத்திற்கு வெளியே தயக்கத்துடன் நின்றிருந்த ஒரு முதிய தம்பதியினர் கண்களில் பட்டனர்.உற்றுக் கவனித்தான்.இருவரும் ஒட்டி நிற்காமல் தள்ளி தள்ளி நின்று அலுவலக முகப்பு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த டூர் பேக்கேஜ் லிஸ்ட்டுகளை வாசித்து கொண்டிருந்தார்கள்.வாசித்து முடித்து டூர் பேக்கேஜுக்கான விலையை பார்த்ததும் இருவரும் பெருமூச்சு விட்டார்கள்.ரமேஷுக்கு புரிந்து போனது. அவர்களிடம் பணம் இல்லை. டூர் போவது சம்பந்தமாக அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு இருக்கிறது. அதான் ஒற்றுமையாக நிற்காமல் தள்ளி தள்ளி நின்று கோபத்தை மௌனமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.ரோலிங் சேரை விட்டு எழுந்து வெளியே போனவன் அந்த முதிய தம்பதியினரை உள்ளே அழைத்து அமர சொன்னான்.தயக்கத்துடன் தள்ளி தள்ளி அமர்ந்தார்கள். அவர்களிடம் பேசினான்,'என்னுடைய டூர் பேக்கேஜ் எல்லாமே இன்ட்ரஸ்டிங்காவும் ரொம்ப பாதுகாப்பாவும் இருக்கும். ஆனால் விலை ரொம்ப காஸ்ட்லி. உங்களால அந்த அளவுக்கு பணம் தர முடியாது.உங்களைப் பார்த்தால் டூர் போகணும்னு ஆசைப்படுறவங்க மாதிரி தெரியுது. இந்த மாசம் எனக்கு அதிக அளவு லாபம் வந்திருக்கு. அதனால என் செலவிலேயே உங்களை டூருக்கு அனுப்பி வைக்கப் போறேன். உங்களுக்கு சம்மதமா?''சம்மதம்' என அவர்கள் சந்தோஷமாக தலையாட்டினார்கள்.அவர்கள் கண்ணெதிரிலேயே இரண்டு விமான டிக்கெட்டுகளைப் புக் செய்தான். வெளிநாட்டில் அவர்கள் தங்குவதற்கு மிகச்சிறந்த ரூமை புக் செய்தான்.டூர் செல்வதற்கான நாள் வந்தது.அந்த முதிய தம்பதியினர் டூர் கிளம்பி போனார்கள்.வயதான கணவன் மனைவி தம்பதியினரின் நீண்ட நாள் ஆசையை தீர்த்து வைத்த ஒரு திருப்தி அவனுக்குள் வந்தது.ஒரு மாதம் கழித்து அந்த தம்பதியரில் வயதான பெண்மணி மட்டும் ரமேஷை பார்க்க வந்திருந்தாள்.ரமேஷ் அந்த பெண்மணியை உற்சாகமாக வரவேற்று கேட்டான்,'டூர் எப்படி இருந்தது?'அந்தப் பெண்மணி கண்களை அகல விரித்துக் கொண்டு சந்தோஷமாக பதில் சொன்னாள்,'ரொம்ப அருமையா இருந்தது. சிறப்பான விமான பயணம். ... <a href="https://tamilpoonga.com/view-post/ய-ர-அவர">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/zsztfsgae5jsi8sjcwnau3sqfb3qy9pv.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 00:06:30 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய நாள் எப்படி?  - 3.6.2025]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/இன-ற-ய-ந-ள-எப-பட-3-6-2025]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/இன-ற-ய-ந-ள-எப-பட-3-6-2025]]></guid><description><![CDATA[<p>விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.6.2025.இன்று அதிகாலை 01.22 வரை சப்தமி. பிறகு அஷ்டமி.இன்று அதிகாலை 03.27 வரை மகம். பின்னர் பூரம்.இன்று காலை 11.45 வரை ஹர்ஜனம். பின்னர் வஜ்ரம்.இன்று அதிகாலை 01.22 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 01.44 வரை பத்தரை. பின்பு பவம்.இன்று அதிகாலை 03.27 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.00 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை</p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/4hpmv48jjb9bz6l37ssjpxldnujnsesz.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 13:45:09 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய ராசி பலன்கள் - 3.6.2025]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/இன-ற-ய-ர-ச-பலன-கள-3-6-2025]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/இன-ற-ய-ர-ச-பலன-கள-3-6-2025]]></guid><description><![CDATA[<p>மேஷம்எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்கூட்டாளிகள் வழியில் ஆதரவு ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம்அக்கம், பக்கம் இருப்பவரிடம் அனுசரித்து செல்லவும். உறவுகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அமைதி உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கடகம்உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூரப் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் மேம்படும். புகழ் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை சிம்மம்உறவுகளைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உற்பத்தி துறைகளில் பொறுமை வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னிகடன் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் பொறுமையுடன் செயல்ப... <a href="https://tamilpoonga.com/view-post/இன-ற-ய-ர-ச-பலன-கள-3-6-2025">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/jqnglkxlmbugqwzrtnyhmji4pcbq5xnu.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 14:33:40 GMT</pubDate></item><item><title><![CDATA[ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து  இயங்கிவரும்  ஒரே ஒரு மாநகரம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/ஆற-ய-ரம-ஆண-ட-கள-க-த-டர-ந-த-இயங-க-வர-ம]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/ஆற-ய-ரம-ஆண-ட-கள-க-த-டர-ந-த-இயங-க-வர-ம]]></guid><description><![CDATA[<p>உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக  தொடர்ந்து  இயங்கிவரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் “மதுரை “தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை *”The World’s only living civilization”* என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?அது மட்டுமல்ல மதுரைக்கு *”தூங்கா நகரம்”* என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் ... <a href="https://tamilpoonga.com/view-post/ஆற-ய-ரம-ஆண-ட-கள-க-த-டர-ந-த-இயங-க-வர-ம">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/snvpl95ygf7bxssutd9vfl98abe8m9es.jpg" />]]></description><pubDate>Tue, 03 Jun 2025 14:43:48 GMT</pubDate></item></channel></rss>