<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Posts of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/posts/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/posts/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>Posts of sivam RSS</description><lastBuildDate>Mon, 27 Apr 2026 03:32:04 GMT</lastBuildDate><item><title><![CDATA[இன்றைய ராசி பலன்கள் - 27.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/posf90]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/posf90]]></guid><description><![CDATA[<p>இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். மனதில் புது விதமான எண்ணங்களும் ஆசைகளும் உருவாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் சாதகமான சூழல்கள் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.ரிஷபம்உயர் அதிகாரிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பணியாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்மிதுனம்வியாபாரத்தில் இருந்த மந்ததன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்கடகம்வெளியூர் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்புசிம்மம்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஆறுதலும் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. காரசாரமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்கன்னிநினைத்த சில பணிகள் தாமதமாக நிறைவேறும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிராக செயல்பட்டவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சந்தேக எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. உலகத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். திடீர் ப... <a href="https://tamilpoonga.com/view-post/posf90">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/sppvlkqkg9bkvg54xvkke5raspwsw2sk.jpg" />]]></description><pubDate>Mon, 27 Apr 2026 03:32:04 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய நாள் எப்படி? 27.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/skb8uz]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/skb8uz]]></guid><description><![CDATA[<p>ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.4.2026இன்று இரவு 08.53 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று இரவு 11.33 வரை பூரம். பின்னர் உத்திரம்.இன்று அதிகாலை 01.10 வரை விருத்தி . பின்னர் இரவு 11.38 வரை துருவம். பிறகு வியாகாதம்.இன்று காலை 09.13 வரை வணிசை. பின்னர் இரவு 08.53 வரை பத்திரை. பிறகு பவம் .இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.00 முதல் 07.00 மணி வரைகாலை : 09.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை</p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/yfvzdc7eyghub8gt4df8jeatgcwnv79j.jpg" />]]></description><pubDate>Mon, 27 Apr 2026 02:56:03 GMT</pubDate></item><item><title><![CDATA[இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1ddl5c4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1ddl5c4]]></guid><description><![CDATA[<p>இவரது பெயர் டெஸ்ஸி தாமஸ்.இவர் 1963-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆலப்புழாவில் பிறந்தார். அவரது தந்தை ஒரு சிறு தொழிலதிபர். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, ​​பக்கவாதத்தால் அவரது தந்தை படுக்கையில் வீழ்ந்தார். அந்தச் சூழலிலும் தனது குடும்பம் ஒற்றுமையாக இருந்ததை அவர் பார்த்தார்.தும்பா பூமத்திய ரேகை ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் வளர்ந்ததால், அவர் ஏவுகணைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விரும்பினார், அதற்காக யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாரானார். அவரது டி.ஆர்.டி.ஓ நேர்காணல் முதலில் வெற்றிகரமாக முடிந்தது.அவர் 1988-ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) விஞ்ஞானி 'பி' ஆக சேர்ந்தார். அக்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சியில் இருந்த மிகச் சில பெண்களில் அவரும் ஒருவர்.அவரது வழிகாட்டி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஆவார்.அடுத்த இரண்டு தசாப்தங்களை அவர் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் கழித்தார். அங்கு அவர் வழிகாட்டு அமைப்புகள், வழிசெலுத்தல் திட்டங்கள் மற்றும் பாதை உருவகப்படுத்துதல்களில் பணியாற்றினார். அக்னியின் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் வழிகாட்டுத் திட்டத்தை அவர் வடிவமைத்தார்.2009-ஆம் ஆண்டு, அவர் அக்னி-IV திட்டத்தின் இயக்குநரானார். இந்தியாவில் ஒரு ஏவுகணைத் திட்டத்தை வழிநடத்திய முதல் பெண்மணி இவரே.அக்னி-IV சுமார் 4000 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது. அதன் 2011 ஆம் ஆண்டு சோதனை முழு வெற்றி பெற்றது.பின்னர் அவர், 5000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் திறன் கொண்ட அக்னி-V திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு சோதனை, இத்தகைய திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் குழுவில் இந்தியாவையும் சேர்த்தது.ஊடகங்கள் அவரை இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று அழைத்தன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அவரை அக்னிபுத்ரி என்று அழைத்தது.அவரது மகனின் பெயர் தேஜஸ், இது HAL தேஜஸின் நினைவாக சூட்டப்பட்டது.ஒருமுறை, உடல்நிலை சரியில்லாத தன் மகனை வீட்டில் குடும்பத்துடன் விட்டுவிட்டு, ஒரு ஏவுகணை ஏவுதலை மேற்பார்வையிடச் சென்றார். தனக்கு வேறு வழியில்லை என்றும், ஏவுதலைத் தள்ளிப்போட முடியாது என்றும் அவர் கூறினார்.ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணை மனிதராக நினைவுகூரப்படுகிறார்.டெஸ்ஸி தாமஸ் இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி ... <a href="https://tamilpoonga.com/view-post/1ddl5c4">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/22kwqmf2kdyur4aqxweftfu9mgdiyk9w.jpg" />]]></description><pubDate>Sun, 26 Apr 2026 14:58:53 GMT</pubDate></item><item><title><![CDATA[சுயநலத்திற்கு கிடைத்த சாட்டையடி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/xd9h8u]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/xd9h8u]]></guid><description><![CDATA[<p>சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51.அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான்.லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாடப் புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன்தான் முதல் மாணவன்.பிளஸ் 2-வில் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது இடத்திலும் வந்தான்.இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுந்தரம் குருக்கள் மிகவும் திண்டாடித்தான் போய்விட்டார்.பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம் ...பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஒரு ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான்.அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகச் சேர்ந்தான்.இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டான்.படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர் ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக் கூடாது ...சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும் ஒரே எண்ணம்தான் ...ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று.மருமகள் பவித்ரா ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்.அவள் அப்பா ஒரு ஓட்டலில் சமையல்காரர், பிளஸ் 2 முடித்து இருந்தாள் ...வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், மனைவி பவித்ராவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும் ... <a href="https://tamilpoonga.com/view-post/xd9h8u">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/hqhwa92p6djs3zywzqdsvygiuahcvbum.jpg" />]]></description><pubDate>Sun, 26 Apr 2026 13:57:02 GMT</pubDate></item><item><title><![CDATA[திகில் கதை....]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1tuc5gn]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1tuc5gn]]></guid><description><![CDATA[<p>ஒரு இளம் பெண் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு துணையாக அவளுடன் நாய் ஒன்றை வளர்த்து வந்தாள். அந்த நாய் எப்பொழுதும் அவளுடைய படுக்கைக்கு அடியிலேயே படுத்து கொள்ளும்.அந்த பெண்ணும் அங்கே நாய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய கீழே கையை நீட்டினால், அந்த நாய் அவள் கையை நக்கிவிடும். அதை வைத்து நாய் அங்கு தான் இருக்கிறது என்பதை உறுதி செய்தி கொள்வாள்.ஒரு நாள் இரவு டீ.வியில் ஒரு செய்தி வருகிறது. மிகவும் ஆபத்தான சீரியல் கில்லர் ஒருவன் தப்பித்து விட்டான். அதனால் பொது மக்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான். அதை பார்த்ததும் அந்த பெண் உடனேயே போய் கதவு, ஜன்னல் என்று எல்லாவற்றையும் நன்றாக பூட்டி விட்டு வந்து படுக்கிறாள்.இப்போது பழக்க தோஷத்தில் நாய் இருக்கிறதா இல்லையா என்று உறுதி செய்ய கையை கீழே நீட்டுகிறார். நாயும் அவள் கையை நக்குகிறது. நிம்மதியாக படுத்து கொள்கிறாள்.ஆனால் எங்கோ தண்ணீர் சொட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறது. இவளும் எழுந்து போய் குழாயில் இருந்து வருகிறதா என்று பார்த்தால் இல்லை. சரி என்று படுக்க செல்கிறார்.மறுபடியும் கையை படுக்கைக்கு கீழே காட்டுகிறாள். நாய் அவள் கையை நக்குகிறது.சிறிது நேரம் தூங்க முயற்சி செய்து பார்க்கிறாள். ஆனால் அந்த தண்ணீர் சொட்டும் சத்தம் அவளை தொந்தரவு செய்கிறது. சரி அது எங்கேயிருந்து தான் வருகிறது என்று பார்ப்போமே என்று தேடுகிறாள். அவளுடைய பாத்ரூமில் இருந்து தான் அந்த சத்தம் கேட்கிறது.கதவை திறந்து பார்த்தவளுக்கு பயங்கர அதிர்ச்சி. அந்த பெண்ணுடைய நாய் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஷவரில் தொங்கவிடப்பட்டுள்ளது. அதன் மீதிருந்து வழியும் ரத்தமே இவ்வளவு நேரம் சொட்டி கொண்டிருந்திருக்கிறது.பாத்ரூம் கண்ணாடியில் அந்த நாயின் ரத்தத்தால் எழுதியிருந்தது, மனிதர்களாலும் நக்க முடியும்.... <a href="https://tamilpoonga.com/view-post/1tuc5gn">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/fk4j6a6xqkxvcztibwfg4pl3ig6zxlhs.jpg" />]]></description><pubDate>Sun, 26 Apr 2026 10:15:35 GMT</pubDate></item><item><title><![CDATA[ரூ.1400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் ஓனர்; இவர் யார் தெரியுமா?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/j2jjb1]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/j2jjb1]]></guid><description><![CDATA[<p>அப்ப வீடு வீடாக வெண்ணெய் விற்றவர்...இப்ப ரூ.1400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் ஓனர்; இவர் யார் தெரியுமா?திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகிலுள்ள விருப்பாச்சி என்ற குக்கிராமத்தில் பிறந்த ஜி.ஆர். பாலசுப்பிரமணியம், 1984-ல் பெங்களூருவில் தொடங்கிய 'ஜி ஆர் பி' என்ற ப்ராண்டை இன்று பால் பொருட்கள், ஸ்னாக்ஸ், இனிப்புகள் என பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தி, உலகளாவிய அளவில் ரூ.1,400 கோடி வருவாய் கொண்ட நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.கல்வியை 8ஆம் வகுப்பில் நிறுத்தி, 13 வயதில் பெங்களூரு சென்ற இவர், தனது அக்கா குடும்பத்துடன் இணைந்து வெண்ணெய் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டதிலிருந்து தொழில் பயணத்தைத் தொடங்கினார்.பின்னர், 28 வயதில் வெறும் ரூ.6,000 முதலீட்டுடன் தனியாக தொழில் தொடங்கி, ஆரம்ப சவால்களை எதிர்கொண்டார். வெண்ணெயை நெய்யாக மாற்றி ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்வது போன்ற புதுமையான யோசனைகள் அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. 1986-ல் 'ஜி ஆர் பி' என்ற பெயரில் ப்ராண்டை அறிமுகப்படுத்தி, பெங்களூரு முழுவதும் நேரடி விற்பனை முறையில் தனது நெய் தரத்தை மக்களிடம் கொண்டு சென்றார்.1993-இல் இந்தியாவில் முதன்முறையாக நெய்யை FMCG முறையில் விநியோகிக்கும் முன்னோடியானார். தொடர்ந்து, 1999-ல் ஓசூரில் நவீன உற்பத்தி ஆலையை அமைத்து, சென்னை உள்ளிட்ட சந்தைகளில் கடும் போட்டியையும் தாண்டி தனது இடத்தை உறுதிப்படுத்தினார். பின்னர் 'Udhayam' என்ற உள்ளூர் ப்ராண்டையும் உருவாக்கி சந்தையை விரிவுபடுத்தினார். தற்போது ஜி ஆர் பி இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. 2000-களுக்குப் பிறகு இனிப்புகள், ஸ்னாக்ஸ், மசாலா, instant mix போன்ற துறைகளிலும் நுழைந்து, தனது தயாரிப்பு வரிசையை விரிவாக்கியது.திண்டுக்கல் நிலக்கோட்டையில் ரூ.200 கோடி மதிப்பிலான புதிய ஆலையையும் அமைத்து, மொத்தம் 6 உற்பத்தி நிலையங்களுடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முழுமையாக ஸெல்ப் மேட் (bootstrapped) முறையில் வளர்ந்த இந்த நிறுவனம், இன்று சுமார் 2,500 ஊழியர்களுடன் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது.பாலசுப்பிரமணியத்தின் வணிக தத்துவம் தரத்தில் எந்த சமரசமும் இல்லாத அணுகுமுறை, தொழிலை ஒரு ஆர்வமாகக் கருதுதல், ஊழியர்களை திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தல்,... <a href="https://tamilpoonga.com/view-post/j2jjb1">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/mmnyrwulfnanhcrvq57jctfrxshsjbtv.jpg" />]]></description><pubDate>Sun, 26 Apr 2026 10:13:06 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய ராசி பலன்கள் - 25.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1ogw6cf]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1ogw6cf]]></guid><description><![CDATA[<p>இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பொழுது போக்கு செயல்களால் தாமதம் உண்டாகும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்ரிஷபம்பயணங்களால் அனுபவம் உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். பராபரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மைமிதுனம்வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகடகம்குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்சிம்மம்தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். அரசு காரியத்தில் கவனம் வேண்டும். புதுமையான சிந்தனைகள் பிறக்கும். செயல்களை திட்டமிட்டு செயல்படவும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சைகன்னிஎதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்படியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும... <a href="https://tamilpoonga.com/view-post/1ogw6cf">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/7dfuzrpmhxmkyfaehtseskkm5hyfadw5.jpg" />]]></description><pubDate>Sun, 26 Apr 2026 03:52:30 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய நாள் எப்படி? 26.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1tc4wft]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1tc4wft]]></guid><description><![CDATA[<p>ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 26.4.2026இன்று இரவு 09.33 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று இரவு 11.27 வரை மகம். பின்னர் பூரம்.இன்று அதிகாலை 03.03 வரை கண்டம் . பின்னர் விருத்தி.இன்று காலை 10.06 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.33 வரை கரசை. பிறகு வணிசை.இன்று அதிகாலை 05.58 வரை அமர்ந்த யோகம். பின்னர் இரவு 11.27 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை... <a href="https://tamilpoonga.com/view-post/1tc4wft">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/mdwreirbkwcdfdl4jcgnlun6cid5wutz.jpg" />]]></description><pubDate>Sun, 26 Apr 2026 03:16:33 GMT</pubDate></item><item><title><![CDATA[சிட்டுக் குருவிக்கும் அருள்புரிந்த கிருஷ்ணர்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/vftjcq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/vftjcq]]></guid><description><![CDATA[<p>பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்.ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்.சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது.“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.“நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.“எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி!"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை.ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!மனிதன் தானே!“நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன்.ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ... <a href="https://tamilpoonga.com/view-post/vftjcq">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/hd3yrrdwcyg6nh9mqnkenr3yccfv8uaf.jpg" />]]></description><pubDate>Sat, 25 Apr 2026 12:20:33 GMT</pubDate></item><item><title><![CDATA[முதுகெலும்பை பாதுகாக்க 10 வழிகள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1ndpswx]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1ndpswx]]></guid><description><![CDATA[<p>தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.அமரும்போது வளையாதீர்கள்.ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.சுருண்டு படுக்காதீர்கள்.கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்.... <a href="https://tamilpoonga.com/view-post/1ndpswx">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/mwdxlykpfabyawrt8zeprcjd2kenbc82.jpg" />]]></description><pubDate>Sat, 25 Apr 2026 12:07:06 GMT</pubDate></item></channel></rss>