<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Posts of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/posts/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/posts/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>Posts of sivam RSS</description><lastBuildDate>Tue, 07 Apr 2026 04:12:48 GMT</lastBuildDate><item><title><![CDATA[இன்றைய ராசி பலன்கள் - 7.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/134lual]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/134lual]]></guid><description><![CDATA[<p>இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நிதானம் வேண்டும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையறிந்து செயல்படவும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்ரிஷபம்புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றமும் மகிழ்ச்சியான தருணங்களும் உருவாகும். வரவுகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிக்கல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்மிதுனம்பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் குறையும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். பேச்சுக்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஈர்ப்புகள் ஏற்படும். சிரமம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைகடகம்எதிர்கால சேமிப்பு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் கல்வியில் இருந்த குழப்பம் நீங்கும். வித்தியாசமான அனுபவங்கள் மூலம் சில புரிதல்கள் உண்டாகும். பணியில் மாற்றமான சூழல்கள் அமையும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வர்த்தக வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். அசதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : காவிசிம்மம்நினைத்த பணிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைகன்னிபாதியில் நின்ற வேலைகளை செய்து முடிப்பீர்கள். எண்ணங்கள் போக்கில் ம... <a href="https://tamilpoonga.com/view-post/134lual">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/mvwsqgsdsgtzjbpm5ecdg8hqxfefihbj.jpg" />]]></description><pubDate>Tue, 07 Apr 2026 04:12:48 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய நாள் எப்படி? 7.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/11m7axq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/11m7axq]]></guid><description><![CDATA[<p>விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.4.2026இன்று மாலை 03.05 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.இன்று அதிகாலை 02.21 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று மாலை 03.27 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.இன்று அதிகாலை 02.26 வரை கௌலவம். பின்னர் மாலை 03.05 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை</p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/33elyp4qbjmrintd48wvrgqg5q5webvv.jpg" />]]></description><pubDate>Tue, 07 Apr 2026 04:06:39 GMT</pubDate></item><item><title><![CDATA[ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/z7530f]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/z7530f]]></guid><description><![CDATA[<p>ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை. விருத்தாசலத்தில் தான் இருக்கிறது.கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழ் நூல் காப்பகமே.. ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் இது.தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரை பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு. திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது.அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களு... <a href="https://tamilpoonga.com/view-post/z7530f">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/kqqbzuym79x6ehezv7fxfb95zsnneytm.jpg" />]]></description><pubDate>Mon, 06 Apr 2026 13:17:03 GMT</pubDate></item><item><title><![CDATA[அறிவியலுக்கும் எட்டாத ஆச்சரியம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1tecdre]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1tecdre]]></guid><description><![CDATA[<p>அணையாத தீபம் - ஜுவாலாமுகி கோயில்!இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜுவாலாமுகி அம்மன் கோயில், மற்ற கோயில்களைப் போல சில வழிபாட்டுத் தலம் அல்ல.இங்கு சிலைகளுக்குப் பதிலாக "புனிதச் சுடர்களே" தெய்வமாக வணங்கப்படுகின்றன.பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மர்மம் இன்றும் பக்தர்களையும் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்துகிறது.எரிபொருள் இல்லாத சுடர்!இந்தக் கோயிலின் கருவறையில் பாறைகளின் பிளவிலிருந்து ஒன்பது தீபச் சுடர்கள் (ஜுவாலாக்கள்) நீல நிறத்தில் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீபங்கள் எரிவதற்கு எந்தவிதமான எண்ணெய், நெய் அல்லது திரிகளோ பயன்படுத்தப்படுவதில்லை. பூமியின் ஆழத்திலிருந்து வரும் இந்தச் சுடர்கள் பல நூற்றாண்டுகளாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றன.தோற்றுப்போன பேரரசர் அக்பர்!இக்கோயிலின் மகிமையைக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர், இது வெறும் ஏமாற்று வேலை என்று கருதி அதை அணைக்க முயன்றார். கோயிலைச் சுற்றி கால்வாய் அமைத்து அதன் மேல் நீரை ஊற்றினார். ஆனால், அத்தனை நீராலும் அந்தச் சுடர்களை அணைக்க முடியவில்லை. இறுதியில், அந்த அற்புதத்தைக் கண்டு வியந்த அக்பர், அம்மனுக்குத் தங்கக் குடை ஒன்றை காணிக்கையாக வழங்கினார் என்பது வரலாறு.எட்டாத ரகசியம் - அறிவியல் தோல்வி!பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பல நிலத்தடி ஆய்வாளர்கள் இதற்குக் காரணம் நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயுவாக இருக்கலாம் என்று கூறி வந்தனர். ஆனால் பலமுறை தோண்டியும், ஆய்வு செய்தும் அத்தகைய எரிவாயு சேமிப்பு எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடியவில்லை.இவ்வளவு சிறிய பிளவிலிருந்து பல நூறு ஆண்டுகள் அணையாமல் எரியும் அளவுக்கு எரிவாயு வர வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.ஒன்பது சுடர்களின் தத்துவம்!இங்கு எரியும் ஒன்பது சுடர்களும் மஹாசக்தி, மஹாவிஷ்ணு, கணபதி உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகின்றன. இதில் பிரதான சுடர் 'மஹாசக்தி' என்று அழைக்கப்படுகிறது.பூமிக்குக் கீழே இருந்து வெளிப்படும் இந்த தெய்வீக நெருப்பு, இயற்கையின் மர்மமா அல்லது இறையருளா? விடை தெரியாத இந்த அற்புதத்தை ஞானத்தால் மட்டுமே உணர முடியும்.... <a href="https://tamilpoonga.com/view-post/1tecdre">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/s5qvbvftdrrsy3pfabzxullexx5jec88.jpg" />]]></description><pubDate>Mon, 06 Apr 2026 13:05:48 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய ராசி பலன்கள் - 6.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1xahs6k]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1xahs6k]]></guid><description><![CDATA[<p>இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்கள் மூலம் மனதளவில் புதிய மாற்றங்கள் உருவாகும். தற்பெருமை இன்றி அனைவரையும் அனுசரித்து செல்லவும். செல்லப்பிராணிகள் வழியில் விரயங்கள் ஏற்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைரிஷபம்சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். அதிகாரிகள் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மிதுனம்வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்கடகம்புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பூர்விகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு மேலான பொறுப்புகள் கிடைக்கும். தொலைபேசி தொடர்பான செய்திகளின் மூலம் பயணங்களை மேற்கொள்வீர்கள். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைகள் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்சிம்மம்வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : கருசிவப்புகன்னிபேச்சு வன்மையினால் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பாகப்பிரிவினை குறி... <a href="https://tamilpoonga.com/view-post/1xahs6k">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/adbxx7txamiezdtmgur69pf2cjspqzsr.jpg" />]]></description><pubDate>Mon, 06 Apr 2026 06:00:00 GMT</pubDate></item><item><title><![CDATA[இன்றைய நாள் எப்படி? 6.4.2026]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1jd9kfx]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1jd9kfx]]></guid><description><![CDATA[<p>விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.4.2026.இன்று பிற்பகல் 01.48 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று முழுவதும் அனுஷம். இன்று பிற்பகல் 02.55 வரை வஜ்ரம். பின்னர் வியதீபாதம். இன்று அதிகாலை 12.50 வரை பவம். பின்னர் பிற்பகல் 01.48 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.08 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை </p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/bxrqqtkvm3dbak4p2upsn2hzm23twurf.jpg" />]]></description><pubDate>Mon, 06 Apr 2026 05:43:00 GMT</pubDate></item><item><title><![CDATA[கண்டிப்பு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/bdbj5e]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/bdbj5e]]></guid><description><![CDATA[<p>விபத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த எனக்கு, அக்கா தாயாகவும், மாமா நிழலாகவும் மாறினார்கள் . ஆனால் நான் வளர வளர மாமாவின் நிழல் எனக்குச் சுட்டெரிக்கத் தொடங்கியது. "சும்மா ஊர் சுத்துறதுக்கு பதிலா ஏதாவது வேலைக்கு போடா, அக்கா கஷ்டப்படுறது கண்ணுக்குத் தெரியலையா?" என்று மாமா ஊர் முன்னிலையில் என்னைக் கேலி செய்வா.ஒருநாள் சோறு தொண்டையில் இறங்காமல் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன். "நிச்சயம் ஒருநாள் பெரிய ஆளாகி, இந்த மனுஷன் முன்னாடி கார்ல வந்து நிப்பேன்" என்று சபதம் எடுத்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்தது .புது கார் வாங்கினேன். கெத்தாக வீட்டு வாசலில் வந்து நின்றேன். மாமா அங்கே திண்ணையில் அமர்ந்திருந்தார். அவரைத் திரும்பி கூட பார்க்காமல் அக்காவிடம் சென்றேன். "அக்கா, இதோ என் சம்பளம். இனி நம்ம வேற வீட்டுக்கு போயிடலாம். யாரோட வசையும் இனி நமக்குத் தேவையில்லை" என்று மாமாவைப் பார்த்துக் கத்திக் கூறினேன் .மாமா மெலிதாக புன்னகைத்துவிட்டு, ஒரு பழைய காகிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். "இத்தனை நாள் அசிங்கப்படுத்தினது பத்தாதுன்னு இப்போ என்ன கொடுக்கிறாரு?" என்ற கோபத்துடன் அதைத் திறந்தேன் .அது ஒரு வங்கிக் கணக்குப் புத்தகம் (Bank Passbook). அதில் கடந்த 15 ஆண்டுகளாக மாமா உழைத்த ஒவ்வொரு ரூபாயும் என் பெயரில் சேமிக்கப்பட்டிருந்தது. கடைசிப் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது: "தம்பி, நீ அப்பா இல்லாதவன் என்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உன்னைச் செல்லமாக வளர்த்தேன். ஆனால் நீ ஊதாரித்தனமாகச் சுற்றியபோது எனக்குப் பயம் வந்தது. நான் ஒரு டிரைவர், நாளைக்கே ஏதாவது விபத்தில் நான் செத்துப்போனால் உன்னை யார் காப்பாற்றுவார்?  அதனால்தான் உனக்கு வைராக்கியம் வர வேண்டும் என்று உன்னைக் காயப்படுத்தினேன். என் மேலிருந்த கோபம்தான் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நீ பெரிய ஆளாகிவிட்டாய், இனி நான் நிம்மதியாகச் சாவேன்." படித்து முடித்ததும் என் கால்கள் நடுங்கின. ஓடிப்போய் மாமாவின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினேன். "மாமா, என்னை மன்னிச்சிடுங்க மாமா. உங்களை நான் 'அந்த ஆளு'ன்னு தப்பா பேசிட்டேன்" என்று அழுதேன்.அவர் என் தலையை வருடி, "பரவாயில்லைடா தம்பி, ஒரு அப்பாவா தோற்று, ஒரு மாமாவா ஜெயிச்சுட்டேன்" என்... <a href="https://tamilpoonga.com/view-post/bdbj5e">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/nrhcmuiqf3scw3evs2qnlmbvaqhghhvw.jpg" />]]></description><pubDate>Mon, 06 Apr 2026 05:20:47 GMT</pubDate></item><item><title><![CDATA[சாரங்கப் பறவை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/afu41g]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/afu41g]]></guid><description><![CDATA[<p>கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக் குதித்தார். சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார். கதவைத் திறந்துகொண்டு உள்ளிருந்து வந்தான் ஒரு தேவன். ‘‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’’ என்று அதட்டினான்.‘‘நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள்’’ என்றார் முனிவர்.தேவன் கடகடவென்று சிரித்தான். ‘‘மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!’’மந்தபாலர் வியப்படைந்தார். தவ சிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? ‘‘தேவனே! தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது?’’தேவன் நகைத்தபடிச் சொல்லலானான்: ‘‘மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன்தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒரு... <a href="https://tamilpoonga.com/view-post/afu41g">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/psdrjzyyaxf784wdtd97qgfpjlcs6rlx.jpg" />]]></description><pubDate>Sun, 05 Apr 2026 13:48:10 GMT</pubDate></item><item><title><![CDATA[அஞ்சா நெஞ்சன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/l4iffc]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/l4iffc]]></guid><description><![CDATA[<p>ஒரு காட்டில் காலபைரவி என்ற மந்திரக்கிழவி இருந்தாள். அவள் மிகவும் கொடூரமானவள். அக்காட்டு வழியே வரும் மனிதர்களைப் பிடித்து அவர்களைக் கொன்று களிப்பவள். அவளது இருப்பிடம் ஒரு குகை. அதற்குள்தான் கொன்ற மனிதர்களின் எலும்புக் கூடுகளை நிறுத்தி வைத்து, அவற்றின் மத்தியில் தான் படுத்துத் தூங்குவாள்.ஓராண்டிற்கு முன் அந்தக் காட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பாலய்யன் என்ற இளைஞன் அந்தக் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான். காலபைரவி அவனைப் பிடித்துக் கொன்று, அவனது எலும்புக் கூட்டைத் தன் குகைக்குள் வைத்து விட்டாள். இதை அறிந்தபின் அக்கிராமத்தவர்கள் யாருமே அக்காட்டு வழியே செல்லவில்லை.பாலய்யனுக்கு வீரையன் என்ற அண்ணன் இருந்தான். அவனை 'அஞ்சா நெஞ்சன்' என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். அவன் காட்டிலுள்ள காலபைரவியை ஒழித்து விடுவது என்ற தீர்மானத்தோடு அங்கே சென்றான். அப்போது அவள் விழுதுகளுள்ள ஆலமரத்தடியே உட்கார்ந்து கொண்டு யாராவது ஒரு மனிதன் அவ்வழியே வருவானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது வீரையன் வருவதைக் கண்டதும் அவள் ஒரேயடியாக மகிழ்ந்து போனாள்.வீரையன் காலபைரவியின் பக்கம் போய் நின்று, "என்ன பாட்டி! நலம்தானா?" என்று கேட்டான். மந்திரக்கிழவி அவனை விழுங்கி விடுபவள் போலப் பார்த்து, "நலமாக இருப்பதால்தானே இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன்? பேரப் பயலே! நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டாள்.அவனும், "பாட்டி! என் பெயர் வீரையன். என்னை ஊரார் 'அஞ்சா நெஞ்சன்' என்று கூப்பிடுகிறார்கள். நான் யாருக்கும் எதற்கும் பயப்படாமல் இருப்பதே இப்பெயர் வரக் காரணம். ஊரில் பல ஆசிரியர்களிடம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். ஆனால், பயம் என்றால் என்ன என்று தான் தெரியவில்லை.யாராவது என்னை பயமுறுத்தி அது என்ன என்று அறிய வைக்கிறார்களா என்று தான் அலைந்து கொண்டிருக்கிறேன். இதுவரை என்னை பயமுறுத்துபவன் யாருமே தென்படவில்லை" என்றான்.காலபைரவி பயங்கரமாகச் சிரிக்கவே, அவனோ, "பாட்டி! நீ என்னை பயமுறுத்தி மேலுலகத்திற்கு அனுப்பப் போகிறாய்? நான் என்னவோ இவ்வளவு நாட்களாக மந்திரக்கிழவி என்றால் பார்க்கவே பயங்கரமாக இருப்பாள் என்றே எண்ணியிருந்தேன். நீயோ மிக அழகாக இருக்கிறாய்" என்றான்.அதைக் கேட்டு காலபைரவி உச்சி குளிர்ந்து போய், "நீ சொல்வது உண்மையா?" என்று கேட்டாள். வீரையனும், "நான... <a href="https://tamilpoonga.com/view-post/l4iffc">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/nrqtaah59irrd6lfvmmnm64jfwzztqei.jpg" />]]></description><pubDate>Sun, 05 Apr 2026 13:14:15 GMT</pubDate></item><item><title><![CDATA[தனது பக்தியால் உள்ளத்திலே கோவில் கட்டிய மகா யோகி பூசலார் நாயனார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1v9hnz4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1v9hnz4]]></guid><description><![CDATA[<p>இவரது வரலாறு பக்தியின் உச்சத்தை விவரிப்பதாகும்.​1. பிறப்பு மற்றும் இளமை:சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய திருநின்றவூர் என்னும் ஊரில் ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தார் பூசலார். இவர் சிறு வயது முதலே சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.​2. கோயில் கட்டும் ஆசை:சிவபெருமானுக்கு ஒரு அழகான கற்கோயில் கட்ட வேண்டும் என்பது பூசலாரின் நீண்ட கால ஆசையாக இருந்தது. ஆனால், அவரிடம் அதற்கான வசதியோ அல்லது பணமோ இல்லை. செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.​3. மனக்கோயில் (மனதிற்குள் கோயில்):பணம் இல்லையென்றால் என்ன? என் பக்தியால் சிவனுக்கு கோயில் கட்டுவேன் என்று முடிவு செய்தார். தன் மனதையே கருவறையாக்கி, மனதிற்குள்ளேயே கோயில் கட்டும் பணியைத் தொடங்கினார்.​ஆகம விதிகளின்படி ஒவ்வொரு கல்லாக மனக்கண்ணால் செதுக்கினார்.​அஸ்திவாரம் இடுவது முதல், கோபுரம் கட்டுவது வரை அனைத்துப் பணிகளையும் தியானத்திலேயே ஒவ்வொன்றாகச் செய்து முடித்தார்.​கோயிலுக்குக் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்ய ஒரு தேதியையும் குறித்துக்கொண்டார்.​4. காஞ்சி மன்னனின் சிவபக்தி:அதே காலகட்டத்தில், காஞ்சியை ஆண்ட ராஜசிம்ம பல்லவன் என்னும் அரசன், மிகப்பிரம்மாண்டமான கயிலாயநாதர் கோயிலை (Kanchi Kailasanathar Temple) கட்டி முடித்திருந்தான். அவனும் தனது கோயிலுக்குக் குடமுழுக்கு செய்ய அதே தேதியைத் தேர்ந்தெடுத்தான்.​5. சிவபெருமானின் திருவிளையாடல்:குடமுழுக்கிற்கு முந்தைய நாள் இரவு, சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றினார். அவர் மன்னனிடம், "நாளை திருநின்றவூரில் பூசலார் கட்டிய கோயிலுக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. எனவே உன் கோயில் குடமுழுக்கை வேறொரு தேதிக்கு மாற்றிக்கொள்" என்று கூறினார்.​மன்னன் திடுக்கிட்டு விழித்தான். "தன்னை விடப் பெரிய கோயிலை திருநின்றவூரில் யார் கட்டியது?" என்று வியந்து, உடனே தனது படைகளுடன் திருநின்றவூர் சென்றான்.​6. மன்னனின் வியப்பு:திருநின்றவூர் வந்த மன்னன், ஊர் மக்களிடம் பூசலார் கட்டிய கோயில் எங்கே என்று கேட்டான். ஆனால் அங்கிருந்தவர்களுக்கு அப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியவில்லை. இறுதியாக ஒரு ஏரிக்கரையின் ஓரத்தில் கண் மூடி அமர்ந்திருந்த பூசலாரைக் கண்டுபிடித்து அவரிடம் கேட்டபோது, பூசலார் கண்கலங்கி,"அரசே! நான் என் மனதிற்குள்ளே தான் அந்தக் கோயிலைக் கட்டினேன்" என்று உண்மையைச் சொன்னார்.​பூசலாரின் ஆழ்ந்த பக்தியைக் கண... <a href="https://tamilpoonga.com/view-post/1v9hnz4">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/pft6dpiqjkjiq3fs34bmricg4crssh8y.jpg" />]]></description><pubDate>Sun, 05 Apr 2026 13:05:38 GMT</pubDate></item></channel></rss>