<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Poems of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/poetry/rss/author/11]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/poetry/rss/author/11" rel="self" type="application/rss+xml" /><description>Poems of sivam RSS</description><lastBuildDate>Fri, 18 Jul 2025 14:11:31 GMT</lastBuildDate><item><title><![CDATA[யார் அவர்?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-poetry/ய-ர-அவர]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-poetry/ய-ர-அவர]]></guid><description><![CDATA[<p>பேருந்தில் நிற்க முடியாமல்சிரமப்படும் நமக்கு எழுந்து,தன் இடம் கொடுக்கும்அந்த யாரோ ஒரு*இருக்கை மனிதர்!*ரயிலில் மேலேற முடியாதநமக்கு தன் கீழ் இருக்கையைகொடுக்கும் அந்த யாரோ ஒரு*உயர்ந்த மனிதர்!*சாலை விபத்தில் நமக்குமுதல் ஆளாய் ஓடோடி வந்துஉதவும் அந்த யாரோ ஒரு*சகாய மனிதர்!*தூக்கிவிட மறந்த நம்வண்டி சைட்ஸ்டாண்டைதன் சைகையிலேயேதூக்கிவிடச் சொல்லும்அந்த யாரோ ஒரு*சைகை மனிதர்!*வண்டிச் சக்கரத்தில்மாட்ட இருக்கும் துப்பட்டாவை சொருவிக்கொள்ளச் சொல்லிஎச்சரிக்கும் அந்த யாரோ ஒரு*எச்சரிக்கை மனிதர்!*செல்லும் வழி தெரியாமல்முழிக்கும் நமக்கு சரியானவழி சொல்லி உதவும்அந்த யாரோ ஒரு*முகவரி மனிதர்!*திடீரென்று நின்று விட்டநம் வண்டியை உதைத்துஓட வைத்துக் கொடுக்கும்அந்த யாரோ ஒரு*உதை மனிதர்!*சில்லறை இல்லாமல் நாம்தவிக்கும்போது, சரியானசில்லறை கொடுத்து உதவும்அந்த யாரோ ஒரு*நாணய மனிதர்!*தவறவிட்ட நம் பணப்பையைநம்மைத் தேடிவந்துகொடுத்துச் செல்லும்அந்த யாரோ ஒரு*நேர்மை மனிதர்!*ATM இயந்திரத்தில்பணம் எடுக்கத் தெரியாமல்தவிக்கும் போது, எடுத்துதவும்அந்த யாரோ ஒரு*நல்ல மனிதர்!*உயிருக்கு போராடும்ஆபத்தான நிலையில்,யாருக்கென்றே தெரியாமல்இரத்தம் கொடுக்க முன்வரும்அந்த யாரோ ஒரு*குருதி மனிதர்!*இன்னும் இன்னும் இப்படி,நம்மைச் சுற்றியே,எத்தனையோ அந்த*"யாரோ மனிதர்கள்!"*எப்போதும் இருக்கிறார்கள்.தேவையானச் சூழலில்தங்களுக்குள் இருக்கும்மனிதர்களை அவர்கள்வெளிப்படுத்தி விடுகிறார்கள்.நாமும் இருப்போம் முடிந்தவரையாரோ அந்த சில மனிதர்களாய்!... <a href="https://tamilpoonga.com/view-poetry/ய-ர-அவர">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_poetry_photos_resized/zhcgfpwwtgiiam6sbnxa2rcervwmlnye.jpg" />]]></description><pubDate>Fri, 18 Jul 2025 14:11:31 GMT</pubDate></item><item><title><![CDATA[இறந்த அப்பாக்களுக்கு ஓர் இதய அஞ்சலி ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-poetry/இறந-த-அப-ப-க-கள-க-க-ஓர-இதய-அஞ-சல]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-poetry/இறந-த-அப-ப-க-கள-க-க-ஓர-இதய-அஞ-சல]]></guid><description><![CDATA[<p>அப்பாக்கள் இருக்கும் வரை - அவரேகதாநாயகன்இறந்து இறையுலகம் சென்றால் - அவரேகாலத்தின் நாயகன்அப்பாக்களை இருக்கும் போது பிள்ளைகள்பெரிதாக கொண்டாடி மகிழ்வதில்லைஏனெனில்எந்த அப்பாவும் கொண்டாட்டங்களை விரும்புவதேயில்லைஆனால்அப்பாக்கள் இறந்த பின் தப்பாமல் கொண்டாடி தவமிருந்து தாலாட்டுவார்கள்அப்பாக்களின் ஞாபகங்களின் உலகம்பேரழகானதுகுழந்தையாக தோளேற்றிய நாள் தொட்டுபருவமான பின் தோழமையாய் கொண்டாடியநாட்கள் ஒவ்வொன்றும்வரலாற்று கல்வெட்டுக்களேதன்னைப் போல் தன் பிள்ளை தோற்க கூடாதுஎன்பதற்காகவேஏரை பிடிக்க விடாதுஎழுதுகோலை பிடித்து எழுத வைத்து அழகு பார்த்த அப்பாக்கள் ஒவ்வொருவரும்காலத்தின் அதிசயமேபிள்ளைகளுக்காக தன் தேகத்தை கரைத்துஉழைத்த அப்பாக்களின் ஞாபகங்களைஎளிதில் எந்த பிள்ளைகளும்மறந்து கடந்து வாழ்ந்திட முடியாதுசிறு பிராய நினைவுகளின் திருவிழா கோட்டை --- ஒவ்வொரு அப்பாக்களும்பெரும் வாழ்வின் தியாக நற் கொடைஒவ்வொரு அப்பாக்களும்அப்பாக்களோடு வாழ்வோர் எளிதில்உணர்வதில்லைஅப்பாக்களை இழந்தோர் எளிதில்உறங்க செல்வதில்லைநினைவுத் தோப்பில் அழகிய ஞாபக குயிலின்சங்கீதமாய்அப்பாவின் ஒவ்வொரு நிகழ்வும்ஒலித்து கொண்டேயிருக்கும்அப்பா ஓர் அழகிய பேருலகம்அப்பா ஓர் ஆனந்த திருவுலகம்அப்பா ஓர் அழியாத கோலம்அப்பா மட்டுமே நினைவுகளை விட்டு அழிந்து போகாத காலம்அப்பாவை கொண்டாடுவோர் அழகாய் வாழ்வார்---- அவரின் வேரின் விழுதுகளில்என்றும் மலராக பூப்பார்... <a href="https://tamilpoonga.com/view-poetry/இறந-த-அப-ப-க-கள-க-க-ஓர-இதய-அஞ-சல">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_poetry_photos_resized/wbp6xnpm6azy9ubgndcnr7jcfdauk37k.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 15:15:43 GMT</pubDate></item><item><title><![CDATA[அப்பா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-poetry/அப-ப]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-poetry/அப-ப]]></guid><description><![CDATA[<p>உயிர் மெய் சேர்ந்துஉயிர்மெய் எழுத்ததுஉடன் ஒன்றிணைந்து...உயிர்ப்பாய் பிறந்ததுஉறவின் பலமாய்உன்னத வார்த்தை...அப்பா!ஆணிவேரும் அஸ்திவாரமும்அகத்தினில் அமிழ்ந்திடலாய்...அப்பாக்களின் தியாகங்களவைஅளவிடுதலில் அதிகமாய்...ஆழத்தில் ஊன்றி நிற்கும்!தலையை அழுத்தும் சுமைதாங்கிடும் பாரம் அதனை...பிடியினில் அடுக்கடுக்காய்பிள்ளைகளின் ஆசைகள்!</p><img src="https://tamilpoonga.com/s/mz_poetry_photos_resized/cjhht7ipzqsdcfhlm3xjas3tu2xnraxu.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 14:05:07 GMT</pubDate></item></channel></rss>