<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Latest News RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/public]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/public" rel="self" type="application/rss+xml" /><description>Latest News RSS</description><lastBuildDate>Wed, 15 Jul 2026 08:39:27 GMT</lastBuildDate><item><title><![CDATA[பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருந்தாளுநர் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/g1xf4j]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/g1xf4j]]></guid><description><![CDATA[<p>கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பாசானோ நகரில், நோயாளி மற்றும் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருந்தாளுநர் ஒருவரின் உரிமத்தை அல்பர்ட்டா கல்லூரி ஆஃப் பார்மசி நிரந்தரமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.பாசானோ நகரில் மருந்தகம் நடத்தி வந்த அன்கித் பாரிக் என்பவர், அங்கு பணிபுரிந்த மற்றும் மருந்தகத்திற்கு வந்த நோயாளிகளான பெண்களிடம் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.இதுமட்டுமின்றி, மருந்தகம் திறந்திருந்த நேரத்திலும், தான் பணியில் இருந்த பொறுப்பான நேரங்களிலும் பாரிக் மருந்தக வளாகத்திலேயே தொடர்ந்து மது அருந்தியதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் பாரிக்கின் உரிமத்தை ரத்து செய்ய விசாரணை தீர்ப்பாயம் 2024-லேயே முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து பாரிக் மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு குழு அதனை தள்ளுபடி செய்து, அவராலேயே ஏற்பட்ட மேல்முறையீட்டுச் செலவுகளையும் அவரே ஏற்குமாறு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து, பாரிக் அல்பர்ட்டா மேல்முறையீட்டு நீதிமன்றத்தை (Alberta Court of Appeal) நாடினார்.ஆனால், கடந்த ஜூன் 23 அன்று நீதிமன்றமும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, அவர் செலுத்த வேண்டிய நீதிமன்றச் செலவை மட்டும் சற்றே குறைத்து உத்தரவிட்டது.இந்த உத்தரவின் மூலம் அன்கித் பாரிக் இனி மருந்தாளுநராகப் பணியாற்ற முடியாது. மேலும், அவர் தனது உரிமத்தை மீண்டும் கோரி விண்ணப்பிக்கவும் தகுதி அற்றவர் ஆக்கப்பட்டுள்ளார். ... <a href="https://tamilpoonga.com/view-news/g1xf4j">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/f3yz8mctzeserkdjvrmym9dmt7mjmjum.png" />]]></description><pubDate>Wed, 15 Jul 2026 08:39:27 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் கொடூர தீ விபத்து: 20,000 பன்றிகள் கருகி உயிரிழப்பு ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ryjvtp]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ryjvtp]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3' பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3' பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.... <a href="https://tamilpoonga.com/view-news/ryjvtp">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/pvd8mnh9jecnlj3wblpkvgrnlvdmylcq.png" />]]></description><pubDate>Wed, 15 Jul 2026 08:31:35 GMT</pubDate></item><item><title><![CDATA[முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/t0g4l]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/t0g4l]]></guid><description><![CDATA[<p>கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78).  இம்மாதம், (அதாவது, ஜூலை மாதம்) 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிசார் கருதுகிறார்கள். அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஆகத்து மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.... <a href="https://tamilpoonga.com/view-news/t0g4l">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/lpk6yynautcqrhxk9zjtzu5r2csfrbhc.jpg" />]]></description><pubDate>Tue, 14 Jul 2026 13:24:33 GMT</pubDate></item><item><title><![CDATA[சிறைச்சாலையில் இருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட கைதிகள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/17zkvsz]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/17zkvsz]]></guid><description><![CDATA[<p>கனடாவின் சாஸ்காச்சுவான் மாகாணச் சிறைச்சாலைகளில் இருந்து, நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக 5 கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.எழுத்துப் பிழைகள், தகவல் தொடர்பு குறைபாடுகள், ஆவணக் கோளாறுகள் அல்லது தரவுச் செயலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே இந்தக் கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சாஸ்காச்சுவான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.இப்படியாக தவறுதலாக விடுவிக்கப்பட்டவர்களில் 26 வயதான கெலீஷா ஜாக்சன் என்ற பெண்ணும் ஒருவர். தாக்குதல் மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்த குற்றத்திற்காக நார்த் பேட்டில்ஃபோர்ட் சிறையில் இவர் தண்டனை அனுபவித்து வந்தார்.கடந்த மார்ச் 19 அன்று இவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்த தகவல் ஜூன் 19 வரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.இறுதியாக, தவறுதலாக விடுவிக்கப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜாக்சன், இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இத்தகைய தவறுகள் மிகவும் அரிதானவை என்றும், ஒட்டுமொத்த கைதிகள் விடுதலையில் இது 0.1 சதவீதத்திற்கும் குறைவானதே என்றும் அரசுத் தரப்பு வாதிட்டுள்ளது.இருப்பினும், இந்த விவகாரத்தில் சாஸ்காச்சுவான் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என எதிர்க்கட்சியான என்.டி.பி (NDP) குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்.டி.பி சட்டமன்ற உறுப்பினர் நிக்கோல் சராவர் வலியுறுத்தியுள்ளார்.மறுபுறம், கைதிகள் தங்களின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுவிக்கப்படுவதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வுப் பயிற்சிகள் முழுமையடையாமல் போகும் என்றும், இது அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதைப் பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.தவறுதலாக நடக்கும் ஒவ்வொரு விடுதலை குறித்தும் சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும், வருங்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க உரியப் பரிந்துரைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/17zkvsz">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/h6guehryjs7btah8ycykbc86sbyzyceq.jpg" />]]></description><pubDate>Sat, 11 Jul 2026 11:06:06 GMT</pubDate></item><item><title><![CDATA[முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்த தம்பதி ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1m01ayb]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1m01ayb]]></guid><description><![CDATA[<p>பிரேசில் நாட்டில் மருத்துவ தம்பதியினர் ஒருவருக்கொருவர் 30 வினாடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா ஆகிய இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இவர்களில் ரெனாடோவுக்கு 'ஏடிஎச்டி' எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு பாதிப்பு உள்ளது.இருப்பினும், முறையான பயிற்சியும் தீவிர மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.தாங்கள் இருவரும் உலகின் மிகச்சிறந்த தம்பதி என்பதை உலகிற்கு காட்ட நினைத்த இவர்களின் இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இணையத்தில் இவர்களின் சாதனை வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.... <a href="https://tamilpoonga.com/view-news/1m01ayb">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/t77jj3zvfftbluyrzgwz3ilb6y7pewdc.jpg" />]]></description><pubDate>Sat, 11 Jul 2026 10:56:31 GMT</pubDate></item><item><title><![CDATA[நகைக்கடையில் திருட குழந்தைகளைப் பயன்படுத்திய குடும்பம் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/a6ywnr]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/a6ywnr]]></guid><description><![CDATA[<p>கனடாவின் கல்கரி நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான 'மார்க்கெட் மால்' நகைக் கடையொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திட்டமிட்டு நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் திருட்டுச் சம்பவத்தில் சிறுவர்களைப் பயன்படுத்தியமைக்காக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த ஜூன் 17ஆம் திகதி, மார்க்கெட் மாலில் உள்ள 'ஹில்பெர்க் &amp; பெர்க்' நகைக் கடை ஊழியர் அளித்த தகவலின் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர்.கடையின் பாதுகாப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஒன்றாகக் கடைக்குள் நுழைந்தது தெரியவந்தது.குடும்பத்திலிருந்த பெரியவர்கள் கடையின் ஊழியர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பியுள்ளனர்.அந்த நேரத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், 8 வயது சிறுவனும் இணைந்து சுமார் 4,000 டாலர் மதிப்புள்ள பல நகைகளைத் திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.அவர்கள் சென்ற பின்னரே நகைகள் திருடப்பட்டதை உணர்ந்த கடை ஊழியர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.விரைந்து செயற்பட்ட பொலிஸார், நகைகளைத் திருடிய 16 மற்றும் 8 வயது சிறுவர்களையும், அவர்களுடன் இருந்த ஒரு பெரியவரையும் வணிக வளாகத்தின் மற்றொரு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.இதற்கிடையில், அந்தக் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த லொறி ஒன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில், அவர்கள் பயன்படுத்திய அந்த லொறியும் திருடப்பட்ட ஒன்று என்பதும், அதனுள் பிற கடைகளில் இருந்து திருடப்பட்ட மேலும் பல பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் 16 வயது சிறுமி, 17 வயது சிறுவன், 25 வயது பெண் மற்றும் 34 வயது பெண் ஆகிய நால்வர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.அதேவேளை, திருட்டுச் சம்பவத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லாத சிறுவர்களின் தந்தையிடம் 8 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/a6ywnr">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/brv3c5nr5rg2wheebz8dfzfquwgrkrle.png" />]]></description><pubDate>Thu, 09 Jul 2026 15:31:06 GMT</pubDate></item><item><title><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிகழ்ந்த விபத்து]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ws6one]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ws6one]]></guid><description><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தில் இளம்பெண்ணொருவர் பலியான நிலையில், அந்த விபத்து நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Sea-to-Sky Highway என்னும் நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், சிலர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்கள். அதைக் கண்ட பொலிசார் அவர்களை பின்தொடர, பொலிசிடமிருந்து தப்புவதற்காக வேகமாகச் சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.அப்போது கேரவன் ஒன்றின் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோத, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார் அவர்.இந்த துயர விபத்து ஒரு உயிரை பலிவாங்கிவிட்டதுடன் நிற்கவில்லை. விபத்து காரணமாக Sea-to-Sky Highway நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட, மக்கள் இரவை நெடுஞ்சாலையிலேயே செலவிட நேர்ந்துள்ளது. முதியவர்கள், குழந்தைகள், தங்கள் விமானத்தைப் பிடிப்பதற்காக புறப்பட்டவர்கள் என பலதரப்பினரும் சாலை ஓரமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.இதற்கிடையில், சிறுபிள்ளைகளுடன் வந்தவர்கள், இந்த திடீர் விபத்தால் பிள்ளைகளுக்கு உணவில்லாமல் தவிக்க, பொழுதைக் கழிப்பதற்காக கேம்பிங் சென்றவர்கள் சிலர் அவர்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்துகொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.சிலர், சாலையோரமாக தங்கள் கூடாரங்களை விரித்து அமர்ந்துகொள்ள, சிலர் நடை பயில, இளம் ஜோடிகள் தங்கள் துணைகளை மடியில் கிடத்திக்கொள்ள, அதிகாலை 3.00 மணி வாக்கில் நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/ws6one">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/jyz6husc2k5b8ddtgxvqnbhcbvdpqrdh.jpg" />]]></description><pubDate>Tue, 07 Jul 2026 14:26:04 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய நபருக்கு குடும்பம் கொடுத்த அதிர்ச்சி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/hj2haz]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/hj2haz]]></guid><description><![CDATA[<p>ஐந்து ஆண்டுகளுக்கு முன், கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்றுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர். படித்து முடித்தபின், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கனவே சொந்த நாட்டையும் குடும்பத்தையும் மிஸ் பண்ணிய அவர், இந்தியாவுக்கே திரும்பிவிடலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால், தான் கனடாவிலிருக்கும் வரை தான் தன் குடும்பத்தால் நடத்தப்பட்ட விதத்துக்கும், இப்போது இந்தியா வந்தபின் தான் நடத்தப்படும் விதத்துக்கும் பயங்கர வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.நான் கனடாவில் படிக்கும்போது கல்விக்கடன் வாங்கித்தான் படித்தேன். என் கடனையும் நானே அடைத்துக்கொண்டு, வீட்டுக்கும் பணம் அனுப்பினேன். இப்போதும் என் செலவுகளை நான்தான் கவனித்துக்கொள்கிறேன் என்று கூறும் அவர், ஆனால், என் தாய் என்னை நடத்தும் விதம் கூட மாறிவிட்டது என்கிறார்.நீ போதுமான அளவில் முயற்சி செய்யவில்லை, அதனால்தான் உனக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை, நீ கனடா சென்றதே வீண், நீ கனடாவுக்குப் போயிருக்கவே கூடாது, தண்ட செலவு என்றெல்லாம் என் தாயே திட்டுகிறார்.கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறி, சமூக ஊடகம் ஒன்றில் தன் அனுபவத்தைப் பகிர்ந்து ஆலோசனை கோரியுள்ளார் அந்த இளைஞர். அவரது இடுகையைப் படித்த பலரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.... <a href="https://tamilpoonga.com/view-news/hj2haz">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/9slqe7gej8htjfa4avhmyvshnckkwehd.jpg" />]]></description><pubDate>Sun, 05 Jul 2026 15:29:18 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/35ubkc]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/35ubkc]]></guid><description><![CDATA[<p>கனடாவில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற 'தெர்மோஸ்' பிராண்ட் உணவு மற்றும் பானக் கலன்களால் (Flask/Food Jars) நுகர்வோருக்குக் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளதால், சந்தையில் உள்ள 1.2 மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இது குறித்து கனடா பொது சுகாதார அமைப்பு நுகர்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடியன் தெர்மோஸ் புரொடக்ட்ஸ் (Canadian Thermos Products Inc.) நிறுவனத்தின் கீழ், ஜனவரி 2009 முதல் நவம்பர் 2021 வரையான காலப்பகுதியில் கனடாவில் விற்பனை செய்யப்பட்ட பின்வரும் தயாரிப்புகளே இவ்வாறு மீளப் பெறப்படுகின்றன.Stainless King Food Jars: ஜூலை 2023க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட SK3000 மற்றும் SK3020 ஆகிய மாடல் எண்கள் கொண்ட உணவுக் கலன்கள்.Thermos Sportsman Food &amp; Beverage Bottle: 2016ஆம் ஆண்டுடன் உற்பத்தி நிறுத்தப்பட்ட SK3010 என்ற மாடல் எண் கொண்ட பானக் கலன்கள்.இந்தத் தயாரிப்புகளின் மூடிகளில் (Stopper) உட்புற அழுத்தத்தைக் குறைப்பதற்கான (Pressure relief) துளைகள் நடுவில் வடிவமைக்கப்படவில்லை. இதனால், கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை இந்தத் தெர்மோஸ்களில் நீண்ட நேரம் சேமித்து வைத்திருக்கும் போது, உள்ளே அதிகப்படியான வாயு அழுத்தம் (Gas pressure) உருவாகிறது.பின்னர் இதனைத் திறக்கும் போது, அதன் மூடி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி வெளியேறும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக முகம் மற்றும் கண்களில் பலத்த காயம் அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜூன் 24ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, இந்தத் தயாரிப்புகள் வெடித்தது தொடர்பாக 10 புகார்கள் நிறுவனத்திற்குப் பதிவாகியுள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தங்களிடம் உள்ள மேற் குறிப்பிட்ட மாடல் எண்களைக் கொண்ட தெர்மோஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை "உடனடியாக நிறுத்துமாறு" கனடா பொது சுகாதார அமைப்பு நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/35ubkc">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/qgwh2ntsmrda7dslvhfwezdrdvdrgt53.png" />]]></description><pubDate>Wed, 01 Jul 2026 14:29:57 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் அசுர வேகத்தில் பரவும் லைம் நோய்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1yx3ais]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1yx3ais]]></guid><description><![CDATA[<p> கனடாவில் உன்னிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய 'லைம் நோய்' (Lyme disease) பாதிப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.எனினும், தற்போதைய தரவுகளை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.உண்ணிகள் தொடர்பான விழிப்புணர்வு இணையதளமான eTick.ca வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உன்னிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் அதிகரித்துள்ளன.கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 'லைம் நோய்' பாதிப்புகள் பதிவாகியிருந்தன.கனடாவில் அதிகளவில் உன்னிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.இதில் கடந்த வாரம் மட்டுமே 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போது பதிவாகியுள்ள எண்கள் உண்மையான பாதிப்பை விடக் குறைவானதாகவே இருக்க வாய்ப்புள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடமும், ஆரம்பக்கட்ட சுகாதார அதிகாரிகளிடமும் கொண்டு சேர்ப்பதன் மூலமே முறையான நோயறிதலைச் செய்ய முடியும் என தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் காரணமாக உன்னிகள் இடம்பெயர்வதால், 'லைம் நோய்' மட்டுமன்றி அனபிளாஸ்மோசிஸ், பபெசியோசிஸ் மற்றும் போவாசன் வைரஸ் போன்ற அதிகம் அறியப்படாத பிற தொற்றுநோய்களும் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஒண்டாரியோவில் இந்த ஆண்டு இதுவரை 36 அனபிளாஸ்மோசிஸ் பாதிப்புகளும், ஒரு போவாசன் வைரஸ் பாதிப்பும் பதிவாகியுள்ளன. ... <a href="https://tamilpoonga.com/view-news/1yx3ais">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/wa7pn6merfpfwrsv9dpgfgb2p4avniuu.jpg" />]]></description><pubDate>Wed, 01 Jul 2026 13:51:29 GMT</pubDate></item></channel></rss>