<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Latest News RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/public]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/public" rel="self" type="application/rss+xml" /><description>Latest News RSS</description><lastBuildDate>Thu, 04 Jun 2026 15:22:35 GMT</lastBuildDate><item><title><![CDATA[கனடாவில் அதிகரிக்கும் உணவுப் பற்றாக்குறை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/g072fs]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/g072fs]]></guid><description><![CDATA[<p>கனடாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் நடுத்தரக் குடும்பங்கள் கடும் உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கனடாவின் பேரி உணவு வங்கியை நாடும் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக் ஷிப்லி கவலை தெரிவித்துள்ளார்.ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பேரி-ஸ்பிரிங்வாட்டர்-ஓரோ-மெடொன்டே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டக் ஷிப்லி, கனடாவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேரி உணவு வங்கியின் மூலம் மாதத்திற்கு வெறும் 1,000 பேர் மட்டுமே உதவி பெற்று வந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை மாதத்திற்கு 8,000 ஆக உயர்ந்துள்ளது என்று டக் ஷிப்லி சுட்டிக்காட்டினார். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்டோர் இந்த உணவு வங்கியை நாடியுள்ளனர்.இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்தார். மேலும், முதன்முறையாக உணவு வங்கியின் உதவியை நாடி வந்த புதியவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து, ஒரே மாதத்தில் 377 புதிய குடும்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்."லிபரல் கட்சியின் கடந்த பத்தாண்டுகால பொருளாதாரக் கொள்கைகளால், கனடா மக்கள் ஜி7 (G7) அமைப்பில் உள்ள மற்ற நாடுகளை விடப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிவிட்டனர்.தற்போது ஜி7 நாடுகளில் மந்தநிலையை எதிர்கொள்ளும் ஒரே பொருளாதாரமாக கனடா மாறியுள்ளது" என்று டக் ஷிப்லி ஆளும் அரசை சாடினார்.கனடா முழுவதும் நிலவி வரும் கடுமையான வீட்டு வாடகை உயர்வு, குடும்பக் கடன்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே மக்கள் தங்களின் அன்றாட உணவிற்குக் கூட உணவு வங்கிகளை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/g072fs">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/zdcq9cstqlbtcfnjh3clbxcwhhvkytrp.png" />]]></description><pubDate>Thu, 04 Jun 2026 15:22:35 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் வீடு கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள் ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1pvkamg]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1pvkamg]]></guid><description><![CDATA[<p>அமெரிக்காவில் நிலவி வரும் அரசியல், பொருளாதார மற்றும் உலகளாவிய பாதுகாப்புப் பதற்றங்கள் காரணமாக, தஞ்சம் கோரும் நோக்கில் கனடாவில் சொத்துக்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.கனடாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ராயல் லெபேஜ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முற்பாதியில் அமெரிக்காவில் இருந்து தங்களது இணையதளத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறிய முக்கியப் பரபரப்புச் சம்பவங்களின் போது, கனடாவில் வீடுகளைத் தேடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மும்மடங்கு வரை அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.மினியாபோலிஸ் நகரில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரியால் 37 வயதான ரெனே குட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி 11 முதல் 17 வரையிலான வாரத்தில் ராயல் லெபேஜ் இணையதளத்திற்கு அமெரிக்காவில் இருந்து வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 78 வீதம் உயர்ந்தது.ஈரான் உடனான போர் பதற்றம் மற்றும் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 5 முதல் 11 வரையிலான வாரத்தில் இணையதளப் போக்குவரத்து முந்தைய வாரத்தை விட 125 வீதம் அதிகரித்தது.இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 233 வீதம் கூடுதலாகும். "2026 இன் தொடக்க மாதங்கள் தொடர்ச்சியான அதிரடிச் செய்திகள், போர் அச்சம், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் நிறைந்துள்ளன," என்று ராயல் லெபேஜ் நிறுவனத்தின் தலைவர் ஃபில் சோப்பர் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற கொந்தளிப்பான காலங்களில், அமெரிக்கப் பொதுவாழ்வின் பதற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள அமெரிக்கர்கள் கனடாவிற்கு இடம்பெயர்வது பற்றி சிந்திப்பது வழக்கமாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ... <a href="https://tamilpoonga.com/view-news/1pvkamg">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/qplujzsvvukawtyftykaqbrigg8sbvas.png" />]]></description><pubDate>Wed, 03 Jun 2026 15:29:58 GMT</pubDate></item><item><title><![CDATA[ கனடாவில் ஏரியில் விழுந்து மாயமான இருவர் சடல்ங்களாக மீட்பு ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1jt1otm]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1jt1otm]]></guid><description><![CDATA[<p>கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஷ் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் விழுந்து மாயமான இரண்டு பேடில்போர்டர்களை தேடும் பணி பல நாட்களுக்குப் பிறகு சோகத்தில் முடிவடைந்துள்ளது.கடந்த சனிக்கிழமை பிற்பகல், மரின் மாகாண பூங்காவில் உள்ள பிரவுனிங் ஏரியில் பயணித்த இருவரும் திடீரென நீரில் விழுந்து மூழ்கியுள்ளனர். அவர்கள் இருவரும் நீண்ட நேரமாகியும் மேலே வராததைக் கண்ட அங்கிருந்த சாட்சி ஒருவர் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, மரின் மாகாண பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டு வான்வழியாகவும், நீர்நிலைகளிலும் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.இந்த கூட்டுத் தேடுதல் பணியில் ஸ்குவாமிஷ் தேடல் மற்றும் மீட்புக் குழு, பாதுகாப்பு அதிகாரி சேவை, தீயணைப்புத் துறை, அவசர சுகாதார சேவைகள் மற்றும் கனடிய பொலிஸ் ஹெலிகாப்டர் குழு உள்ளிட்ட பல அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டன.தொடர்ந்து பல நாட்களாக நீடித்த இந்த தீவிர தேடுதலின் முடிவில், செவ்வாய்க்கிழமை அன்று ஆர்.சி.எம்.பி.யின் நீருக்கடியிலான சிறப்பு மீட்புக் குழுவினர் ஏரியின் ஆழமான பகுதியில் இருந்து மாயமான இரு பேடில்போர்டர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர்.இக்கட்டான இந்த சூழலில், தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்து சிறப்புப் பிரிவுகள் மற்றும் கூட்டாளி அமைப்புகளுக்கு ஸ்குவாமிஷ் ஆர்.சி.எம்.பி.யின் அதிகாரி சாஷா பேங்க்ஸ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். ... <a href="https://tamilpoonga.com/view-news/1jt1otm">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/dmsc2zgnnfrqt2jtx9n8iz7htujfssuw.png" />]]></description><pubDate>Wed, 03 Jun 2026 15:25:43 GMT</pubDate></item><item><title><![CDATA[ இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கனடா சாதனை ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/qrcd1o]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/qrcd1o]]></guid><description><![CDATA[<p>கனடா, இயற்கை எரிவாயு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.இந்த மார்ச் மாதத்தில் 775.12 மில்லியன் ஜிகா ஜூல்கள் அளவுக்கு கனடா எரிசக்தி உற்பத்தி செய்துள்ளது.இது, 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது 5.6 சதவிகிதம் அதிகமாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13.8 சதவிகிதமும், ஆல்பர்ட்டாவில் 1.2 சதவிகிதமும் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இப்போது கனடா, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிக அளவில் எரிவாயு ஏற்றுமதி செய்துவருகிறது.கனடா ஏற்றுமதி செய்யும் இயற்கை எரிவாயுவின் அளவு 7.4 சதவிகிதம் உயர்ந்து 339. 7 மில்லியன் ஜிகா ஜூல்களாக ஆகியுள்ளது.கனடாவிலிருந்து அதிகம் எரிவாயு வாங்கும் நாடாக திகழும் அமெரிக்கா, மார்ச் மாதத்தில் மட்டும் 282.1 மில்லியன் ஜிகா ஜூல்கள் எரிவாயு வாங்கியுள்ளது. என்றாலும், 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது, இது 10.8 சதவிகிதம் குறைவு ஆகும்.  அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளுக்கு கனடா ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, சாதனை அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ... <a href="https://tamilpoonga.com/view-news/qrcd1o">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/pcp7gjlcjygdngr87wax9lkfkks5ni5e.jpg" />]]></description><pubDate>Tue, 02 Jun 2026 15:21:17 GMT</pubDate></item><item><title><![CDATA[டொரண்டோ ரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச்சூடு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/3npfyl]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/3npfyl]]></guid><description><![CDATA[<p>டொரண்டோவின் ரெக்ஸ்டேல் (Rexdale) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொரண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், குவீன்ஸ் பிளேட் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் பெலவூர்ட் சந்திப்புப் பகுதிக்கு அவசர உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அங்கு சோதனையிட்ட அதிகாரிகள், துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்த கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின் முழு விபரங்கள் வெளியிடப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/hpedzfvvzdqwyck7a7susnmnxqyxgage.png" />]]></description><pubDate>Mon, 01 Jun 2026 16:03:25 GMT</pubDate></item><item><title><![CDATA[உலக தரவரிசையில் சரிவை சந்திக்கும் கனடிய பல்கலைக்கழகங்கள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1q9hb5n]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1q9hb5n]]></guid><description><![CDATA[<p>சர்வதேச அளவில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில், கனடாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.ஏனைய நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நிதி மற்றும் கடுமையான போட்டி இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.'Center for World University Rankings' (CWUR) வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில், தரப்படுத்தப்பட்ட கனடாவின் 38 பல்கலைக்கழகங்களில் 37 நிறுவனங்கள் கடந்த ஆண்டை விடக் கீழே இறங்கியுள்ளன.ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே தனது முந்தைய இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.டொரண்டோ பல்கலைக்கழகம் உலகளவில் 23-வது இடத்தைப் பிடித்து, கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. இது மட்டுமே கடந்த ஆண்டு நிலையைத் தக்கவைத்துள்ளது. மெக்கில் பல்கலைக்கழகம் ஒரு இடம் சரிந்து 28-வது இடத்தைப் பிடித்துள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் 48-வது இடத்திலிருந்து 49-வது இடத்திற்குச் சரிந்துள்ளது.அல்பெர்ட்டா பல்கலைக்கழகம் உலகளவில் 82-வது இடத்தைப் பெற்றுள்ளது. மாண்ட்ரியல் பல்கலைக்கழகம் 126-வது இடத்தைப் பிடித்துள்ளது."கனடிய பல்கலைக்கழகங்களின் இந்த வீழ்ச்சி, பல வருடங்களாகப் போதிய நிதி வழங்கப்படாததையும், அறிவியல் மற்றும் கல்வியை பொது நலனுக்கானதாகக் கருதுவதில் ஏற்பட்டுள்ள குறைபாட்டையுமே காட்டுகிறது," என்று CWUR அமைப்பின் தலைவர் டாக்டர் நதிம் மஹாசென் (Dr. Nadim Mahassen) தெரிவித்துள்ளார்.இது கல்வித்துறை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, ஒரு நாட்டின் தேசியப் பிரச்சனை. ஏனெனில் உயர்கல்வித் தரம் குறைவது நாட்டின் அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் நீண்டகால எதிர்காலத்தைப் பாதிக்கும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.இப்பட்டியலில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து 15-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் 4 மற்றும் 5-வது இடங்களைப் பெற்றுள்ளன. ... <a href="https://tamilpoonga.com/view-news/1q9hb5n">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/wdyxujstieu7dv5j6uzahb9l99mba9wh.png" />]]></description><pubDate>Mon, 01 Jun 2026 16:00:17 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/gccqcb]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/gccqcb]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நெடுஞ்சாலை 15 இல் இடம்பெற்ற மூன்று வாகன விபத்தில், 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளனர்.காவல்துறையின் அறிக்கையின்படி, லோம்பார்டி பகுதியில் உள்ள கவுண்டி சாலை 1 மற்றும் கவுண்டி சாலை 5 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் மாலை 5 மணியளவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான கார்களில் ஒன்றை ஓட்டிச் சென்ற 34 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது காரில் பயணித்த சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், 'ஆர்ஞ்ச்' அவசர வான்வழி ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.விபத்தின் போது அந்த ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. எனினும், அதில் பயணித்த ஓட்டுநரும் மற்றொரு நபரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் சிக்கிய மூன்றாவது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார். அவர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த பயங்கர விபத்தை அடுத்து, அப்பகுதியூடான நெடுஞ்சாலை பல மணி நேரம் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. இவ்விபத்து குறித்து ஒண்டாரியோ மாகாண காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான தகவல்களோ அல்லது விபத்து நடந்த இடத்தின் வீடியோ காட்சிகளோ யாரிடமாவது இருந்தால், உடனடியாக லீட்ஸ் கவுண்டி காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/gccqcb">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/eutmuc3bslcmxcmhnwq9sucxcinxegcf.png" />]]></description><pubDate>Sun, 31 May 2026 15:23:51 GMT</pubDate></item><item><title><![CDATA[குதிரை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலும் புதிய குற்றச்சாட்டுகள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/12gfnm6]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/12gfnm6]]></guid><description><![CDATA[<p> குதிரை திருட்டு வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் மீது, குதிரை வளர்ப்பு மற்றும் குதிரைப் பந்தயத் துறையுடன் தொடர்புடைய மற்றொரு விசாரணையின் அடிப்படையில் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.ஹால்டன் பிராந்திய காவல்துறையின் தகவலின்படி, ஒண்டாரியோ மாநிலத்தின் மில்டன் பகுதியில் ஒரு குதிரையை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.அதன் பின்னர், மே மாதத்தில் நிபந்தனை பிணையில் இருந்தபோது, அதே சந்தேக நபர் பொய்யான அடையாளத்தை பயன்படுத்தி ஒரு நபரை சந்தித்து, அவரிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெற முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.காவல்துறையினர் கூறுகையில், சந்தேக நபர் ஹெய்லிவுட் என்ற போலிப் பெயரை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களைப் பெற முயன்றுள்ளார். மேலும், அந்த நபருடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களையும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த வகையான தகவல்களைப் பெற முயன்றார் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்த பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.ஒண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த வாட்டர்டவுனைச் சேர்ந்த 30 வயதுடைய கார்லி ட்ரிப் மீது தற்போது, குற்றவியல் தொந்தரவு, நீதிமன்ற விடுதலை நிபந்தனைகளை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதற்கு முன்னர், ஏப்ரல் மாதத்தில் அவர் மீது, 5,000 கனடிய டொலருக்கு மேற்பட்ட திருட்டு, மோசடி மூலம் கால்நடைகளை அபகரித்தல், விலங்குகளை காயப்படுத்துதல் அல்லது ஆபத்தில் ஆழ்த்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த இரண்டு விசாரணைகளும் குதிரைத் தொழில்துறையுடன் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கனடாவின் டொரண்டோ பெரும்பாக பகுதி (GTA) முழுவதும் இதேபோன்ற பல சம்பவங்களில் இந்த பெண் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ... <a href="https://tamilpoonga.com/view-news/12gfnm6">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/hp5yhdxy2e7rzyrxtdu3i7uceb56ijdc.png" />]]></description><pubDate>Sat, 30 May 2026 14:37:56 GMT</pubDate></item><item><title><![CDATA[இணைய விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/ov8i0b]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/ov8i0b]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த லூயிஸ் ரென்விக் என்ற பெண், தனது 4 ஆண்டுகள் பழமையான சமையல் அடுப்பு பழுதடைந்ததால் சந்தித்த ஏமாற்றத்தை விபரித்துள்ளார்.இந்த மாத தொடக்கத்தில் லூயிஸின் அடுப்பு வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதையடுத்து, அவர் கூகுளில் தேடியபோது, முதலில் வந்த 'தி ஏ டீம் அப்ளையன்ஸ் ரிப்பேர்' என்ற உள்ளூர் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.அங்கிருந்து வந்த தொழில்நுட்ப வல்லுநர், அடுப்பின் 'டெம்பரேச்சர் சென்சார்' பழுதாகிவிட்டதாகக் கூறி, அதை மாற்றுவதற்கு 798 கனேடிய டொலர் கட்டணமாக வாங்கியுள்ளார்.அவர் வீட்டை விட்டு கிளம்பும் முன்பே, அடுப்பில் பழுதைக் காட்டும் 'எரர் சிக்னல்' (Error sign) அப்படியே இருப்பதை கவனித்தேன். 'சற்று நில்லுங்கள், இது வேலை செய்யவில்லை' என்று கூறினேன். ஆன் செய்து பார்த்தபோது அவர் வருவதற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் அடுப்பு சென்சாரை மாற்றியும் அடுப்பு சரியாகாததால், அந்த ஊழியர் அடுத்து "அடுப்பின் மெயின் போர்டு (Main Board) தான் கெட்டுப்போயுள்ளது, அதை மாற்ற 690 டாலர் ஆகும்" என்று கூறியுள்ளார்.நிறுவனம் இதற்கு 10% தள்ளுபடி தருவதாகக் கூறினாலும், வரி மற்றும் உழைப்புக் கட்டணத்தையும் (Labour cost) சேர்த்தால், அவர் மேலும் 700 முதல் 800 டாலர் வரை கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது, ஏற்கனவே கொடுத்த 800 டாலரோடு சேர்த்தால் மொத்தம் 1,600 டாலருக்கும் மேல் செலவாகும்.ஆனால், லூயிஸ் அந்த அடுப்பை வாங்கிய புதிய விலையே $1,000 டாலர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் ஏற்கனவே கொடுத்த 800 டாலருடன், கூடுதலாக இன்னும் 700 அல்லது $800 டாலர் தர ஒப்புக்கொண்டால் மட்டுமே மீண்டும் வர முடியும் என்று அவர்கள் கூறிவிட்டனர்.இது எனக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல" என்று லூயிஸ் கோபத்துடன் தெரிவித்தார். அந்த நிறுவனம் கொடுத்த ரசீதில் மார்க்கம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முகவரி இருந்தது. ஆனால் நேரில் சென்று விசாரித்தபோது, அந்த நிறுவனம் 5 மாதங்களுக்கு முன்பே அங்கிருந்து காலி செய்துவிட்டதாகப் பாதுகாவலர் தெரிவித்தார்.நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்குப் பதில் இல்லை; தொலைபேசியில் அழைத்தபோது இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.இந்தச் சம்பவத்தை முன்வைத்து நிபுணர்கள் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்: கூகுள் போன்ற தேடுபொறிகளில் சில நிறுவனங்கள் பணம் கொடுத்து தங... <a href="https://tamilpoonga.com/view-news/ov8i0b">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/aevinchaywxybahtgprisuwzu3f5zjqf.png" />]]></description><pubDate>Thu, 28 May 2026 15:38:24 GMT</pubDate></item><item><title><![CDATA[பிரான்ஸில் 11 வயது சிறுவன் கொடூர கொலை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1xfra1b]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1xfra1b]]></guid><description><![CDATA[<p> பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரென்னெஸ் (Rennes) நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 11 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விலெய்ன் (Vilaine) ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட அச்சிறுவனின் கழுத்தில் ஈரமான குளியல் துண்டு (Wet bath towel) மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர், சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய பிரெஞ்சு போலீசார், திங்கட்கிழமை அன்று 16 வயது சிறுவன் ஒருவனை அவனது வீட்டிலேயே வைத்து அதிரடியாக கைது செய்தனர்.இதற்கிடையில், இந்த கொலையுடன் தொடர்புடைய 15 வயது சிறுமி ஒருத்தி தானாகவே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தாள். சிறுவன் உயிரிழந்த அன்று மதிய வேளையில், அவனுடன் இந்த இரு பதின்ம வயதுடையவர்களும் (Teenagers) ஒன்றாக காணப்பட்டதாக அரசு வழக்கறிஞர் பிரடெரிக் டீலெட் (Frederic Teillet) உறுதிப்படுத்தியுள்ளார்.தற்போது அவர்கள் இருவரும் “மைனர் சிறுவனைக் கொலை செய்தல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இக்கொடூரக் கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் மற்றும் சூழ்நிலைகள் என்ன என்பது இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.மேலும் ஆதாரங்களை திரட்டும் நோக்கில், சம்பவ இடமான விலெய்ன் ஆற்றில் போலீஸ் முக்குளிப்பாளர்கள் (Divers) தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைதியான நகரப் பகுதியில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... <a href="https://tamilpoonga.com/view-news/1xfra1b">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/tg2rnvncfwztrp8ucugvjtd65tnkxren.jpg" />]]></description><pubDate>Wed, 27 May 2026 10:06:50 GMT</pubDate></item></channel></rss>