<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>News in "" RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/news/rss/category]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/news/rss/category" rel="self" type="application/rss+xml" /><description>News in "" RSS</description><lastBuildDate>Tue, 14 Apr 2026 15:43:20 GMT</lastBuildDate><item><title><![CDATA[கனடா இடைத்தேர்தல் - மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/16e1ij2]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/16e1ij2]]></guid><description><![CDATA[<p>நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன.கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன.நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். ஆக, ஆளும் லிபரல் கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும். அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், மார்க் கார்னியின் லிபரல் கட்சி, தேர்தல் நடைபெற்ற மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றிருந்த நிலையில், தற்போது மூன்று தொகுதிகளிலுமே வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது மார்க் கார்னியின் லிபரல் கட்சி. கனடா அரசியல் வரலாற்றில் 24 பிரதமர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 13 பேருக்குத்தான் பெரும்பான்மை கிடைத்திருந்த நிலையில், தற்போது மார்க் கார்னி கனடாவின் பெரும்பான்மை பெற்ற 14ஆவது பிரதமராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ... <a href="https://tamilpoonga.com/view-news/16e1ij2">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/vndwsmes5s9ukggggc7gsepsezpyi5se.jpg" />]]></description><pubDate>Tue, 14 Apr 2026 15:43:20 GMT</pubDate></item><item><title><![CDATA[ ஸ்காப்ரோவில் சில வாகனங்கள் தீக்கிரை ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/cnj9e4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/cnj9e4]]></guid><description><![CDATA[<p>ஸ்கார்பாரோ பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.கென்னடி சாலை மற்றும் எல்ஸ்மியர் சாலை சந்திப்புப் பகுதியில் பல வாகனங்கள் தீப்பற்றி எரிவதாகக் காலை 5:05 மணியளவில் டொராண்டோ காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ தீயணைப்புப் படையினர், அங்குள்ள கார் விற்பனை நிலையம் (Car Dealership) ஒன்றில் நான்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டறிந்து, விரைவாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு எவரும் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு தீயணைப்பு வாகனம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, விசாரணையின் நிமித்தமாக கென்னடி சாலையின் வடக்கு நோக்கிய பாதைகள் ஷ்ரோப்ஷையர் டிரைவ் பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ... <a href="https://tamilpoonga.com/view-news/cnj9e4">Read more</a></p>]]></description><pubDate>Sun, 12 Apr 2026 15:24:13 GMT</pubDate></item><item><title><![CDATA[லம்ப்டன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/3kvh0v]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/3kvh0v]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, அதிகாலை 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் மூன்று பேரை மீட்டுளள்னர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதான டேன் நிஸ்பெட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உள்ளூர் ஹாக்கி விளையாட்டுக் குழுக்களில் நன்கு அறியப்பட்டவரான இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏனைய இருவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, லம்ப்டன் கல்லூரியின் பிரதான வளாகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்துப் பயிற்சி மையங்களும் இன்றயை தினம் மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.சர்னியா பொலிஸார் இச்சம்பவத்தை ஒரு திட்டமிட்ட கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் அல்லது காயமடைந்தவர்கள் அக்கல்லூரியின் மாணவர்களா? என்பதை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ... <a href="https://tamilpoonga.com/view-news/3kvh0v">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/xmcmk3kqlcksy5yvpsd4qgqjfhixj7k6.png" />]]></description><pubDate>Sat, 11 Apr 2026 15:18:37 GMT</pubDate></item><item><title><![CDATA[நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட மருத்துவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/18jysbb]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/18jysbb]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள பெண் நோயாளிகளிடம் மருத்துவ ஒழுக்கவிதிகளை மீறி நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மகப்பேறு மருத்துவர் ராபர்டோ பெர்னாண்டஸ் என்பவருக்கு மூன்று மாத கால பணி இடைநீக்கம் விதித்து கியூபெக் மருத்துவர் சங்கம் (Quebec’s College of Physicians) உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட 80 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அறிக்கையில், டாக்டர் பெர்னாண்டஸ் தனது நோயாளிகளைத் தொடர்ச்சியாக அவமதித்ததாகவும், அவர்களின் வலியைப் பொருட்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் எட்டுப் பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த சாட்சியத்தில், கருப்பையக சாதனத்தை (IUD) மாற்றச் சென்றபோது, மருத்துவர் எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி மிகவும் கொடூரமான முறையில் நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்."வலி தாங்க முடியாமல் நான் அலறியபோதும், கத்துவதில் பயனில்லை என்று கூறி அவர் தனது பணியைத் தொடர்ந்தார்; சிகிச்சைக்குப் பின் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றார்" என்று அந்தப் பெண் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.இந்த சிகிச்சைக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குக் கடுமையான கருப்பைத் தொற்று ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மற்றொரு நோயாளி, மருத்துவர் தன்னிடம் மிகவும் ஆக்ரோஷமான தொனியில் பேசியதாகவும், இது போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு தன்னிடம் வராமல் பொது மருத்துவரைப் பார்க்குமாறு கூறி அவமதித்ததாகவும் புகாரளித்துள்ளார்.டாக்டர் பெர்னாண்டஸ் மீண்டும் இது போன்ற தவறுகளைச் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கருதினாலும், அவர் இடைநீக்க காலத்திற்குப் பிறகு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் நோயாளிகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவும், தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும் இந்த மாதம் முதல் ஆறு மாத கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/18jysbb">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/aakpy6mpstc7qb4bnz79mkc7f7se8dkd.png" />]]></description><pubDate>Fri, 10 Apr 2026 15:14:56 GMT</pubDate></item><item><title><![CDATA[மசூத் அசார் திடீர் மரணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/52y35d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/52y35d]]></guid><description><![CDATA[<p>ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முகமது தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், இறப்பிற்கான காரணம் குறித்து மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பகவல்பூரில் இவரது இறுதி சடங்குகள் நடைபெற்ற நிலையில், இது திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது உடல்நலக் குறைவா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், புல்வாமா மற்றும் உரி தாக்குதல்களில் தொடர்புடைய இந்த அமைப்புக்கு தாஹிர் அன்வாரின் மறைவு பெரும் பின்னடைவாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொருவராக கொல்லப்பட்டு வருவது, அந்நாட்டிலுள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் சிதைந்து வருவதையே காட்டுகிறது. அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தளபதிகளின் தொடர் இழப்புகள், அந்த அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.... <a href="https://tamilpoonga.com/view-news/52y35d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yyl9wwsrycgkc4fnvxq3rbgrp7gitqsm.jpg" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 14:58:31 GMT</pubDate></item><item><title><![CDATA[எங்களை தாக்கினால் கைகளை வெட்டுவோம்! - இஸ்ரேலை எச்சரிக்கும் லெபனான்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/waiufq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/waiufq]]></guid><description><![CDATA[<p>லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து கடந்த பல நாட்களாகவே இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தும் இந்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.சமீபத்தில் தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.லெபனனில் குடியிருப்பு பகுதிகள், வணிக கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பல தங்களின் மீது தாக்குதல் நடத்தி சிலரை கொன்றதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது.இந்நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் தெற்கு லெமனானின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள லெபனான் அதிபர் ஜோசப், ‘அமைதியை குலைப்பவர்களின் கை வெட்டப்படும்’ என என எச்சரித்திருக்கிறார்.... <a href="https://tamilpoonga.com/view-news/waiufq">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yhy6lff9qsmbik2eelkqd7p8gwbagbpi.jpg" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 14:40:51 GMT</pubDate></item><item><title><![CDATA[சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை - கனடாவில் விவாதம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/c7yud8]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/c7yud8]]></guid><description><![CDATA[<p>கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோ தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அண்மையில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு முழுமையான சமூக ஊடகத் தடை அமல்படுத்தியதை குறிப்பிட்டு, கனடாவும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என அவர் சமூக ஊடகமொன்றில் பதிவிட்டுள்ளார்.அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 4,000-க்கும் மேற்பட்டவர்களில் சுமார் 75% பேர், ஆஸ்திரேலியாவில் அமல்படுத்தப்பட்டதுபோன்ற தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த தடை, டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியுப் மற்றும் ஸ்னெப்சாட், போன்ற தளங்களில் 16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகள் உருவாக்குவதைத் தடுக்கிறது.கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். எனினும், இது குறித்து விரிவான விவாதம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.மேலும், ஆன்லைன் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் அவசியம் என்றும், சமூக ஊடகங்களுக்கான “வயது வரம்பு” குறித்த விவாதமும் அதில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ... <a href="https://tamilpoonga.com/view-news/c7yud8">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/fu4ftuqdrxeerfxbvvg3rwsfxtnwzwav.png" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 10:57:20 GMT</pubDate></item><item><title><![CDATA[ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கு கனடாவில் பிரவேசிக்க தடை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1ir3msq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1ir3msq]]></guid><description><![CDATA[<p>ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரெஞ்சு-பலஸ்தீனிய உறுப்பினரான ரிமா ஹஸன் மான்ட்ரியல் மாநாடுகளில் பங்கேற்க இருந்த நிலையில் கனடாவிற்குள் பிரவேசிகக் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதை “கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்ட மின்அனுமதி (electronic travel authorization) பின்னர் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டதாக அவரது கட்சியான லா பிரான்ஸ் இன்ஸோமிஸ் தெரிவித்துள்ளது.கனடிய அதிகாரிகள், முன்னதாக விசா மறுப்பு அல்லது நுழைவு மறுப்பு, மேலும் குற்றச்சாட்டு அல்லது கைது தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த மறுப்புக்கான உண்மையான காரணம், இஸ்ரேல் நுழைவு மறுப்பு மற்றும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு குறித்து அவர் எடுத்துள்ள வலுவான கருத்துகளே என அவரது கட்சி கூறுகிறது.இந்த வாரம் மான்ட்ரியலில் நடைபெறவிருந்த “பலஸ்தீன ஆதரவு குரல்கள் அடக்கப்படுவது” மற்றும் “வலதுசாரி அரசியல் எழுச்சி” தொடர்பான இரண்டு மாநாடுகளில், ரிமா ஹசன் ஆன்லைன் வழியாக பங்கேற்பதாக அறிவித்துள்ளார். ... <a href="https://tamilpoonga.com/view-news/1ir3msq">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/hndxavdtudmekvjmhnre8w8iwljw5yiy.png" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 10:39:11 GMT</pubDate></item><item><title><![CDATA[தபால் மூலம் போதைப் பொருள் கடத்தியவர் கைது]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/1m1t8l1]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/1m1t8l1]]></guid><description><![CDATA[<p>கனடாவின் ஹால்டன் பகுதியில், தபால் மூலம் கோக்கெயின் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெப்ரவரி மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புர்லிங்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, 42 வயதான ட்ரவர் ஹேர்ட்மேன் கைது செய்யப்பட்டார்.13 கிராம் கோக்கெயின், அஞ்சல் அனுப்புதல் தொடர்பான ஆதாரங்கள், குறுக்கு வில் (crossbow), போலி வாகன எண் பலகைகள், சுமார் 70,000 சட்டவிரோத சிகரெட்டுகள், திருடப்பட்ட பிக்கப் வாகனம் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.4 போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், 2 குறுக்கு வில் வைத்திருத்தல் குற்றங்கள், 2 தடை செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டிய குற்றங்கள் மற்றும் வாகன அடையாள எண் (VIN) மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ... <a href="https://tamilpoonga.com/view-news/1m1t8l1">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/zp9c6p4xmte6n3wbxxzadkrdud3lgebu.png" />]]></description><pubDate>Tue, 31 Mar 2026 10:26:01 GMT</pubDate></item><item><title><![CDATA[கனடாவில் மர்மப்பொருள் மீட்பு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-news/5uulur]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-news/5uulur]]></guid><description><![CDATA[<p>கனடாவின் மிட்லாந்து பகுதியில் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்திற்கிடமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் போலீசார் அவசர நடவடிக்கை எடுத்தனர்.இரவு சுமார் 11 மணியளவில் டொனால்டா வீதி – ஜான்சன் வீதி அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு இளைஞர்கள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பழைய இராணுவ ஆயுதத்தைப் போன்ற ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளனர். அதை அருகிலுள்ள வீட்டுக்குள் கொண்டு சென்ற பின்னரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வீட்டிலிருந்தவர்களையும் அருகிலுள்ள குடியிருப்பாளர்களையும் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.மேலும், அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, OPP வெடிகுண்டு அகற்றும் பிரிவும் (Explosives Disposal Unit) அழைக்கப்பட்டது.நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு, அந்த பொருள் உண்மையில் வெடிகுண்டு அல்ல; இராணுவ பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட சாதனம் என்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்த பொருள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்பட்டது.... <a href="https://tamilpoonga.com/view-news/5uulur">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/mz_news_photos_resized/yycyxygaxquubig8kezxnjvxdfhhxfnn.png" />]]></description><pubDate>Mon, 30 Mar 2026 13:59:11 GMT</pubDate></item></channel></rss>